உலகம் முக்கிய செய்திகள்

மெக்சிகோவில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு – சுனாமி எச்சரிக்கை அமுலில்

  • July 17, 2026
  • 0 Comments

மெக்சிகோவின் தெற்கு மாநிலமான சியாபாஸின் (Chiapas) கடற்கரைக்கு அருகில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது 7.4 ரிக்டர் அளவுக்கோளில் பதிவாகியுள்ளதுடன்,  சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவின் புவேர்ட்டோ மடேரோ ( ​Puerto Madero)  நகருக்கு அருகில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 10 கிமீ (6 மைல்கள்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வைத் தொடர்ந்து, நிலநடுக்க மையத்திலிருந்து 300 கிமீ (186 மைல்கள்) தொலைவிற்குள் […]

செய்தி

அமெரிக்க தேர்தல் முறையில் ரஷ்யா தலையீடு – ட்ரம்பின் குற்றச்சாட்டிற்கு பதிலடி!

  • July 17, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் தேர்தல்களில் ரஷ்யா தலையீடு செய்யவில்லை என கிரெம்ளின் தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகையில் உரையாற்றிய ட்ரம்ப், அமெரிக்க தேர்தல் அமைப்பில் உள்ள பலவீனங்கள் குறித்து கருத்து வெளியிடும்போது ரஷ்யாவின் தலையீடு தொடர்பில் பேசியிருந்தார். அமெரிக்கத் தேர்தல் அமைப்பு வெளிநாட்டுத் தலையீடுகளுக்கு எளிதில் இலக்காகக்கூடியதாகவே உள்ளது என்று  குறிப்பிட்ட ட்ரம்ப், புதிதாக வெளியிடப்பட்ட உளவுத் தகவல்கள் தேர்தல் பாதுகாப்பில் உள்ள பலவீனங்களை அம்பலப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் ட்ரம்பின் இந்த கூற்றை கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், மறுத்துள்ளார். […]

ஐரோப்பா

தொழிலாளர் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார் பரன்ஹாம்

  • July 17, 2026
  • 0 Comments

ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham)  இன்று தொழிலாளர் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன்மூலம்  வரும் திங்கட்கிழமை அவர் உத்தியோகப்பூர்வமாக பிரித்தானியாவின் 59 ஆவது பிரதமராக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் நடைபெற்ற ஒரு சிறப்பு கட்சி மாநாட்டில், தொழிலாளர் கட்சியின் தேசிய செயற்குழு (NEC) தலைவர் ஷபானா மஹ்மூத் இந்த தவலை வெளியிட்டுள்ளார். வரும் திங்கட்கிழமை,   பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மன்னரிடம் தனது ராஜினாமா கடிதத்தை  முறைப்படி சமர்ப்பித்த பிறகு, புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக பர்ன்ஹாம் மூன்றாம் […]

FIFA உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிகளில் அடைந்த அதிர்ச்சிகரமான தோல்விகளிலிருந்து மீண்டு, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் சனிக்கிழமை நடைபெறவுள்ள மூன்றாவது இடத்திற்கான போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. செய்தி விளையாட்டு

3ஆம் இடம் யாருக்கு? பிரான்ஸ் – இங்கிலாந்து மோதும் ‘கௌரவப் போர்’

  • July 17, 2026
  • 0 Comments

FIFA உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிகளில் அடைந்த அதிர்ச்சிகரமான தோல்விகளிலிருந்து மீண்டு, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் சனிக்கிழமை நடைபெறவுள்ள மூன்றாவது இடத்திற்கான போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறும் பிரான்ஸ் அணியின் கனவு, கடந்த செவ்வாய்க்கிழமை ஸ்பெயினுக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கணக்கில் அடைந்த தோல்வியுடன் முடிவுக்கு வந்தது. மறுபுறம், இங்கிலாந்து அணி அதற்கு அடுத்த நாள் அர்ஜென்டினாவிடம் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றத்தைத் […]

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாகத் தொடரும் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை 13 ஆவது வாரமாகவும் அமைதி வழியில் போராட்டத்தை முன்னெடுத்தனர். இலங்கை செய்தி

‘காணி மீட்பு’- 13 ஆவது வாரமாக தொடரும் அறவழிப் போராட்டம்

  • July 17, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாகத் தொடரும் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை 13 ஆவது வாரமாகவும் அமைதி வழியில் போராட்டத்தை முன்னெடுத்தனர். வலிகாமம் வடக்கு, பலாலி மற்றும் மயிலிட்டிப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள், கடந்த 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமது சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். யுத்தம் முடிவுக்கு வந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், குறித்த பகுதிகள் இன்னும் உயர் பாதுகாப்பு வலயமாகவே […]

இலங்கை

கிண்ணியா தள வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர நடவடிக்கை

  • July 17, 2026
  • 0 Comments

கிண்ணியா தள வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட செயலகத்தில் (16) வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் அதிக சனத்தொகையைக் கொண்ட கிண்ணியா பிரதேச மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் சுகாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக, கிண்ணியா தள வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் நிபுணர் குழுவின் அறிக்கை கிடைத்ததும் […]

உலகம்

உகாண்டாவில் சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம் – 20 பேர் உயிரிழப்பு

  • July 17, 2026
  • 0 Comments

உகாண்டாவில் கல்விச் சுற்றுலா சென்ற மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில், குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை கப்சோர்வா (Kapchorwa )  மாநிலத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் இயந்திரக் கோளாறு இருந்ததாகவும், இதன்காரணமாக ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் விபத்து தொடர்பான விசாரணை நிறைவடையும்வரை  அனைத்து சுற்றுலாக்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கல்வி அமைச்சர் ஜான் […]

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சிறைக் காவலர்கள், ஜெயிலர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கை செய்தி

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: அதிகாரிகளுடன் ஜனாதிபதி அவசர சந்திப்பு

  • July 17, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சிறைக் காவலர்கள், ஜெயிலர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. தற்போது சிறைச்சாலைக் கட்டமைப்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. மேலும், சிறைச்சாலை […]

ஐரோப்பா

காட்டுத்தீ அபாயம் – நீராவி ரயில்களை இரத்து செய்தது பிரித்தானியா

  • July 17, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் நீண்டகாலமாக இயங்கிவந்த நீராவி ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. குறித்த ரயில்கள் காட்டுத்தீயை ஏற்படுத்தும் என்ற அச்சத்தின் காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாரி பாட்டர் ரயில் என்று அழைக்கப்படும் வெஸ்ட் கோஸ்ட் ரயில்வேயின் ரயில் ஒன்று காட்டுத்தீயை ஏற்படுத்தியதாக நம்பப்படுகின்ற நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் இந்த ஆண்டு 342 காட்டுத்தீ சம்பவங்களுக்குப் பதிலளித்துள்ளன. மேலும், இங்கிலாந்தில் தீவிர வானிலை நிகழ்வுகள் புதிய […]

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று முன்னெடுக்கப்பட்ட 35 வது நாள் அகழ்வுப் பணியின் போது, 11 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இலங்கை செய்தி

செம்மணியில் மேலும் 11 எலும்புக் கூடுகள் அடையாளம்

  • July 17, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று முன்னெடுக்கப்பட்ட 35 வது நாள் அகழ்வுப் பணியின் போது, 11 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதையடுத்து இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கை 431 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 7 மனித எலும்புக்கூடுகள் துப்புரவு செய்யப்பட்டு மீட்கப்பட்டன. இதன்படி, இதுவரை 423 எலும்புக் கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேநேரம் சேதமடைந்த மோதிரம் ஒன்றும் விரல் எலும்புடனான […]