Israel’s Ambassador to the United Nations Danny Danon உலகம் செய்தி

அவசரப்பட்டுவிட்டார் ட்ரம்ப் – இஸ்ரேல் தூதுவர் சீற்றம்

  • June 17, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான புதிய ஒப்பந்தம் தொடர்பில் ஐ.நாவுக்கான இஸ்ரேல் தூதுவர் Danny Danon , தனது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். இந்த உடன்படிக்கையானது இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளின் பாதுகாப்பிற்கு பெரிய அச்சுறுத்தலாக அமையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். பேச்சுவார்த்தைகளை விரைவாக முடிக்க முயன்றதன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி ஈரானுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக Danny Danon விமர்சித்துள்ளார். இருப்பினும், இது ஒரு தொடக்கநிலை கட்டமைப்பு மட்டுமே என்பதால் இறுதி முடிவு எடுக்கும் வரை […]

பருத்தித்துறை நகரின் மூன்றாம் வட்டாரத்துக்குட்பட்ட கோரியடி பகுதியில் நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கஜேந்திரகுமார் பங்கேற்று உரையாற்றும்போது அரசியல் இலங்கை செய்தி

ஒற்றையாட்சி அரசமைப்பு தமிழர்களை அடிமையாக்கும்

  • June 17, 2026
  • 0 Comments

புதிய அரசமைப்பு என்ற பெயரில் ஒற்றையாட்சி அரசமைப்பைத் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து நிறைவேற்றுவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தீவிரம் காட்டி வருகின்றது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். அவ்வாறு அது நிறைவேற்றப்பட்டால் தமிழ் மக்கள் தங்களின் உரிமைகளை இழந்து அடிமையினமாக மாற்றப்படும் பேராபத்து ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பருத்தித்துறை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு […]

உலகம் செய்தி வணிகம்

ஏறிய வேகத்தில் இறங்கும் கச்சா எண்ணெய் விலை

  • June 17, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான போர் முடிவுக்கு வரவிருப்பதால், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்து வருகிறது. இரு தரப்புக்கும் இடையே எட்டப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, உலக எண்ணெய் விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட உள்ளது. போர்ச்சூழலால் கச்சா எண்ணெய் விலை முன்னதாக மிக உயர்ந்த நிலையை எட்டியிருந்தாலும், தற்போது எற்பட்டுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைகள் சந்தையில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. எனினும், கடற்பகுதியில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதிலும் கப்பல் போக்குவரத்தை சீரமைப்பதிலும் உள்ள […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

தவெகவுடன் சங்கமிக்கிறார் விஜயபாஸ்கர்

  • June 17, 2026
  • 0 Comments

அதிமுகவின் AIADMK சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த, சி.விஜயபாஸ்கர், C. Vijayabaskar தவெகவில் TVK இணையவுள்ளார் என தெரியவருகின்றது. எதிர்வரும் 22-ம் திகதி நடைபெறும் முதல்வர் விஜய் பிறந்தநாள் விழாவின்போது அவர் தவெகவுடன் சங்கமிப்பார் என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தவெக 108 இடங்களில் வென்ற நிலையில், கடந்த மே 10 ஆம் திகதி முதல்வராக விஜய் பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து 13 ஆம் திகதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், […]

அரசியல் இலங்கை செய்தி

அடுத்து என்ன? ராஜபக்சக்கள் எடுத்துள்ள முக்கிய முடிவு

  • June 17, 2026
  • 0 Comments

அரசியல் பயணத்தை அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே ராஜபக்சக்களின் எண்ணமாக உள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். “பஸில் ராஜபக்சவின் ஆசிர்வாதம் எமது கட்சிக்கு என்றும் உள்ளது. ஆனால் அவர் செயற்பாட்டு அரசியலுக்கு வருவாரா என்பது பற்றி கூற முடியாது. மஹிந்த ராஜபக்ச, சமல் ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, பஸில் ராஜபக்ச ஆகியோர், அரசியலை அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைக்க பார்க்கின்றனர். இதற்கமையவே நாம் புதிய அமைப்பாளர்கள், தலைவர்களை […]

ஐரோப்பா செய்தி

கட்டுக்குள் வந்த பிரித்தானியாவின் பணவீக்கம்

  • June 17, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் பணவீக்கம் மே மாதத்தில் 2.8 சதவீதம் என்ற அளவில் சீராக இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. எரிபொருள் மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரித்த போதிலும், உணவுப் பொருட்களின் விலை குறைந்ததால் பணவீக்கம் கட்டுக்குள் இருந்தது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டாலும், அரசின் பொருளாதார நடவடிக்கைகள் ஓரளவிற்கு கைகொடுத்துள்ளன என்பதை இது வெளிப்படுத்துகின்றது. அதேவேளை, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம், எண்ணெய் விலையை குறைத்து வரும் காலங்களில் பொருளாதார […]

இலங்கை செய்தி

மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை-யாழில் இருவர் கைது

  • June 17, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில், பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தனர் எனக் கூறப்படும் இருவர், ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அல்லைப்பிட்டி பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்யும் கும்பல் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரமே அல்லைப்பிட்டி பகுதியை சேர்ந்த இருவரை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டு இருவரிடம் இருந்தும் 5.2 கிராம் மற்றும் 5 கிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர். கைது […]

இந்தியா செய்தி

தற்கொலைப்படை ட்ரோன்களை தயாரிக்கும் இந்தியா

  • June 17, 2026
  • 0 Comments

இந்திய நிறுவனங்களுடன் இணைந்து, தற்கொலைப்படை ட்ரோன்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கு இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது. இதற்கான விலை மனு கோரலை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது. நிலையான இறக்கைகள் கொண்ட, ஒருமுறை மட்டுமே தாக்கக்கூடிய ஆளில்லா வான்வழி அமைப்புகள்தான தற்கொலைப்படை ட்ரோன்கள் என அழைக்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தை கோயம்புத்தூர் மாவட்டம் சூலூரில் உள்ள விமானப்படையின் 5-வது பேஸ் ரிப்பேர் டெப்போ (பிஆர்டி) ஒருங்கிணைக்கும் என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தொழில்நுட்பத் தேவைகளின்படி, இந்த ட்ரோன் 16,000 அடி உயரம் […]

இலங்கை செய்தி

பசில் ராஜபக்ச கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

  • June 17, 2026
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் துறை சட்டவிரோதச் சொத்துக்கள் பிரிவுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா மேம்பாட்டுப் பணியக நிதி முறைகேடு வழக்கில், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று கோட்டை நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணை அக்டோபர் 14ஆம் […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

யோஷித ராஜபக்ச கைது

  • June 17, 2026
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான தொடர் விசாரணை ஒன்றின் பேரில் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார். இவ்விவகாரம் தொடர்பாக ஆணைக்குழு முன் ஆஜராவதற்காக, இலஞ்ச ஆணைக்குழுவால் விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு இணங்க, யோஷித ராஜபக்ச இன்று காலை ஆணைக்குழுவிற்கு வந்தடைந்திருந்தார். விசாரணை தொடர்பாக நேற்று ஆணையத்தின் முன் ஆஜராகுமாறு அவருக்கு முன்னதாகவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், நடைபெற்று வரும் நீதிமன்ற வழக்கு காரணமாக குறித்த நாளில் ஆரஜான முடியவில்லை என […]