இலங்கை செய்தி

“செம்மணியில் 414 எலும்புக் கூடுகள் அடையாளம் – 409 அகழ்ந்தெடுப்பு”

  • July 15, 2026
  • 0 Comments

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணியின்போது இரு எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 32 நாட்கள் அகழ்வு பணிகள் இடம்பெற்ற நிலையில் , கடந்த 23ஆம் திகதியுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மூன்றாம் கட்டத்தின் 33ஆவது நாளான இன்றைய தினம் புதிதாக 2 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டன.. அவை […]

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணியின்போது இரு எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா செய்தி

பெண்களை கடத்த முயற்சி: மர்ம நபரை விரட்டியடித்த வளர்ப்பு நாய்கள்

  • July 15, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா – மெல்போர்னின் கிழக்கு பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தன்னையும், தனது தோழியையும் கடத்த முயன்ற  பயங்கரமான தருணத்தை நாய் வளர்ப்பாளர் ஒருவர் விவரித்துள்ளார். கிளென் ஐரிஸ் (Glen Iris) பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் மற்றும் டூராக் (Toorak) பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய பெண் ஆகிய இருவரும், கூயோங் (Kooyong) பகுதியில் உள்ள கார்டினர்ஸ் கிரீக் (Gardiners Creek) ஆற்றங்கரையில் அதிகாலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, புதர்களுக்குள் […]

யாழ்ப்பாணம், கஸ்தூரியார் வீதியில் வைத்து மூதாட்டி ஒருவரின் கழுத்தில் இருந்த இரண்டரை பவுண் தங்கச் சங்கிலி அறுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை செய்தி

யாழில் மூதாட்டியின் சங்கிலி அறுப்பு

  • July 15, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், கஸ்தூரியார் வீதியில் வைத்து மூதாட்டி ஒருவரின் கழுத்தில் இருந்த இரண்டரை பவுண் தங்கச் சங்கிலி அறுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை யாழ். இந்துக்கல்லூரிக்கு அருகிலுள்ள தேவாலயப் பகுதிக்குச் சமீபமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேற்படி மூதாட்டி, மற்றுமொருவருடன் மோட்டார் சைக்கிளின் பின்பக்கத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது, இலக்கத்தகடு அற்ற மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர்களைப் பின்தொடர்ந்து வந்துள்ளனர். திடீரென மூதாட்டியின் கழுத்தில் இருந்த சங்கிலியை அறுத்துக்கொண்ட அந்த நபர்கள், மின்னல் வேகத்தில் […]

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணியின்போது இரு எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செய்தி விளையாட்டு

சாதாரண ரசிகர்களுக்கு எட்டாக்கனி: உலகக் கிண்ண டிக்கெட் விலையால் சர்ச்சை

  • July 15, 2026
  • 0 Comments

FIFA உலகக் கிண்ணத் தொடரில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியைத் தோற்கடித்து ஸ்பெயின் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இதற்கிடையில், மற்றுமொரு இறுதிப் போட்டி இடத்திற்காக இங்கிலாந்து மற்றும் அர்ஜென்டினா அணிகள் புதன்கிழமை மோதவுள்ளன. இந்த கோடைகால உலகக் கிண்ணத் தொடரில் ஆரம்பத்திலிருந்தே டிக்கெட் விலைகள் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. சர்வதேச காற்பந்து சம்மேளனம் (FIFA), சாதாரண காற்பந்து ரசிகர்களால் வாங்க முடியாத அளவிற்கு டிக்கெட் விலைகளை அதிகமாக […]

ரஷ்யாவின் கூட்டாட்சி பாதுகாப்பு சேவை (FSB) உடன் தொடர்புடைய ஹேக்கர்களுக்கு, போதிய பாதுகாப்பு இல்லாத நெட்வொர்க் சாதனங்கள் (Network Devices) மிக எளிதான இலக்குகளாக அமைந்துவிடுவதாக ASD சுட்டிக்காட்டியுள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

இணைய உலகை உலுக்கும் ரஷ்ய ஹேக்கர்கள்

  • July 15, 2026
  • 0 Comments

  ரஷ்யாவின் கூட்டாட்சி பாதுகாப்பு சேவை (FSB) உடன் தொடர்புடைய ஹேக்கர்களுக்கு, போதிய பாதுகாப்பு இல்லாத நெட்வொர்க் சாதனங்கள் (Network Devices) மிக எளிதான இலக்குகளாக அமைந்துவிடுவதாக ASD சுட்டிக்காட்டியுள்ளது. ரஷ்ய உளவு அமைப்பான FSB-இன் கீழ் இயங்கும் இந்த சைபர் குற்றவாளிகள், உலகம் முழுவதும் உள்ள நிதிச் சேவைகள், சுகாதாரத் துறை, பாதுகாப்புத் துறை மற்றும் தகவல் தொடர்புத் துறை உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து செயல்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், மாநில மற்றும் உள்ளூர் […]

இலங்கை செய்தி

“ஜனநாயகத்தை வலுப்படுத்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கவும்”

  • July 15, 2026
  • 0 Comments

நிறைவேற்றுத்துறை, சட்டத்துறை மற்றும் நீதித்துறை ஆகியன ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான மூன்று பிரதான தூண்களாக விளங்குகின்றன. நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் நீதித்துறை மிக முக்கியப் பங்காற்றி வருகின்றது. இதற்கு மேலதிகமாக, சுயாதீன ஊடகங்களும் சிவில் சமூகமும் மற்றுமிரு முக்கிய தூண்களாகத் திகழ்கின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் நீதிமன்றத்திற்குப் பாரிய அழுத்தங்களைப் பிரயோகித்து வருவதாகக் குற்றம் சாட்டிய அவர், உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கும், உயர்நீதிமன்றங்களில் நிலவும் நீதியரசர்களின் வெற்றிடங்களை நிரப்பாது […]

இலங்கை செய்தி

சிறைச்சாலை கலவரம்: துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிக்கு இடமாற்றம்

  • July 15, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்திய சிறை அதிகாரி, விசாரணைகள் முடியும் வரை பல்லேகல சிறைச்சாலைக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிறைத்துறை ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க இந்த இடமாற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த ஜூலை 6 ஆம் திகதி, கைதிகள் குழுவொன்று சிறைச்சாலையின் இறுதி மரக் கதவை உடைத்துக் கொண்டு தப்பியோட முயன்றபோது இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. கைதிகள் சிறை அதிகாரிகள் மீது உயிருக்கு ஆபத்தான முறையில் தாக்குதல் நடத்தியதாகவும், […]

ஜனாதிபதி அநுரவின் பிரான்ஸ் பயணம் ஒத்திவைப்பு இலங்கை செய்தி

பிரான்ஸ் செல்ல அநுரவுக்கு விசா நிராகரிப்பா? அரசு மறுப்பு

  • July 15, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பிரான்சுக்கான உத்தியோகபூர்வ விஜயம், விசா பிரச்சினை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களை அரசாங்கம் நிராகரித்துள்ளது. “ பிரான்ஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான ராஜநத்திர ரீதியிலான பேச்சுகளைத் தொடர்ந்து ஜனாதிபதியின் விஜயத்திற்கான திகதிகள் நிர்ணயிக்கப்படும்.” எனவும் அவர் கூறினார். அமைச்சரை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார். “ சமூக ஊடகங்களில் பகிரப்படும் பதிவுகள் எப்போதும் நம்பகமானவை அல்ல. இவ்வாறான பதிவுகளை யார் […]

பாரசீக வளைகுடாவில் உச்சக்கட்ட பதற்றம்: ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிட அமெரிக்கா முடிவு உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள்மீது தாக்குதல்: ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை

  • July 15, 2026
  • 0 Comments

ஈரான்பேச்சுவார்த்தைக்கு வரத் தவறினால், அந்நாட்டின் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ” இறுதியில் நாங்கள் ஆற்றல் இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவோம்” என்று டிரம்ப் செவ்வாய்க்கிழமை இரவு பாக்ஸ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார். ” நாங்கள் இன்று இரவு அவர்கள் மீது மிகக் கடுமையான தாக்குதலை நடத்தப் போகிறோம், நாளை இரவும் அவர்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்துவோம்.அதன் பின்னர் அடுத்த வாரம் அவர்களுக்கு நிலைமை மிகவும் […]

பெண்ணுக்கு எதிராக வன்முறை: Hall Of Fame பட்டியலில் இருந்து நிக்கி வின்மர் அதிரடி நீக்கம்

  • July 15, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய கால்பந்து லீக்கின் (AFL) புகழ்பெற்ற முன்னாள் வீரரான நிக்கி வின்மர் (Nicky Winmar), ஆஸ்திரேலிய கால்பந்து புகழ் விருதுப் பட்டியலில் (Hall of Fame) இருந்து உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக AFL ஆணையம் இன்று அறிவித்துள்ளது. பெண் ஒருவருக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட மூன்று தாக்குதல் வழக்குகளில் (assault charges) நிக்கி வின்மர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்தே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய […]