செய்தி

அமைதி முயற்சிக்கு இந்தியா முழு ஆதரவு!

  • May 23, 2026
  • 0 Comments

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ Marco Rubio, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இதன்போது பாதுகாப்பு, தொழில்நுட்பம், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, இணைப்பு, கல்வி மற்றும் மக்கள் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான முன்னேற்றம் குறித்து பிரதமருக்கு மார்கோ ரூபியோ விளக்கமளித்துள்ளார். மேற்கு ஆசிய போர் நிலைவரம் உட்பட பல்வேறு பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த அமெரிக்காவின் கண்ணோட்டத்தை இந்திய […]

உலகம் ஐரோப்பா செய்தி

பிரான்சுக்குள் நுழைய இஸ்ரேல் அமைச்சருக்கு தடை!

  • May 23, 2026
  • 0 Comments

சமூக ஆர்வலர்களை அவமதிக்கும் வகையில் வீடியோ வெளியிட்ட இஸ்ரேல் அமைச்சர் Itamar Ben-Gvir பிரான்சுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. சர்வதேச கடற்பரப்பில் தடுத்து நிறுத்தப்பட்ட தன்னார்வலர்களைக் கட்டிப்போட்டு ,அவர்கள் வதைக்குட்படுத்தப்படும் காணொளியை இவர் வெளியிட்டிருந்தார். இஸ்ரேலின் இந்த செயலுக்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சும் கண்டனக் கணைகளைத் தொடுத்துள்ளது. இந்தச் செயல் மனித கண்ணியத்திற்கு எதிரானது என்றும், இத்தகைய வன்முறையைத் தூண்டும் போக்கை சகித்துக்கொள்ள முடியாது என்றும் […]

அரசியல் இலங்கை செய்தி

யாழில் NPP பிரதான அலுவலகம் திறப்பு!

  • May 23, 2026
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதான அலுவலகம், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம், அரியாலை, கண்டி வீதியின் இலக்கம் 295 என்ற முகவரியில் அமைந்துள்ள இந்த புதிய பிரதான அலுவலகம், இன்று நண்பகல் 12 மணியளவில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவினால் நாடா வெட்டப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டது. இந்தக் கட்சி அலுவலகத் திறப்பு விழாவில், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவுடன், கடற்றொழில் […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

கோவை சிறுமி வன்கொடுமை சம்பவம்: கடும் நடவடிக்கைக்கு முதல்வர் உத்தரவு!

  • May 23, 2026
  • 0 Comments

கோவையில் சிறுமியொருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும் என தமிழக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். “கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.” என தனது எக்ஸ் தள பக்கத்தில் முதல்வர் பதிவிட்டுள்ளார். தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் […]

அரசியல் இலங்கை செய்தி

13 ஐ முழுமையாக அமுலாக்க ஆதரவு: கனடா தூதுவரிடம் சஜித் உறுதி!

  • May 23, 2026
  • 0 Comments

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், இலங்கைக்கான கனடா தூதுவர் Isabelle Catherine Martin ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஜனநாயக ஆட்சி, மனித உரிமை மற்றும் இன நல்லிணக்கம் தொடர்பாக இரு தரப்பினரும் இதன்போது கலந்துரையாடினர். மாகாண சபை தேர்தலை நடத்துவது ஜனநாயகத்தின் இன்றியமையாத என சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான தனது உறுதியான அரசியல் அர்ப்பணிப்பை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தினார். இலங்கையின் […]

இலங்கை செய்தி

இலங்கையில் அடை மழை: 17 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு: மூவர் பலி!

  • May 23, 2026
  • 0 Comments

இலங்கையில் யாழ்ப்பாணம், புத்தளம் உட்பட 14 மாவட்டங்களில் நிலவும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் 17 ஆயிரத்து இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்து 622 குடும்பங்களை சேர்ந்த 17 ஆயிரத்து 736 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூவர் உயிரிழந்துள்ளனர்.357 வீடுகள் பகுதியளவும், 8 வீடுகள்முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. இரத்தினபுரி மாவட்டத்தில் ஆயிரத்து 57 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 912 பேரும், கொழும்பு மாவட்டத்தில் ஆயிரத்து 569 குடும்பங்களைச் […]

அரசியல் இலங்கை செய்தி

சர்வக்கட்சி கூட்டத்தை கூட்டுமாறு தமிழரசுக் கட்சியும் வலியுறுத்து!

  • May 23, 2026
  • 0 Comments

இலங்கை ரூபாவின் பெறுமதி சரிவு உட்பட பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பில் ஆராய்வதற்காக அனைத்து கட்சி குழு கூட்டத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் நேற்று (22) நாடாளுமன்றத்தில் வலியுறுத்தின. ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கயந்த கருணாதிலக்கவும், தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் நாடாளுமன்றக்குழுத் தலைவருமான சாணக்கியனுமே இந்த கோரிக்கையை விடுத்தனர். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று முன்தினம் அனைத்து எதிரணிகளின் பங்கேற்புடன் நடைபெற்ற கூட்டத்திலும், சர்வக்கட்சி கூட்டத்தை கூட்டுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

உலகம் செய்தி

ஈரானின் கோரிக்கைகளை ட்ரம்ப் கட்டாயம் ஏற்க வேண்டும்!

  • May 23, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு ஈரானின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று ஈரான் பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் Reza Talaei-Nik எச்சரித்துள்ளார். ஈரானிய மக்களின் உரிமைகளை அமெரிக்கா அங்கீகரிக்கத் தவறினால், அது அந்நாட்டிற்கு மேலும் பல தோல்விகளை மட்டுமே தரும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய மோதல்களில் இருந்து அமெரிக்கா தப்பிக்க வேண்டுமானால், அது போர்க்களத்திலும் இராஜதந்திர ரீதியிலும் ஈரானின் நிபந்தனைகளுக்கு அடிபணிய வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார். இந்த மோதலைத் தொடர்வது […]

அரசியல் இலங்கை செய்தி

” பிரபாகரனை உயிருடன் பிடிக்கும் திட்டம் இருக்கவில்லை”

  • May 23, 2026
  • 0 Comments

“பிரபாகரனை உயிருடன் பிடிக்கும் திட்டம் இருக்கவில்லை. புலிகள் அமைப்பை முற்றாக ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடனேயே திட்டங்களை வகுத்தேன்.” – என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டு கொழும்புக்கு கொண்டுவரப்பட்டார் எனக் கூறப்படுவது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “ புலிகளை உயிருடன் பிடித்து அவர்களுடன் பேச்சு நடத்தும் நோக்கில் நான் போர் வியூகம் […]

ஆஸ்திரேலியா செய்தி

காசா விடயத்தில் பிரிட்டன் இரட்டை வேடம்!

  • May 23, 2026
  • 0 Comments

காசா விவகாரத்தில் பிரிட்டன் வெளிவிவகாரச் செயலர் Yvette Cooper இரட்டை வேடம் போடுகின்றார் என்று சர்வதேச சட்ட நிபுணரும், மனித உரிமை சட்டத்தரணியுமான Tayab Ali விமர்சித்துள்ளார். காசாவின் சுகாதாரக் கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது என Yvette Cooper கவலை வெளியிட்டுள்ள நிலையிலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் தேவை என்று ஒருபுறம் பேசிக்கொண்டு, மறுபுறம் இஸ்ரேலுக்கு தொடர்ந்து ராணுவ உதவிகளை பிரிட்டன் வழங்கிவருகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். போர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களை பிரிட்டன் அரசு […]

error: Content is protected !!