உலகம்

கனடாவின் காட்டுத்தீயால் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பாதிப்பு – வரி விதிப்பதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்

  • July 18, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் பெரும் பகுதிகளை மூடியுள்ள காட்டுத்தீப் புகைக்கு கனடாவே காரணம் என்று குற்றம் சாட்டிய ட்ரம்ப் அந்த நாட்டிற்கு கூடுதல் வரிகளை விதிப்பதாக அறிவித்துள்ளார். இது தொடர்பில் தனது ட்ரூத் சோசியல் மீடியாவில் கருத்து வெளியிட்டுள்ள அவர், வன மேலாண்மையில் கனடா “வேண்டுமென்றே அலட்சியம்” செய்வதாகக் குற்றம் சாட்டினார். மேலும், அந்தப் புகை “அசுத்தமான, மாசடைந்த மற்றும் ஆரோக்கியமற்ற காற்றை” ஏற்படுத்தி, அமெரிக்காவிற்கு பில்லியன் கணக்கான டொலர் இழப்பை ஏற்படுத்தியதாகவும் கூறினார். கனடாவில் தற்போது எரிந்துகொண்டிருக்கும் 900-க்கும் […]

இலங்கை

கடந்த 24 மணிநேரத்தில் மூவர் மரணம் – டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த போராடும் அரசு

  • July 18, 2026
  • 0 Comments

நாட்டில் டெங்கு தொற்றால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் குறைந்தது 03 பேர் டெங்கு தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து டெங்குவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு (NDCU) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, இந்த ஆண்டு இதுவரை பதிவான மொத்த டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை 74,478 ஆக உயர்ந்துள்ளது. ஜூலை மாதத்தின் முதல் 17 நாட்களில் மட்டும் மொத்தம் 19,100 […]

உலகம்

வியட்நாமில் கடும் மழை – வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு நால்வர் உயிரிழப்பு

  • July 18, 2026
  • 0 Comments

வியட்நாமின் வடக்கு மாகாணமான லை சாவில் உள்ள  மலைக் கிராமத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 04 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நான்கு பேரை காணவில்லை என்றும்  அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வியட்நாமின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்குகள் சாலைகள், மின் கட்டமைப்புகள் மற்றும் நூற்றுக்கணக்கான வீடுகளைச் சேதப்படுத்தியதோடு, அப்பகுதியில் 238 ஹெக்டேர் பயிர்களையும் மூழ்கடித்துள்ளதாக […]

ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத்தின் அஸ்ராக் (Azraq) விமானத் தளம் மீது தாங்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை (IRGC) அறிவித்துள்ளது. உலகம் செய்தி

ஜோர்டானில் உள்ள அமெரிக்க விமானத் தளம் மீது ஈரான் தாக்குதல்

  • July 18, 2026
  • 0 Comments

ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத்தின் அஸ்ராக் (Azraq) விமானத் தளம் மீது தாங்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை (IRGC) அறிவித்துள்ளது. இது தொடர்பாக IRGC வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜோர்டானின் அல்-அஸ்ராக் பகுதியில் உள்ள அமெரிக்க விமானத் தளத்தில் உள்ள போர் விமானப் பாதுகாப்புப் பெட்டகங்கள் (Fighter jet shelters) மற்றும் பெரிய ரன்வே (Aircraft parking ramp) ஆகியவற்றைக் குறிவைத்து, கடுமையான மற்றும் ஒரே நேரத்திலான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை […]

ஐரோப்பா

துருக்கியில்  5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு

  • July 18, 2026
  • 0 Comments

துருக்கியில்  5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்  இன்று  பதிவாகியுள்ளது. உள்ளூர் நேரப்படி காலை  6:20 மணியளவில் மலாத்யா மாகாணத்தின் பட்டல்காசி மாவட்டத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மலாத்யா, எலாசிக், அதியமான், துன்செலி மற்றும் ஷான்லியுர்ஃபா மாகாணங்களிலும் இதன் அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது எந்தவிதமான பாதகமான சூழ்நிலைகள் குறித்தும் தகவல்கள் இல்லை, என்றால் அதிகாரிகள் சம்பவ இடத்தில் மதிப்பீட்டு பணிகளை முன்னெடுத்துள்ளனர். உலகின் மிகவும் நில அதிர்வு மிகுந்த நாடுகளில் ஒன்றான துருக்கியில், […]

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”க்கு ஆதரவாக காலவரையற்ற உண்ணாவிரதமிருந்து வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியா செய்தி

டெல்லியில் பரபரப்பு: 21 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த சோனம் வலுக்கட்டாயமாக வைத்தியசாலையில் சேர்ப்பு

  • July 18, 2026
  • 0 Comments

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”க்கு ஆதரவாக காலவரையற்ற உண்ணாவிரதமிருந்து வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில், டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 28 நாட்களாக தொடர் போராட்டங்கள் […]

இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் இன்று சனிக்கிழமை (ஜூலை 18) ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. அறிவியல் & தொழில்நுட்பம் இந்தியா செய்தி

இந்திய விண்வெளி வரலாற்றில் முக்கிய மைல்கல்

  • July 18, 2026
  • 0 Comments

இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் இன்று சனிக்கிழமை (ஜூலை 18) ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. இந்தியாவின் முதலாவது தனியார் தயாரிப்பான ‘விக்ரம்-1’ (Vikram-1) சுற்றுப்பாதை ஏவுகலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 22 மீட்டர் உயரமும், நான்கு நிலைகளையும் (four-stage) கொண்ட இந்த ராக்கெட் வானத்தை நோக்கிச் சீறிப் பாய்ந்தபோது, அது மிக வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவின் தனியார் விண்வெளித் துறைக்கு ஒரு வரலாற்றுத் தருணமாக […]

கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் புதிய கைத்தொழில் பேட்டைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ சதுரங்க அபயசிங்க, அதற்காகப் பொருத்தமான காணிகளை உடனடியாக அடையாளப்படுத்தித் தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கை செய்தி

வடக்கில் புதிய கைத்தொழில் பேட்டைகள்: காணிகளை அடையாளம் காண ஏற்பாடு

  • July 18, 2026
  • 0 Comments

கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் புதிய கைத்தொழில் பேட்டைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ சதுரங்க அபயசிங்க, அதற்காகப் பொருத்தமான காணிகளை உடனடியாக அடையாளப்படுத்தித் தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்துக்குப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள பிரதி அமைச்சர் , வடக்கு மாகாண ஆளுநரை நேற்று (17.07.2026) வெள்ளிக்கிழமை இரவு ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின்போதே […]

ஈரானின் இராணுவ நிலைகள் மற்றும் தளவாடக் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து அமெரிக்கா தொடர்ச்சியாக ஏழாவது இரவாகவும் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்குப் பதிலடியாக, வளைகுடா பிராந்தியத்திலுள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் சனிக்கிழமை (18) மீண்டும் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது. இதனால் பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அமெரிக்காவின் முற்றுகை – ஈரானின் பதிலடி: நடுங்கும் வளைகுடா நாடுகள்

  • July 18, 2026
  • 0 Comments

ஈரானின் இராணுவ நிலைகள் மற்றும் தளவாடக் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து அமெரிக்கா தொடர்ச்சியாக ஏழாவது இரவாகவும் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்குப் பதிலடியாக, வளைகுடா பிராந்தியத்திலுள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் சனிக்கிழமை (18) மீண்டும் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது. இதனால் பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்துள்ளது. இருதரப்பும் கடல்வழிப் போக்குவரத்துப் பாதைகளையும் இலக்கு வைத்துள்ளன. ஈரான் மீது தாங்கள் கடற்படை முற்றுகையை அமுல்படுத்தி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதேநேரம், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கைத் தீர்மானிக்கும் […]

"தமிழர் விவகாரத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிறப்பாகச் செயல்படவில்லை" என்று வட மாகாண முன்னாள் முதல்வரும், ஓய்வுபெற்ற நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அரசியல் இலங்கை செய்தி

தமிழர் பிரச்சினைகளை மறந்து செயல்படுகிறத அநுர அரசு

  • July 18, 2026
  • 0 Comments

“தமிழர் விவகாரத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிறப்பாகச் செயல்படவில்லை” என்று வட மாகாண முன்னாள் முதல்வரும், ஓய்வுபெற்ற நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: “தற்போதைய அரசாங்கம் நடந்து கொள்ளும் விதம் குறித்துக் குறை கூற முடியாது. அவர்களுக்கு அனுபவம் சற்றுக் குறைவாக இருப்பதால் ஒரு சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனினும், அவர்கள் ஊழல்களில் இருந்து ஒதுங்கியுள்ளனர்; போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அரசு நிறுவனங்களுக்கான […]