இலங்கை

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தை சேதப்படுத்திய நபர் விளக்கமறியலில்

  • April 12, 2026
  • 0 Comments

புதுப்பிக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் எதிர்வரும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 33 வயதுடைய குறித்த சந்தேகநபர் நபர் நேற்றைய தினம் (11) களனி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், சந்தேகநபர் இன்று (12) கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஏப்ரல் 17 ஆம் திகதி வரையில் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

இலங்கை

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கு இடையே மோதல்

  • April 10, 2026
  • 0 Comments

கொழும்பு மாநகர சபையின் இரு உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட தர்க்கம் மோதலாக மாறியதில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (09) மாலை இடம்பெற்றுள்ளது. வாய்த்தர்க்கம் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பாக கறுவாத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கை

33,000 லீற்றர் எரிபொருளுடன் விபத்துக்குள்ளான பௌசர்!

  • April 8, 2026
  • 0 Comments

பதுளை – கொழும்பு பிரதான வீதியின் புவகஹவெல பகுதியில் எரிபொருள் தாங்கி பௌசர் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த எரிபொருள் தாங்கி பௌசரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, பௌசரில் ஏற்பட்ட இயந்திர பிரச்சினைக் காரணமாகவே இந்த விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்குள்ளான பௌசரில் சுமார் 33,000 லீற்றர் எரிபொருள் இருந்ததாகக் கூறப்படுகிறது. பௌசர் வீதியில் கவிழ்ந்ததையடுத்து, அதிலிருந்த பெருமளவிலான எரிபொருள் வீதியெங்கும் பரவி ஓடியது. விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த பிரதேச […]

இலங்கை

கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

  • March 30, 2026
  • 0 Comments

போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில், நீர்கொழும்பு பகுதியில் இன்று (30) பிற்பகல் கார் ஒன்றின் மீது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுடன் அந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், இந்தச் சம்பவத்தின் போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரி ஒருவரும் காயமடைந்துள்ளார். இதேவேளை, காரில் இருந்த இருவர் 500 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை

கொழும்பில் 5 மணிநேர நீர்வெட்டு!

  • March 29, 2026
  • 0 Comments

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின்சார விநியோகம் தடைப்படுவதன் காரணமாக, இன்று (29) ஞாயிற்றுக்கிழமை பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை (5 மணித்தியாலங்கள்) இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. தெஹிவளை – கல்கிசை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகள் (களுபோவில, தெஹிவளை, கல்கிசை, இரத்மலானை மொரட்டுவ – ராவத்தாவத்தை மற்றும் சொய்சாபுர ஆகிய பகுதிகளுக்கு […]

இலங்கை

ஏப்ரல் 1 முதல் கொழும்பில் விசேட பாதுகாப்புத் திட்டம்

  • March 28, 2026
  • 0 Comments

இவ்வருட சித்திரை புத்தாண்டு காலத்தை முன்னிட்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் விசேட பாதுகாப்புத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். புத்தாண்டு காலத்தில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரிப்பதைக் கருத்திற்கொண்டு, விசேடமாக போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அதிகளவில் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களின் புகையிரத நிலையங்கள் மற்றும் […]

இலங்கை முக்கிய செய்திகள்

தெற்கு அதிவேக வீதியில் பற்றி எரிந்த சொகுசு பேருந்து

  • March 27, 2026
  • 0 Comments

கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த பயணிகள் போக்குவரத்து சொகுசு பேருந்து ஒன்று, தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன இடைமாறல் பகுதிக்கு அருகில் இன்று (27) தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளது. இந்த தீ விபத்தினால் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில்  மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கை

மலைப்பாம்பை கழுத்தில் சுற்றி இளம் பெண் நடனம்: கைது செய்யுமாறு உத்தரவு

  • March 24, 2026
  • 0 Comments

கொழும்பில் நடைபெற்ற “ரோயல் அவுருது குமரி” தெரிவு விழாவின் போது, மலைப்பாம்பு ஒன்றினை கழுத்தில் சுற்றிக்கொண்டு நடனமாடிய பெண் ஒருவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்திற்கு கொழும்பு மேலதிக நீதவான் எச்.டி.டி.ஜே. பிரேமரத்ன நேற்று (23) உத்தரவிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்தச் சம்பவம் தொடர்பான காணொளிகளின் அடிப்படையில் வனவிலங்கு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கொழும்பில் உள்ள ‘ரோயல் மார்க்ஸ் அரினா’ (Royal Marks Arena) வளாகத்தில் ஆடை அலங்காரக் கலைஞர் […]

இலங்கை

பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

  • March 24, 2026
  • 0 Comments

நாட்டில் நிலவும் கடும் வெப்பத்துடனான வானிலை காரணமாக, சிறுவர்கள் நீர்ச்சோர்வினால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கப் பெற்றோர்கள் அவதானத்துடன் இருக்குமாறு கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நல வைத்தியர் தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார். அதிகப்படியான தூக்கக்கலக்கம் அல்லது சோம்பல், பசியின்மை, உடல் வலி போன்ற அறிகுறிகள் சிறுவர்களிடம் தென்பட்டால் அவர்கள் நீர்ச்சோர்வினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையில் சிறுவர்களுக்கு அதிகளவு நீர் மற்றும் இயற்கையான பானங்களை (Natural fluids) வழங்குவது அவசியமாகும் […]

இலங்கை செய்தி

மீண்டும் வாகன தரிப்பிடக் கட்டணம் அறவீடு!

  • March 22, 2026
  • 0 Comments

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த வாகன தரிப்பிடக் கட்டணங்கள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் அறிவித்துள்ளார். நிர்வாகக் காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்தக் கட்டண அறவீடு நடவடிக்கைகள், நாளை (23) முதல் வழமை போன்று முன்னெடுக்கப்படவுள்ளன. இதேவேளை, விதிகளை மீறி வாகனங்களை நிறுத்துபவர்கள் மற்றும் கட்டணம் செலுத்தத் தவறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர சபை எச்சரித்துள்ளது.

error: Content is protected !!