உலகம்

பச்சை நண்டுகளை உட்கொண்டும், சிறுநீரை குடித்தும் வாழ்ந்த தொழிலதிபர்! பின்னணி என்ன?

  • June 13, 2026
  • 0 Comments

சீனாவின் 40 வயது மதிக்கத்தக்க தொழில் அதிபர் ஒருவர் விடுமுறையை கழிப்பதற்காக பிரபல விடுதிற்கு சென்றிருந்த நிலையில் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். ஹைனானில் உள்ள செங்மாய் கடற்கரையிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில், அவர் நிர்வாணமாகவும் சுயநினைவின்றியும் மிதந்த நிலையில் மீனவர்களால் காப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குவாங்சி ஜுவாங் தன்னாட்சிப் பகுதியைச் சேர்ந்த அந்த தொழிலதிபர், மே 27 அன்று ஹைக்கோ கடற்கரையில் இரவு நேர நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். அப்போது அவரிடம் தொலைபேசியும் […]

உலகம்

தைவானின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய தீவுகளில் சீனா அத்துமீறல்!

  • June 6, 2026
  • 0 Comments

தென் சீனக் கடலில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த தீவுகளைச் சுற்றியுள்ள கடற்பரப்பில், சீனாவின் கடலோர காவல் கப்பல் ஒன்றும், ஆய்வு கப்பல் ஒன்றும் இன்று  ரோந்து சென்றதாக தைவான் குற்றம் சாட்டியுள்ளது. தைவானின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதாஸ் தீவுகளில் சீனா தொடர்ந்து அத்துமீறும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தெற்கு தைவானுக்கும் ஹாங்காங்கிற்கும் இடையில் உள்ள இந்தத் தீவுகள், தைவான் தீவிலிருந்து 400 கி.மீற்றருக்கும் (250 மைல்கள்)  அதிகமான தூரத்தில் இருப்பதால், சீனத் தாக்குதலுக்கு எளிதில் […]

உலகம்

சீனாவில் கண்ணாடி அணிந்து பரீட்சைக்கு தோற்றுபவர்களுக்கு எச்சரிக்கை!

  • June 5, 2026
  • 0 Comments

சீனாவில் தேசிய பல்கலைக்கழக நுழைவுத் பரீட்சைகளில் தோற்றும் மாணவர்கள் ஸ்மார்ட் கண்ணாடிகள் பயன்படுத்துவதற்கு எதிராக கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கண்ணாடி அணிந்து பரீட்சைக்கு தோற்றுவோர் விசேடமாக கவனிக்கப்படுவார்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் ஸ்மார்ட் சாதனங்களைப் பயன்படுத்தி மோசடி செய்வதைத் தடுப்பதற்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 7 ஆம் திகதி நடைபெறவுள்ள பல்கலைக்கழக நுழைவு பரீட்சையில் சுமார் 13 மில்லியன் மாணவர்கள் தோற்றவுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குவாங்டாங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட பல […]

உலகம்

ஈரானுக்கும் – சீனாவுக்கும் இடையில் ஆயுதங்கள் கைமாறியதா?

  • May 31, 2026
  • 0 Comments

மத்தியக் கிழக்கில் இடம்பெறும் மோதலில் அமெரிக்காவின் போர் விமானம் ஒன்றை ((F-15E ஸ்ட்ரைக் ஈகிள்) ஈரானிய படையினர் சுட்டு வீழ்த்தினர். இந்த விமானத்தை சுட்டு வீழ்த்த சீனாவின் ஏவுகணை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று புதிய தகவல் கசிந்துள்ளது. ஈரான் பயன்படுத்திய குறித்த ஏவுகணை  தோளில் வைத்து பயன்படுத்தப்படும் சிறந்த ஏவுகணையாக கருதப்படுகிறது. இந்த வகை ஏவுகணைகள், முறையாக மனிதனால் எடுத்துச் செல்லக்கூடிய வான் பாதுகாப்பு ஆயுதங்கள் அல்லது மேன்பேட்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை சுமார் ஏழு அடி நீளமும், […]

உலகம்

தைவான், சீனா விவகாரம் அணுவாயுத நெருக்கடியை உருவாக்கும்!!

  • May 28, 2026
  • 0 Comments

தைவான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்படும் இராணுவ மோதல், விரைவாக ஒரு அணு நெருக்கடியாக உருவெடுக்கக்கூடும் என்று புதிய பாதுகாப்பு மதிப்பீடு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. தைவானுக்கு வொஷிங்டன் அளித்து வரும் பாதுகாப்பையும் பெய்ஜிங் கடுமையாக விமர்சித்துள்ளது. லண்டனைத் தளமாகக் கொண்ட பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பான சர்வதேச மூலோபாய ஆய்வுக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் சுடடிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் ஆசிய-பசிபிக் பகுதியை மையமாகக் கொண்ட” ஒரு புதிய அணு ஆயுதப் போட்டியின் விளிம்பில் […]

உலகம்

சீனாவில் லொறியொன்றுடன் மோதிய பேருந்து – 13 பேர் உயிரிழப்பு!

  • May 28, 2026
  • 0 Comments

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் சிறிய ரக பேருந்து ஒன்று லொறியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பேருந்தில் 09 பேர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டிருந்தாலும், விபத்து நடந்தபோது 16 பேர் இருந்துள்ளதாக சீனாவின் பொது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக அதிகாரிகள் பணிக்குழுவொன்றை நியமித்துள்ளனர். மேலும் மோசமான பாதுகாப்புத் தரங்கள் மற்றும் பொறுப்பற்ற ஓட்டுதல் காரணமாக அதிகளவிலான உயிரழப்புகள் ஏற்படுகின்றமை […]

அறிவியல் & தொழில்நுட்பம்

சந்திரனில் மனிதர்களை தரையிறக்க நாசா முயற்சி !! போட்டிக்கு வந்த சீனா!

  • May 27, 2026
  • 0 Comments

சந்திரனில் தளம் ஒன்றை அமைப்பதற்கான திட்டத்தையும், அதற்காகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ள வாகனங்களையும் நாசா சமீபத்தில் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியது. இந்தத் திட்டங்களில்  ரோபோ தரையிறங்கி, ட்ரோன்கள் மற்றும்  பிற வாகனங்கள் அடங்கியுள்ளன. 2029 இல் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, சந்திரனில் மனிதர்களைத் தரையிறக்குவதே நாசாவின் திட்டமாகும். மேலும், 2032-க்குள் சந்திரனின் தென் துருவத்தில் 20 பில்லியன் டொலர் செலவில் அணுசக்தி மற்றும் சூரிய சக்தியால் இயங்கும்  தளமொன்றை  அமைக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். […]

உலகம்

சீனாவில் அதிகரிக்கும் முதியோர்களின் எண்ணிக்கை : தவிடுபொடியாகும் வல்லரசு கனவு!

  • May 26, 2026
  • 0 Comments

சீனாவில் தற்போது 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை விட 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகமாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தேசிய புள்ளியியல் பணியகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எழுபது ஆண்டுகளுக்கு முன்பு பதிவுகள் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்த மைல்கல்லை எட்டுவது இதுவே முதல் முறையாகும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மக்கள்தொகை சரிவை மாற்றுவதற்கு அதிகாரிகள் முயன்று வரும் நிலையில், இந்த தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. சீனாவின் ஏறக்குறைய 1.4 பில்லியன் மக்கள்தொகையில், குறைந்தது 15.87 சதவீதத்தினர் 65 […]

உலகம்

தைவானை சுற்றி இராணுவ பயிற்சி : பரபரப்பை ஏற்படுத்திய சீனா!

  • May 26, 2026
  • 0 Comments

தைவானைச்  சுற்றி சீனா இராணுவ பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. நேற்றைய தினம் ஜே-16 ரகப் போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் உள்ளிட்ட 21 சீன விமானங்களை கண்டதாக தைவான் குறிப்பிட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் தைவானுக்கு அருகில் சீனா மேற்கொள்ளும் இரண்டாவது  இராணுவப் பயிற்சி இதுவாகும். இதைத் தொடர்ந்து, தைவான் தனது சொந்தக் கப்பல்களையும் போர் விமானங்களையும் கண்காணிப்புக்காக அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது. தைவான் விவகாரம் தொடர்பாக சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கிற்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

புற்றுநோயை கண்டறியும் செயல்முறையை எளிதாக்கிய சீனா!! வீட்டிலேயே பரிசோதனை செய்யலாம்!

  • May 25, 2026
  • 0 Comments

ஒரு துளி இரத்தத்தில் இருந்து நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிய உதவும் வகையிலான தொலைப்பேசி ஒன்றை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இது ஒரு புரட்சிகரமான முன்னேற்றமாகும், இது நோயை எளிதாகவும் சரியான நேரத்திலும் கண்டறிய உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புற்றுநோயைக் கண்டறிய பொதுவாகப் பெரிய கருவிகள் தேவைப்படுவதால், பரிசோதனைகளுக்கு காலதாமதம் ஏற்படுகிறது. இது நோயை குணப்படுத்துவதிலும் பாரிய தாக்கத்தை செலுத்துகிறது. இதற்கு தீர்வாக தொலைப்பேசி வடிவிலான கருவியை சீன விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர். இந்தப் புதிய கருவியில் […]