உலகம்

அல்ஜீரியாவில் கோர விபத்தில் சிக்கிய பயணிகள் பேருந்து – 25 பேர் உயிரிழப்பு

  • July 31, 2026
  • 0 Comments

அல்ஜீரியாவின் பூமெர்டெஸ் (Boumerdès) மாகாணத்தில் இன்று இடம்பெற்ற பேருந்து விபத்தில், 25 பேர் உயிரிழந்துள்ளதாக  குடிமைப் பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது. அதேநேரம்  44 பேர் காயமடைந்ததாகவும், அவர்கள்  அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகின்ற நிலையில், சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்தியா

நச்சு வாயு கசிவால் சுரங்க பாதையில் ஏற்பட்ட விபத்து – 10 பேர் உயிரிழப்பு

  • July 21, 2026
  • 0 Comments

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் உள்ள ஒரு நீர்மின் திட்டத்தில் கட்டுமானத்தில் இருந்த சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில், குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 17 பேரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இமயமலைப் பகுதியில், பூட்டான் மற்றும் திபெத் எல்லையருகே உள்ள சமர்துங் கிராமத்தில், நேற்று இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. அரசுக்குச் சொந்தமான தேசிய நீர்மின் சக்தி கழகத்தின் (NHPC) 500 மெகாவாட் திட்டத்திற்காக, டீஸ்டா ஆற்றின் மீது கட்டுமானப் பணிகள் இடம்பெற்ற போதே இந்த […]

இலங்கை

கல்முனையில் சோகம் – பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய நபர் பலி

  • July 16, 2026
  • 0 Comments

கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதி மருதமுனைக்கு அண்மையில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் பேருந்தின் அடியில் சிக்கிய நிலையில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை இருந்து கதிர்காமம் நோக்கி சென்ற பேருந்தில் கல்முனை பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்களில் பயணித்த நபர் பேருந்தின் முன்சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் 36 வயதுடைய  தியாகராஜா ஜெயகிருஸ்ணன்  என்பரே […]

உலகம்

பாகிஸ்தானில் சோகம் – இஸ்லாமாபாத் சென்ற 40 பேர் பலி!

  • July 3, 2026
  • 0 Comments

பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் இன்று பேருந்தொன்று பள்ளத்தாக்கில் கவிழந்து விபத்துக்குள்ளானது. இதில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த பேருந்து, மாகாணத் தலைநகரான குவெட்டாவிலிருந்து தேசியத் தலைநகரான இஸ்லாமாபாத்திற்குச் சென்று கொண்டிருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் 48 பயணிகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  

உலகம்

லண்டன் புறப்பட தயாரான விமானத்தில் வெடிப்பு சம்பவம்

  • June 19, 2026
  • 0 Comments

டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்திலிருந்து நேற்றைய தினம் லண்டனுக்குப் புறப்படத் தயாராக இருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணி ஒருவரின் கையடக்க தொலைபேசி திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதன்காரணமாக பாதுகாப்பு அச்சுறுத்தல் கருதி  குறித்த விமானம் அதன்  நிறுத்தத்திற்கே திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் ஓடுபாதையை நோக்கி நகரத் தொடங்கியபோது இந்த அனர்த்தம் நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த 211 பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்று ஜப்பானிய போக்குவரத்து அதிகாரிகள்  […]

உலகம்

ஜிம்பாப்வேயில் ரயிலுடன் பேருந்து மோதி விபத்து – 09 பேர் பலி

  • June 16, 2026
  • 0 Comments

ஜிம்பாப்வேயில் ரயில் ஒன்றுடன் பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளனாதில் குறைந்தது 09 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறைந்தது 25 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரயில் கடவையில்  இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேருந்து ஓட்டுநர் தண்டவாளத்தைக் கடப்பதற்கு முன்பு, ரயில் வருகிறதா என்பதை சரிபார்க்க தவறியதன் காரணமாக இந்த விபத்து நேர்ந்ததாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஜிம்பாப்வேயில் சாலை விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன; சராசரியாக தினமும் ஐந்து பேர் உயிரிழக்கின்றனர் மற்றும் 38 பேர் […]

உலகம்

எத்தியோப்பியாவில் கோர விபத்து – 31 பேர் பலி!

  • June 16, 2026
  • 0 Comments

எத்தியோப்பியாவின் வடக்கு அம்ஹாரா பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று டெஸ்ஸி பகுதியிலிருந்து தலைநகர் அடிஸ் அபாபாவிற்குச் சென்று கொண்டிருந்த பேருந்து பள்ளத்தாக்கொன்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. அப்பகுதியில் அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள் இல்லாததால், அவசரகால உதவிகள் தாமதமானதாகவும், இதனால் பயணிகள் பொது வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. விபத்து நடந்தபோது பேருந்தில் ஏராளமான பயணிகள் இருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். […]

உலகம் முக்கிய செய்திகள்

அமெரிக்காவின் குண்டுவீச்சு விமானம் விபத்து – 08 பேர் உயரிழப்பு!

  • June 16, 2026
  • 0 Comments

அமெரிக்க விமானப்படையின் பி-52 ஸ்ட்ராடோஃபோர்ட்ரஸ் குண்டுவீச்சு விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு கலிபோர்னியாவில் உள்ள எட்வர்ட்ஸ் விமானப்படைத் தளத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் இந்த விபத்து இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குண்டுவீச்சு விமானம் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்ததாக அமெரிக்க விமானப் படையினர் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பில் கருத்து வெளியளிட்டுள்ள கர்னல் ஜேம்ஸ் ஹேய்ஸ்(James Hayes ), “இன்று, எட்வர்ட்ஸ் விமானப்படைத் தளம் ஒரு பயங்கரமான துயரத்தைச் சந்தித்துள்ளது, மேலும் […]

Breaking News உலகம் முக்கிய செய்திகள்

சோகத்தில் முடிந்த விமானப் பயணம் : 11 பயணிகள் பலி!

  • June 15, 2026
  • 0 Comments

11 பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் ஒன்று மிசூரியில்  விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை நேரத்தில் ஸ்கைடைவிங் செய்ய அவர்கள் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. விபத்து பட்லர் விமான நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமானம் ஒன்று கீழே விழுந்து எரிவதாக அவசரகால மீட்பு குழுவினருக்கு தகவல் கிடைக்கப்பெற்ற நிலையில் அக்குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளது. விபத்து நடந்த இடத்தில், பட்லர் காவல் துறை மற்றும் பேட்ஸ் கவுண்டி ஷெரிப் அலுவலகத்திற்கு உதவி […]

ஐரோப்பா

ஹங்கேரியில் கோர விபத்து – எழுவர் பலி!

  • June 12, 2026
  • 0 Comments

ஹங்கேரியில், கியோர் அருகே உள்ள M1 நெடுஞ்சாலையில் சிறிய ரக பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் ஏழு பேர் உயிரழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த பகுதியில் கட்டுமான நடவடிக்கையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது  பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்த அனைவரும்  வெளிநாட்டினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹங்கேரியப் பிரதமர் பீட்டர் மாக்யார் (Peter Magyar ) உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.