ஆஸ்திரேலியா உலகம் செய்தி

பென்டகனில் நடைபெற்ற முத்தரப்பு பாதுகாப்பு கூட்டம்!

  • December 11, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுக்கிடையில் விசேட கூட்டமொன்று நடைபெற்றுள்ளது. பென்டகன் எனப்படும் அமெரிக்க இராணுவத் தலைமையகத்திலேயே முத்தரப்பு சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஆக்கஸ் (AUKUS) எனப்படும் பாதுகாப்பு கூட்டணியில் மேற்படி மூன்று நாடுகளும் அங்கம் வகிக்கின்றன. ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் பிரகாரம் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியா கொள்வனவு செய்யவுள்ளது. இதற்குரிய உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இணக்கம் வெளியிட்டிருந்தன. எனினும், அமெரிக்காவுக்கு முதலிடம் என்ற கொள்கையால் இத்திட்டம் […]

அரசியல் இலங்கை

இலங்கைக்காக ஆஸ்திரேலியாவிடம் உதவி கோருகிறார் எதிர்க்கட்சி தலைவர் 

  • December 8, 2025
  • 0 Comments

டித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் உட்கட்டமைப்பு வசதிகளை மீளமைத்து, மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு ஆஸ்திரேலியாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவரை இன்று சந்தித்தவேளையிலேயே இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவரை இன்று சந்தித்து பேச்சு நடத்தினார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இச்சந்திப்பு […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ!

  • December 8, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா, நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தில் வெப்ப அலைக்கு மத்தியில் காட்டுத் தீயும் வேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில் தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுமார் 30 வருடங்களாக அத்துறையில் சேவையாற்றிய 59 வயதான தீயணைப்பு வீரர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. நியூகேஸில் இருந்து சுமார் 90 கிமீ வடக்கே நெரோங் அருகே தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையில் மரம் முறிந்து விழுந்தே இம்மரணம் ஏற்பட்டுள்ளது. நியூ சவூத் வேல்ஸ் […]

அரசியல் ஆஸ்திரேலியா

புர்கா அணிந்துவந்து பரபரப்பை ஏற்படுத்திய செனட்டர் இடைநீக்கம்!

  • November 25, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலிய செனட் சபைக்கு புர்கா அணிந்துவந்து சர்ச்சையை ஏற்படுத்திய வன் நேஷன் கட்சி தலைவர் செனட்டர் பவுலின் ஹான்சன், செனட் சபை அமர்வில் பங்கேற்பதற்கு 7 நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் ஆடை கலாசாரத்தை செனட்டர் ஹான்சன் கடுமையாக விமர்சித்துவருபவர். பொது இடங்களில் முகத்தை மூடிய ஆடைகள் அணிவதை தடை செய்யுமாறு அவர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தாலும் அது கைகூடவில்லை. இந்நிலையிலேயே நேற்று செனட் சபைக்கு புர்கா அணிந்துவந்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவரின் செயல் அப்பட்டமான இனவெறி […]

அரசியல் இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

ட்ரம்பின் அமைதி திட்டம்: ஆஸ்திரேலியா கூறுவது என்ன? 

  • November 24, 2025
  • 0 Comments

உக்ரைனுக்கான எந்தவொரு அமைதித் திட்டமும் புதிய பகுதியை ரஷ்யாவிடம் ஒப்படைப்பதாக அமையக்கூடாது என்று ஆஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது. உக்ரைன், ரயா போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள அமைதித் திட்டத்துக்கு எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையிலேயே ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் மேற்படி விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டிரம்பின் முன்மொழிவு குறித்து விவாதிக்க அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் உக்ரைன் உயர் அதிகாரிகள் ஜெனீவாவில் கூடியுள்ளனர். இதன்போது […]

அரசியல் ஆஸ்திரேலியா இந்தியா செய்தி

இந்திய, ஆஸ்திரேலிய பிரதமர்கள் தென்னாபிரிக்காவில் சந்திப்பு!

  • November 22, 2025
  • 0 Comments

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் பிரதமர்களுக்கிடையிலான இரு தரப்பு சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தென்னாபிரிக்காவில் நடைபெறும் ஜி – 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸி ஆகியோர் அந்நாட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு வைத்தே இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் பற்றி கலந்துரையாப்பட்டது. இந்தோ – பசுபிக் பாதுகாப்பு உட்பட மேலும் பல விடயங்கள் சம்பந்தமாகவும் பேசப்பட்டுள்ளன. “ ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸ{டன் மிகச் […]

உலகம்

வேலையை விட்டு வெளியேறத் தயாராகும் 2.7 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள்

  • October 14, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டில் 2.7 மில்லியனுக்கும் அதிகமானோர் தங்கள் வேலையை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளதாக புதிய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. அலையன்ஸ் ஆஸ்திரேலியா (Allianz Australia) என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், 80 சதவீத ஊழியர்களும் 66 சதவீத மேலாளர்களும் தங்கள் நிறுவனங்கள் நல்ல பணியிட நடைமுறைகளை செயல்படுத்தவில்லை என குறிப்பிட்டுள்ளனர். 78 சதவீத மேலாளர்கள் நேரம் மற்றும் வளங்களின் பற்றாக்குறை, பொருத்தமான தொழில்நுட்பம் இல்லாதது மற்றும் உள் மோதல்கள் இதற்கு முக்கிய காரணங்கள் என்று கூறுகின்றனர். […]

வாழ்வியல்

ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கும் மனச்சோர்வு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

  • October 8, 2025
  • 0 Comments

ஆண்களை விட பெண்களுக்கு அதிகளவில் மனச்சோர்வு ஏற்படுவதாக புதிய ஆய்வு அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நிபுணர்களால் நடத்தப்பட்ட ஆய்வில், இந்த விடயம் தெரியவந்துள்ளது. ஆண்களை விட பெண்களின் மரபணுவில் மனச்சோர்வை ஏற்படுத்தும் பங்கு இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகளவில் 2 லட்சம் பேரின் மரபணுவை அடிப்படையாகக் கொண்டு, குயின்ஸ்லாந்தின் QIMR பெர்கோபர் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தது. இதில், இருபாலினருக்கும் பொதுவான 7,000 மரபணு மாற்றங்களும், பெண்களை மட்டும் பாதிக்கும் 6,000 […]

error: Content is protected !!