இலங்கை செய்தி

இந்திய, இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு!

  • March 6, 2026
  • 0 Comments

இந்தியா Indian மற்றும் இலங்கை Sri Lankan வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் முக்கிய சந்திப்பொன்று புது டெல்லியில் இன்று (06) மாலை இடம்பெற்றுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் நேற்று மாலை புதுடெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். இந்நிலையிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

ஈரான் சரணடைந்தால் மட்டுமே பேச்சு: ட்ரம்ப் திட்டம்!

  • March 6, 2026
  • 0 Comments

நிபந்தனையற்ற சரணடைவுக்கு இணங்கினால் மட்டுமே ஈரானுடன் பேச்சு நடத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இவ்வாறு நடந்து தகுதியான தலைமையை ஏற்றுக்கொண்டால் ஈரானை பொருளாதார ரீதியாக மேம்படுத்த உதவி வழங்கப்படும் எனவும் ட்ரம்ப் கூறியுள்ளார். ஈரானின் தற்போதைய இக்கட்டான நிலையை மாற்றி, நட்பு நாடுகளுடன் இணைந்து அந்நாட்டை வலிமையான தேசமாக மாற்றுவதே தனது நோக்கம் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, சரணடைவதற்கு தயாரில்லை என ஈரான் ஏற்கனவே அறிவித்துள்ளது.

இலங்கை செய்தி

அவசரகாலச் சட்டத்தை தவறாக பயன்படுத்தவில்லை: பிரதமர் விளக்கம்!

  • March 6, 2026
  • 0 Comments

அவசரகாலச் சட்டத்தை அடக்குமுறைக்காக பயன்படுத்தும் எந்தவொரு தேவைப்பாடும் அரசாங்கத்துக்கு கிடையாது. இதனை கடந்த மூன்று மாதங்களாக செயலில் நிரூபித்தோம் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி Harini Amarasooriya அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். அவசரகாலச் சட்டத்தை நாம் அடக்குமுறைக்காககப் பயன்படுத்த வில்லை. கடந்த மூன்று மாதங்களாக அச்சட்டம் அமுலில் இருக்கின்றது. இக்காலப்பகுதிக்குள் மேற்படி சட்டம் அடக்குமுறைக்காகப் பயன்படுத்தப்பட்டது என்பதற்குரிய ஆதாரத்தை எதிரணியால் முன்வைக்க முடியுமா? எனவும் Prime Minister கேள்வி […]

இலங்கை செய்தி

அவசரகாலச் சட்டம் நீடிப்பு: நாடாளுமன்றம் ஒப்புதல்!

  • March 6, 2026
  • 0 Comments

அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒரு மாதம் நீடிப்பதற்கான பிரேரணையை Parliament மீண்டும் அங்கீகரித்துள்ளது. அவசரகாலச்சட்டத்தை நீடித்து ஜனாதிபதி Anura Kumara Dissanayake வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அளிக்கும் பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விவாதத்தை அடுத்து இன்று மாலை சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அவசரலகாலச்சட்டத்தை நீடிக்கும் பிரேரணைக்கு ஆதரவாக 108 வாக்குகள் அளிக்கப்பட்டன. எதிராக, 08 வாக்குகள் அளிக்கப்பட்டன. இதனால் 100 மேலதிக வாக்குகளால் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

அரசியல் இலங்கை செய்தி

அவசரகாலச்சட்டம் நீடிப்பு: சஜித் அணி போர்க்கொடி!

  • March 6, 2026
  • 0 Comments

அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுவதை தமது கட்சி கடுமையாக எதிர்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் SJP நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல J.C. Alawatthuwala தெரிவித்தார். அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ” இச்சட்டத்தை நீடிக்க வேண்டிய எவ்விதத் தேவைப்பாடும் நாட்டில் இல்லை. இது தொடர்பாக ஆளுங்கட்சியால் முன்வைக்கப்பட்ட காரணங்கள் எவையும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல. எனவே, அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுவதன் பின்னணியில் வேறு […]

உலகம்

ஈரான் உளவாளிகள் நால்வர் லண்டனில் கைது!

  • March 6, 2026
  • 0 Comments

ஈரான் உளவுத் துறையுடன் தொடர்பு வைத்துள்ளனர் எனச் சந்தேகிக்கப்படும் நால்வர் லண்டனில் London கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரானியர் ஒருவரும், பிரிட்டிஷ் மற்றும் ஈரான் குடியுரிமை கொண்ட மூவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். லண்டனில் உள்ள யூத சமூகத்தினர் மற்றும் அவர்களின் இருப்பிடங்களைக் இவர்கள் கண்காணித்து வந்துள்ளனர் என தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது. இதன் ஓர் அங்கமாக Watford மற்றும் Barnet உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்பட்டது. இதன்போதே கைது இடம்பெற்றுள்ளது. […]

செய்தி

யாழ்.படகு விபத்து: உயர்மட்ட விசாரணைக்கு பணிப்பு!

  • March 6, 2026
  • 0 Comments

யாழ். படகு விபத்துக்கான முழுமையான காரணங்களை கண்டறிவதற்குரிய அவசர விசாரணை முன்னெடுக்குமாறு கடற்படையினரும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரால் Ramalingam Chandrasekar இது தொடர்பான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு அமைச்சர் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார். துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு அரசாங்கம் சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். விபத்துக்குள்ளான படகு பயணத்திற்கு பாதுகாப்பான நிலையில் இருந்ததா, […]

செய்தி

கடைசி குண்டு தீரும்வரை போராடுவோம்: ஈரான் பிரதி அமைச்சர் டெல்லியில் கருத்து!

  • March 6, 2026
  • 0 Comments

“கடைசி குண்டு தீரும்வரை, கடைசி வீரர் இருக்கும்வரை ஈரான் போராடும். அதைவிட வேறு வழியில்லை.” என்று ஈரான் பிரதி வெளிவிவகார அமைச்சர் சயீத் கத்தீப்சாதே Saeed Khatibzadeh தெரிவித்தார். இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர், டெல்லியில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். “ அமெரிக்காவும் இஸ்ரேலும் எங்களை தாக்கி, ஆக்கிரமிப்பு நடத்தி வருகின்றன. ஈரானுக்கு அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்த மேற்படி நாடுகள் முயற்சிக்கின்றன. எனது நாட்டின் குடிமக்கள் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் குண்டுகளை வீசி தாக்குதல்களை […]

உலகம்

ஈரான், லெபனான் மீது இஸ்ரேல் உக்கிர தாக்குதல்! தொடரும் பதற்றம்!!

  • March 6, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் லெபனான்மீதான வான் வழித் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கமைய தெஹ்ரானில் உள்ள முக்கிய அரசு கட்டமைப்புகள் மற்றும் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் தளங்களை இலக்கு வைத்து இஸ்ரேலிய இராணுவம் குண்டு மழை பொழிந்துவருகின்றது. இந்த தாக்குதலுக்கு அமெரிக்க படைகள் வரலாற்று சிறப்புமிக்க ஒருங்கிணைப்பை வழங்குகின்றது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. எதிரிகளின் வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை தளங்களை சிதைப்பதே தங்களின் முதல் கட்ட நோக்கம் என்றும் கூறியுள்ளது. ஈரானும் பதிலடி தாக்குதலை நடத்திவருகின்றது. […]

இலங்கை செய்தி

மட்டக்களப்பு வாவியில் உலா வரும் காட்டு யானைகள்

  • March 6, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு வாவியில் இரண்டு காட்டு யானைகள் ஜோடியாக நேற்று மாலை வேளயிலிருந்து (05.03.2026) உலாவித் திரிவதை அப்பகுதி மக்கள் அவதானித்துள்ளனர். மட்டக்களப்பு வாவியின் துறைநீலாவணை பகுதியிலேயே இக்காட்டு யானைகள் உலாவித்திரிவதை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறு வாவியில் உலாவும் காட்டு யானைகளை அப்பகுதி மக்கள் பார்வையிட்டு வருவதுடன், தமது குடியிருப்புக்களுக்குள் உட்புகுந்து விடுமோ என்ற அச்சத்தின் மத்தியிலும் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பிரதேசத்தில் துவம்சம் செய்து வந்த காட்டுயானைகள் அண்மைக்காலமாக மட்டக்களப்பு வாவியை ஊடறுத்து எழுவாங்கரைப் […]

error: Content is protected !!