இலங்கை

கொழும்பு வாழ் மக்களுக்கு அவசர அறிவிப்பு!

  • June 5, 2026
  • 0 Comments

கொழும்பின் சில பகுதிகளுக்கான நீர் விநியோகம் இன்று இரவு 08.00 மணிவரை தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பத்தலேயிலிருந்து கொலன்னாவாவிற்கு நீரைக் கொண்டு செல்லும் பிரதான விநியோகக் குழாயில் ஏற்பட்ட அவசரகால பழுது காரணமாக நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை (NWSDB) அறிவித்துள்ளது. அதன்படி, மொரகஸ்முல்ல, ராஜகிரிய, நாவல, ஒபேசேகரபுர மற்றும் கொலன்னாவா மாநகர சபையின் கீழ் உள்ள பகுதிகளுக்கு நீர் விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டிய கட்டாயம் […]

இலங்கை

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் 226 நபர்களைக் கைது செய்ய சிவப்பு அறிவிப்பு வெளியீடு!

  • May 23, 2026
  • 0 Comments

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும்  பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 226 நபர்களைக் கைது செய்வதற்காக சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட பிரதி காவல்துறைத் தலைவர் நிஷாந்த சொய்சா தெரிவித்தார். அவர்களில் ஏறக்குறைய 90 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றியபோது அவர் இந்த தகவலை வெளியிட்டார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், 35 சந்தேக நபர்களுக்கு சிவப்பு அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போதைய அரசாங்கம் […]

இலங்கை

நாளை விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டம்

  • April 30, 2026
  • 0 Comments

நாளை (01) சர்வதேச மே தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளில் மே தினப் பேரணிகள், கூட்டங்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதையொட்டி கொழும்பு நகரில் பொலிஸாரால் விசேட பாதுகாப்பும் போக்குவரத்துத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. முக்கியமான கூட்டங்கள் மற்றும் பேரணிகள் கொழும்பு நகரை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ள அதேவேளை, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தின நினைவேந்தல் நிகழ்வுகள் நாட்டின் ஏனைய பகுதிகளில் நடத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை

“ஏஹி பஸ்ஸிகோ” சர்வதேச அமைதி நடைபயணம் இன்று நிறைவு

  • April 28, 2026
  • 0 Comments

உலகிற்கு அமைதியின் செய்தியைக் கொண்டு செல்லும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “ஏஹி பஸ்ஸிகோ” சர்வதேச அமைதிப் நடைபயணத்தின் இறுதி நாள் இன்றாகும். இன்று நண்பகல் 12 மணியளவில் களனி ரஜமகா விகாரையில் இருந்து ஆரம்பமாகும் இந்த அமைதி நடைபயணம், சுதந்திர சதுக்கத்தை நோக்கிப் பயணிக்கவுள்ளது. மாலை 4 மணியளவில் சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் விசேட அரச நிகழ்வொன்று நடைபெறவுள்ளது. இந்நிகழ்வைத் தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் சுதந்திர சதுக்கத்தில் இருந்து மீண்டும் ஆரம்பமாகும் நடைபயணம், […]

இலங்கை செய்தி

கொழும்பு துறைமுகத்தில் இந்திய போர்க்கப்பல்

  • April 21, 2026
  • 0 Comments

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ‘INS NIREEKSHAK’ போர்க்கப்பல், கொழும்புத் துறைமுகத்தை இன்று (21) வந்தடைந்தது. இலங்கைக் கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கமைய இந்த கப்பலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த டைவிங் ஆதரவு கப்பல் வகையைச் சார்ந்த இக்கப்பலின் கட்டளை அதிகாரியாக கொமாண்டர் சைலேஷ் குமார் தியாகி (Sailesh Kumar Tyagi) செயற்படுகின்றார். குறித்த போர்க்கப்பல் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், இலங்கைக் கடற்படையுடன் இணைந்து கலப்பு வாயு முக்குளிப்புப் பயிற்சித் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. இதன் மூலம் இரு […]

இலங்கை

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தை சேதப்படுத்திய நபர் விளக்கமறியலில்

  • April 12, 2026
  • 0 Comments

புதுப்பிக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் எதிர்வரும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 33 வயதுடைய குறித்த சந்தேகநபர் நபர் நேற்றைய தினம் (11) களனி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், சந்தேகநபர் இன்று (12) கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஏப்ரல் 17 ஆம் திகதி வரையில் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

இலங்கை

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கு இடையே மோதல்

  • April 10, 2026
  • 0 Comments

கொழும்பு மாநகர சபையின் இரு உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட தர்க்கம் மோதலாக மாறியதில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (09) மாலை இடம்பெற்றுள்ளது. வாய்த்தர்க்கம் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பாக கறுவாத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கை

33,000 லீற்றர் எரிபொருளுடன் விபத்துக்குள்ளான பௌசர்!

  • April 8, 2026
  • 0 Comments

பதுளை – கொழும்பு பிரதான வீதியின் புவகஹவெல பகுதியில் எரிபொருள் தாங்கி பௌசர் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த எரிபொருள் தாங்கி பௌசரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, பௌசரில் ஏற்பட்ட இயந்திர பிரச்சினைக் காரணமாகவே இந்த விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்குள்ளான பௌசரில் சுமார் 33,000 லீற்றர் எரிபொருள் இருந்ததாகக் கூறப்படுகிறது. பௌசர் வீதியில் கவிழ்ந்ததையடுத்து, அதிலிருந்த பெருமளவிலான எரிபொருள் வீதியெங்கும் பரவி ஓடியது. விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த பிரதேச […]

இலங்கை

கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

  • March 30, 2026
  • 0 Comments

போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில், நீர்கொழும்பு பகுதியில் இன்று (30) பிற்பகல் கார் ஒன்றின் மீது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுடன் அந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், இந்தச் சம்பவத்தின் போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரி ஒருவரும் காயமடைந்துள்ளார். இதேவேளை, காரில் இருந்த இருவர் 500 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை

கொழும்பில் 5 மணிநேர நீர்வெட்டு!

  • March 29, 2026
  • 0 Comments

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின்சார விநியோகம் தடைப்படுவதன் காரணமாக, இன்று (29) ஞாயிற்றுக்கிழமை பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை (5 மணித்தியாலங்கள்) இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. தெஹிவளை – கல்கிசை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகள் (களுபோவில, தெஹிவளை, கல்கிசை, இரத்மலானை மொரட்டுவ – ராவத்தாவத்தை மற்றும் சொய்சாபுர ஆகிய பகுதிகளுக்கு […]