உலகம்

சீனா வடிவமைக்கும் நகல் AI தொழில்நுட்பம் – அமெரிக்காவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்

  • July 31, 2026
  • 0 Comments

மேற்கத்தேய நாடுகளின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சீனா தனது சொந்த உள்நாட்டு செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை உருவாக்கி பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன இராணுவ ஆராய்ச்சியாளர்கள், OpenAI மற்றும் Anthropic போன்ற புகழ்பெற்ற தளங்களை பயன்படுத்தி நகல்களை உருவாக்கி வருகின்றனர். ‘மாதிரி வடிகட்டுதல்’ (model distillation) என்று அழைக்கப்படும் இந்த முறையானது, அதிக செயல்திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும், இதனால் வொஷிங்டனின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜேம்ஸ்டவுன் அறக்கட்டளை […]

உலகம்

சீனா விநியோக மையங்களை தாக்கினால் பதிலடி கொடுப்பது தொடர்பில் தைவான் போர்பயிற்சி

  • July 28, 2026
  • 0 Comments

சீனா விநியோக மையங்களை தாக்கினால் ஆயுத உற்பத்தித் தளங்களை இடமாற்றம் செய்வது மற்றும் பொதுத் தொழிற்சாலைகளை இராணுவப் பயன்பாட்டிற்காக மாற்றுவது ஆகியவற்றை சோதிக்கவுள்ளதாக தைவான் தெரிவித்துள்ளளது. அடுத்த மாதம் நடைபெறும் வருடாந்திரப் பயிற்சிகளில் இந்த விடயங்களை சோதனை செய்யவுள்ளதாக தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 5 முதல் 14 வரை நடைபெறும் வருடாந்திர ஹான் குவாங் (Han Kuang) போர்ப் பயிற்சிகளின் ஒரு பகுதியாக  இந்தப் பயிற்சியை தைவான் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. இது ஆயுதப் […]

உலகம்

சீனா மீதான வர்த்தக வரியை நீக்குமாறு அமெரிக்காவிடம் கோரிக்கை

  • July 27, 2026
  • 0 Comments

கட்டாய உழைப்புப் பயன்பாடு குறித்த குற்றச்சாட்டுகளின் பேரில் சீனப் பொருட்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய வரிகள் நியாயமற்றவை என்றும், அவை ஒருவித பாதுகாப்புவாதமே என்றும் சீனாவின் வர்த்தக அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. அத்துடன் குறித்த வரிகளை நீக்குமாறு வொஷிங்டனை வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனா உட்பட 60 வர்த்தகப் பங்காளிகளிடமிருந்து வரும் பொருட்கள் மீது அமெரிக்கா 10 தொடக்கம் 12.5 சதவீதம் வரை புதிய வரிகளை விதித்துள்ளது. கட்டாய உழைப்பின் மூலம் செய்யப்படும் இறக்குமதிகளைக் […]

உலகம்

சீனாவை நெருங்கி வரும் புயல் : 20000 மக்கள் வெளியேற்றம்

  • July 25, 2026
  • 0 Comments

சீனாவை நெருங்கி வரும் நௌல் புயல் (Noul) காரணமாக சுமார் 20 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்தடன் ரயில் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த புயலானது ஹாங்காங் ( Hong Kong)  முதல் குவாங்டாங் (Guangdong) மாகாணம் வரையிலான கடலோரப் பகுதியில், கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் குவாங்டாங் மற்றும் அண்டை மாகாணமான புஜியானின் சில பகுதிகளில் சூறாவளி மற்றும் கனமழை பெய்யும் என சீனாவின் தேசிய […]

உலகம்

சீனாவின் சிவப்பு பயங்கரவாதத்தை எதிர்க்க தைவானியர்களுக்கு அழைப்பு

  • July 19, 2026
  • 0 Comments

தைவான் தனது ஜனநாயகத்தைப் பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், சீனாவின் ஒரு பகுதியாக ஆகிவிடக்கூடாது என்றும் அந்நாட்டின் ஜனாதிபதி லாய் சிங்-டே (Lai Ching-te) வலியுறுத்தியுள்ளார். மேலும் பெய்ஜிங்கிலிருந்து வரும் “சிவப்பு பயங்கரவாதத்தை” எதிர்க்குமாறு தனது ஜனநாயக முற்போக்குக் கட்சியின் (டிபிபி) உறுப்பினர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். டிபிபி-யின் வருடாந்திர மாநாடு இன்று இடம்பெற்ற நிலையில் இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், அமைதிக் காலங்களிலும் தைவான் […]

ஐரோப்பா

பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆழப்படுத்த விரும்பும் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி – சீனா மீது பாய்ச்சல்

  • July 18, 2026
  • 0 Comments

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனிக்கு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆழப்படுத்த இருநாட்டு தலைவர்களும் உறுதிப்பூண்டுள்ளனர். ஜெர்மன் அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் மற்றும் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் கூட்டு அமைச்சரவை கூட்டங்களின் ஒரு பகுதியாக நேற்றைய தினம் சந்தித்துக்கொண்டனர். இதன்போது நாட்டின் பாதுகாப்பு, மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்தாலோசித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த இருவரும்,  பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும், சீனாவின் கடுமையான பொருளாதாரப் போட்டியை எதிர்கொள்ளவும் இருநாடுகளும் தயாராக இருப்பதாக […]

உலகம்

சீனாவில் நிலச்சரிவு – ஏராளமானோர் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக தகவல்

  • July 17, 2026
  • 0 Comments

சீனாவின் தென்மேற்கு நகரமான சோங்கிங்கில் (Chongqing) உள்ள மாவட்டமொன்றில் இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஏராளமானவர்கள் மண்ணுக்குள் புதையுண்டிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. நிலச்சரிவை தொடர்ந்து 60 இற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களை வெளியேற்ற அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதேநேரம் இதுவரை ஒன்பது பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலச்சரிவுக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. சீனாவின் அவசரகால மேலாண்மை அமைச்சகம் இரண்டாம் நிலை அவசரகால நடவடிக்கையைச் செயல்படுத்தி, 100 பேர் கொண்ட மீட்புக் […]

உலகம்

பப்புவா நியூ கினியாவில் உள்ள அலுவலகத்தை மூடும் தைவான் – சீனா பாராட்டு

  • July 16, 2026
  • 0 Comments

பப்புவா நியூ கினியாவில் உள்ள தைவானின் அலுவலகத்தை மூட அந்நாடு முடிவு செய்துள்ளதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையை பெய்ஜிங் பெரிதும் பாராட்டுவதாகவும் அறிவித்துள்ளது. பசிபிக் பிராந்தியம் நீண்ட காலமாக சீனாவுக்கும் தைவானுக்கும் இடையில்  இராஜதந்திரப் போட்டி நிலவும் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இந்த தகவலை உறுதிப்படுத்த ரொய்டர்ஸ் பப்புவா நியூ கினியாவின் வெளியுறவு அமைச்சகத்திடம் வினவியுள்ள நிலையில், அவ் அமைச்சகம் பதிலளிக்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பெய்ஜிங்கில் நடைபெற்ற வழக்கமான செய்தியாளர் சந்திப்பில் பேசிய […]

உலகம்

சீனாவில் சாலை தடுப்பில் மோதி பேருந்து விபத்து – 06 பேர் பலி

  • July 16, 2026
  • 0 Comments

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில்  பேருந்து ஒன்று சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 06 பேர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து, மலைப்பாங்கான பாவோசிங் மாவட்டத்தில் உள்ள சோங்காங் (Zhonggang ) கிராமத்தில் நேற்று மாலை சுமார் 6 மணியளவில் நிகழ்ந்தது. விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் 17 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. மீட்பு பணிகள் இன்று காலை நிறைவடைந்த நிலையில், விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்

கரையை கடக்கும் பாவி புயல் – சீனாவில் 18 இலட்சம் மக்கள் வெளியேற்றம்

  • July 11, 2026
  • 0 Comments

பாவி புயல் சீனாவின் வென்சோவை  (Wenzhou) மாநிலத்தை சுற்றி கரையை கடக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ள நிலையில் 18 இலடச்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். குறித்த புயல் காரணமாக சீனாவின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. அத்துடன் காற்றின் வேகமானது மணிக்கு 144 கி.மீ (90 மைல்) வேகத்தில் வீசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக 18 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கமைய வென்சோ அமைந்துள்ள ஜெஜியாங் (Zhejiang) மாகாணம் முழுவதும் 17 […]