ஈரான்மீது தாக்குதல் – ட்ரம்பின் எச்சரிக்கையால் மீண்டும் பரபரப்பு
ஈரானுடன் எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதியானது அல்ல என்றும் , ஈரான் முறையாகச் செயல்படாவிட்டால் மீண்டும் அந்நாட்டின் மீது குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். பிரான்ஸில் நடைபெறும் மாநாட்டில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே ட்ரம்ப் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். ” இது ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே. இது எனக்குப் பிடிக்கவில்லை என்றால், நாங்கள் மீண்டும் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவோம். அவர்கள் தலைகளில் குண்டுகளை வீசவும் முற்படுவோம். […]









