பிரான்ஸின் போர்டோக்ஸ் (Bordeaux) நகரின் மேற்குப் பகுதியில் உள்ள 42,000 ஹெக்டேயர்களைத் தீக்கிரையாக்கிய காட்டுத்தீ காரணமாக, இந்த வாரத்தில் சுமார் 224,000 மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியா ஐரோப்பா செய்தி

காட்டுத் தீயைக் கட்டுபடுத்த ஐரோப்பாவில் தீயணைப்பு ஹெலிகொப்டர்களை களமிறக்கும் ஆஸ்திரேலியா

  • August 1, 2026
  • 0 Comments

பிரான்ஸின் போர்டோக்ஸ் (Bordeaux) நகரின் மேற்குப் பகுதியில் உள்ள 42,000 ஹெக்டேயர்களைத் தீக்கிரையாக்கிய காட்டுத்தீ காரணமாக, இந்த வாரத்தில் சுமார் 224,000 மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ‘எல் நினோ’ (El Niño) காரணியால் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள கூடுதல் வெப்பம் காரணமாக, அட்லாண்டிக் கடற்கரை முதல் கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதி வரையிலான ஐரோப்பிய நாடுகளில் கடுமையான காட்டுத்தீ பரவி வருகின்றது. பிரான்ஸ் தவிர பிரித்தானியா (UK), ஸ்பெயின், ஜெர்மனி, கிரீஸ் […]

வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஸ்பெயினின் தன்னாட்சிப் பிரதேசமான 'செவுடா' (Ceuta) எல்லைக்குள் தரை மற்றும் கடல் வழியே நுழைந்த சுமார் 60,000 அகதிகளில் பெரும்பாலானோர், தானாகவே மீண்டும் மொராக்கோவிற்குத் திரும்பியுள்ளதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது. ஐரோப்பா செய்தி

ஸ்பெயினின் எல்லையைக் கடக்க முயன்ற 67 அகதிகள் பலி

  • August 1, 2026
  • 0 Comments

வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஸ்பெயினின் தன்னாட்சிப் பிரதேசமான ‘செவுடா’ (Ceuta) எல்லைக்குள் தரை மற்றும் கடல் வழியே நுழைந்த சுமார் 60,000 அகதிகளில் பெரும்பாலானோர், தானாகவே மீண்டும் மொராக்கோவிற்குத் திரும்பியுள்ளதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது. செவுடா எல்லைக்குள் நுழைய முயன்றபோது உயிரிழந்த அகதிகளின் எண்ணிக்கை சனிக்கிழமை நிலவரப்படி குறைந்தது 67 ஆக உயர்ந்துள்ளதாக ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எல்லைச் சுவரின் கடலலைத் தடுப்பில் ஏற முயன்றபோது நசுங்கியும், கடலில் மூழ்கியுமே பெரும்பாலானோர் உயிரிழந்துள்ளனர். எல்லைக்கு மறுபுறமுள்ள மொராக்கோ […]

மஹர சிறைச்சாலைக்குள் இன்று மாலை ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையில் 4 கைதிகள் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை செய்தி

மஹர சிறைக்குள் மோதல்: நான்கு கைதிகள் காயம்

  • August 1, 2026
  • 0 Comments

மஹர சிறைச்சாலைக்குள் இன்று மாலை ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையில் 4 கைதிகள் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. கைதிகள் சிலருக்கிடையில் ஏற்பட்ட மோதலாலேயே இந்த குழப்பநிலை ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது. அத்துடன், சிறைச்சாலைக்குள் கட்டிடமொன்றில் தீ பரவலும் ஏற்பட்டுள்ளது. பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக்காக களமிறக்கப்பட்டுள்ளனர். அதேபோல சிறைச்சாலைக்கு வெளியே கைதிகளின் உறவிகனர்கள் குவிந்துள்ளனர். தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் என்பனவும் சிறைச்சாலைக்குள் சென்றுள்ளன. காயமடைந்த நால்வர் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தடுக்கத் தவறியதற்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட இரண்டு உயர்மட்ட முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகளும், தங்கள் தண்டனைத் தீர்ப்புகளுக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக அவர்களின் சட்டத்தரணி  தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி மத்திய கிழக்கு

மரண தண்டனைக்கு எதிராக இருவரும் மேன்முறையீடு

  • August 1, 2026
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தடுக்கத் தவறியதற்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட இரண்டு உயர்மட்ட முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகளும், தங்கள் தண்டனைத் தீர்ப்புகளுக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக அவர்களின் சட்டத்தரணி  தெரிவித்துள்ளார். முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு, கொழும்பு மேல்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, நேற்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக இருவரும் இரண்டு வாரங்களுக்குள் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வார்கள் என்று, […]

மஹர சிறைச்சாலைக்குள் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை செய்தி

மஹர சிறைச்சாலையில் பதற்றம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

  • August 1, 2026
  • 0 Comments

மஹர சிறைச்சாலைக்குள் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூழ்நிலையை மதிப்பிடுவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும்  சிறப்பு காவல் குழுக்கள் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், காவல்துறை தெரிவித்துள்ளது. சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட குழப்பங்களுக்கான காரணம் அல்லது ஏதேனும் காயங்கள் ஏற்பட்டதா என்பது குறித்த மேலதிக விவரங்கள் உடனடியாகக் கிடைக்கவில்லை. எனினும், சிறைச்சாலை வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகம் செய்தி

இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் 24 மணி நேரத்துக்குள் ஏழு பேர் பலி

  • August 1, 2026
  • 0 Comments

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 2023 முதல் தற்போது வரை ஒட்டுமொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 73,349 ஆக உயர்ந்துள்ளது. போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதோடு, இடிபாடுகளுக்குள் இருந்து நூற்றுக்கணக்கான உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட மரணங்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களின் புள்ளிவிவரங்களையும் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.

கர்நாடகாவில் காவிரி விவகாரத்தால் பதற்றமான சூழல் நிலவுவதால், தமிழக முதல்வர் விஜய் பெங்களூருவுக்கு வருகை தருவது சரியாக இருக்காது எனக் கூறி, அவருடனான சந்திப்பைச் சிறிது காலத்திற்கு ஒத்திவைப்பதாகக் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். இந்தியா செய்தி

விஜய்யுடனான சந்திப்பை இடைநிறுத்தினார் கர்நாடக முதல்வர்

  • August 1, 2026
  • 0 Comments

கர்நாடகாவில் காவிரி விவகாரத்தால் பதற்றமான சூழல் நிலவுவதால், தமிழக முதல்வர் விஜய் பெங்களூருவுக்கு வருகை தருவது சரியாக இருக்காது எனக் கூறி, அவருடனான சந்திப்பைச் சிறிது காலத்திற்கு ஒத்திவைப்பதாகக் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாகக் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரை நேரில் சந்தித்துப் பேசத் தமிழக முதல்வர் விஜய் நேரம் கேட்டிருந்தார். இதற்குச் சம்மதம் தெரிவித்த டி.கே.சிவகுமார், வரும் ஆகஸ்ட் 3-ம் திகதி இச்சந்திப்பு நடைபெறும் என […]

காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். செய்தி பொழுதுபோக்கு

விஜய்க்கு வந்த சோதனை: கர்நாடகாவில் ஜனநாயகன் நிறுத்தம்

  • August 1, 2026
  • 0 Comments

காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக, பெங்களூரு மற்றும் மண்டியா ஆகிய பகுதிகளில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையிடப்பட்டிருந்த திரையரங்குகளைக் கன்னட அமைப்பினர் முற்றுகையிட்டனர். மேலும், திரையரங்க வளாகங்களில் வைக்கப்பட்டிருந்த திரைப்படப் பேனர்களைக் கிழித்து எறிந்து தங்களது எதிர்ப்பைப் பதிவிட்டனர். கன்னட அமைப்பினரின் தீவிரப் போராட்டம் மற்றும் மிரட்டல் […]

நியூசிலாந்தில் நாய் பந்தயங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 150 பந்தய நாய்கள் சிறப்பு விமானங்கள் மூலம் ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

நியூசிலாந்தில் நாய் பந்தயத்துக்கு தடை: ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நாய்கள்

  • August 1, 2026
  • 0 Comments

நியூசிலாந்தில் நாய் பந்தயங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 150 பந்தய நாய்கள் சிறப்பு விமானங்கள் மூலம் ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. விலங்குகள் நலன் சார்ந்த கவலைகளால் நியூசிலாந்தில் இந்த விளையாட்டு நிறுத்தப்பட்டாலும், ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகளில் இது இன்னும் சட்டப்பூர்வமாகவே உள்ளது. இந்த நாய்கள் “துணை விலங்குகள்” என்ற அடிப்படையில் இறக்குமதி செய்யப்பட்டாலும், அவை அங்கு மீண்டும் பந்தயங்களில் ஈடுபடுத்தப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த இடமாற்றம் ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே இருக்கும் மறுவாழ்வுச் சிக்கல்களை மேலும் […]

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் நேரில் பார்வையிட்டு, பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக துறைசார் அதிகாரிகளுடன் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார். இலங்கை செய்தி

பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணி குறித்து அமைச்சர் ஆராய்வு

  • August 1, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் நேரில் பார்வையிட்டு, பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக துறைசார் அதிகாரிகளுடன் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார். வட மாகாணத்தின் விமானப் போக்குவரத்து மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு ஏற்ப மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். இதன்போது, பயணிகள் […]