இலங்கை

மஹர சிறைச்சாலையை கண்காணிக்க பெல் விமானம் மற்றும் ட்ரோன் களமிறக்கம்

  • August 1, 2026
  • 0 Comments

மஹர சிறையில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையைக் கண்காணிக்க, பெல் 412 ரக விமானமும் ட்ரோன் ஒன்றும்  களமிறக்கப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது. மஹர சிறையில் ஏற்பட்ட கலவரத்தில், 7 கைதிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன், அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினரும், காவல்துறை சிறப்பு அதிரடிப் படையினரும் களமிறக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதிகளின் உறவினர்களும் சிறையைச் சுற்றித் திரண்டுள்ளதாகவும், அவர்களிடையே  அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில், சிறைக்குள் நிலவும் சூழ்நிலையைக் கண்காணிக்க விமானப்படை ஒரு விமானத்தையும் […]

இலங்கை முக்கிய செய்திகள்

ராகமவில் பொலிஸ் ஊரடங்கு அமுல்

  • August 1, 2026
  • 0 Comments

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்க பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. மஹர  சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, மறு அறிவிப்பு வரும் வரை அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்க பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஐரோப்பா

குழந்தைகளுக்கு இலவச பேருந்து சேவை – பிரித்தானியாவில் அறிமுகம்

  • August 1, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் குழந்தைகளுக்கு இலவச பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் அமுலுக்கு வரும் இந்த திட்டம் இம்மாதம் முழுவதும் தொடரும். இதற்கமைய ஐந்து முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெரும்பாலான உள்ளூர் பேருந்து சேவைகளில் இலவசமாகப் பயணிக்கலாம். கோடை விடுமுறையில் குடும்பங்கள் மீதான நிதிச் சுமையை குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, குடும்பங்களின் வாழ்க்கைச் செலவுகளுக்கு உதவுகிறது என்று போக்குவரத்துத் துறைக்கான மாநிலச் செயலாளர் ஹைடி அலெக்சாண்டர் (Heidi Alexander) […]

பிரான்ஸின் போர்டோக்ஸ் (Bordeaux) நகரின் மேற்குப் பகுதியில் உள்ள 42,000 ஹெக்டேயர்களைத் தீக்கிரையாக்கிய காட்டுத்தீ காரணமாக, இந்த வாரத்தில் சுமார் 224,000 மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியா ஐரோப்பா செய்தி

காட்டுத் தீயைக் கட்டுபடுத்த ஐரோப்பாவில் தீயணைப்பு ஹெலிகொப்டர்களை களமிறக்கும் ஆஸ்திரேலியா

  • August 1, 2026
  • 0 Comments

பிரான்ஸின் போர்டோக்ஸ் (Bordeaux) நகரின் மேற்குப் பகுதியில் உள்ள 42,000 ஹெக்டேயர்களைத் தீக்கிரையாக்கிய காட்டுத்தீ காரணமாக, இந்த வாரத்தில் சுமார் 224,000 மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ‘எல் நினோ’ (El Niño) காரணியால் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள கூடுதல் வெப்பம் காரணமாக, அட்லாண்டிக் கடற்கரை முதல் கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதி வரையிலான ஐரோப்பிய நாடுகளில் கடுமையான காட்டுத்தீ பரவி வருகின்றது. பிரான்ஸ் தவிர பிரித்தானியா (UK), ஸ்பெயின், ஜெர்மனி, கிரீஸ் […]

ஐரோப்பா

கீவில் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் – குறைந்தது 09 பேர் உயிரிழப்பு

  • August 1, 2026
  • 0 Comments

உக்ரைனின் தலைநகரான கீவ் மீது ரஷ்யா நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலில், குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் நான்கு குழந்தைகள் உட்பட 28 பேர் காயமடைந்துள்ளனர். ஷெவ்சென்கிவ்ஸ்கி (Shevchenkivskyi) மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்று சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கட்டிடத்தின்  கீழ் தளங்கள் இடிந்து விழுந்ததாகவும், மக்கள் உள்ளே சிக்கியிருப்பதாகவும் கீவ் மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்தார். இந்தத் தாக்குதல் நகரம் முழுவதும் உள்ள கிடங்குகளில் தீ விபத்துகளை  ஏற்படுத்தி, சேதத்தை அதிகரித்துள்ளதாகவும் அவர் […]

வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஸ்பெயினின் தன்னாட்சிப் பிரதேசமான 'செவுடா' (Ceuta) எல்லைக்குள் தரை மற்றும் கடல் வழியே நுழைந்த சுமார் 60,000 அகதிகளில் பெரும்பாலானோர், தானாகவே மீண்டும் மொராக்கோவிற்குத் திரும்பியுள்ளதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது. ஐரோப்பா செய்தி

ஸ்பெயினின் எல்லையைக் கடக்க முயன்ற 67 அகதிகள் பலி

  • August 1, 2026
  • 0 Comments

வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஸ்பெயினின் தன்னாட்சிப் பிரதேசமான ‘செவுடா’ (Ceuta) எல்லைக்குள் தரை மற்றும் கடல் வழியே நுழைந்த சுமார் 60,000 அகதிகளில் பெரும்பாலானோர், தானாகவே மீண்டும் மொராக்கோவிற்குத் திரும்பியுள்ளதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது. செவுடா எல்லைக்குள் நுழைய முயன்றபோது உயிரிழந்த அகதிகளின் எண்ணிக்கை சனிக்கிழமை நிலவரப்படி குறைந்தது 67 ஆக உயர்ந்துள்ளதாக ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எல்லைச் சுவரின் கடலலைத் தடுப்பில் ஏற முயன்றபோது நசுங்கியும், கடலில் மூழ்கியுமே பெரும்பாலானோர் உயிரிழந்துள்ளனர். எல்லைக்கு மறுபுறமுள்ள மொராக்கோ […]

ஐரோப்பா

நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றபோது தப்பிச் சென்ற கைதி – பொதுமக்களிடம் உதவி கோரல்

  • August 1, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஒருவர் சிறை வாகனத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது அவர் லிவர்பூல் நகர மையத்தில் தலைமறைவாக உள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். லிவர்பூலின் பிரின்சஸ் டிரைவைச் சேர்ந்த 22 வயதான ஸ்டீபன் க்ரிப் (Stephen Grzyb) என்ற நபரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார். அவர் கொள்ளை வழக்கு ஒன்றுடன் தொடர்புப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். க்ரிப், குட்டையான கருமையான முடியுடன் வெள்ளை நிறத்தவர் என்றும், கடைசியாகப் பார்த்தபோது அடர் நீல நிற […]

இலங்கை

மஹார  சிறைச்சாலை பதற்றம் – கைதி ஒருவர் உயிரிழப்பு

  • August 1, 2026
  • 0 Comments

மஹார  சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறைந்தது ஆறு பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹார  சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து ஏழு பேர் ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் காயங்களால் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

மஹர சிறைச்சாலைக்குள் இன்று மாலை ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையில் 4 கைதிகள் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை செய்தி

மஹர சிறைக்குள் மோதல்: நான்கு கைதிகள் காயம்

  • August 1, 2026
  • 0 Comments

மஹர சிறைச்சாலைக்குள் இன்று மாலை ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையில் 4 கைதிகள் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. கைதிகள் சிலருக்கிடையில் ஏற்பட்ட மோதலாலேயே இந்த குழப்பநிலை ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது. அத்துடன், சிறைச்சாலைக்குள் கட்டிடமொன்றில் தீ பரவலும் ஏற்பட்டுள்ளது. பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக்காக களமிறக்கப்பட்டுள்ளனர். அதேபோல சிறைச்சாலைக்கு வெளியே கைதிகளின் உறவிகனர்கள் குவிந்துள்ளனர். தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் என்பனவும் சிறைச்சாலைக்குள் சென்றுள்ளன. காயமடைந்த நால்வர் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தடுக்கத் தவறியதற்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட இரண்டு உயர்மட்ட முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகளும், தங்கள் தண்டனைத் தீர்ப்புகளுக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக அவர்களின் சட்டத்தரணி  தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி மத்திய கிழக்கு

மரண தண்டனைக்கு எதிராக இருவரும் மேன்முறையீடு

  • August 1, 2026
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தடுக்கத் தவறியதற்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட இரண்டு உயர்மட்ட முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகளும், தங்கள் தண்டனைத் தீர்ப்புகளுக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக அவர்களின் சட்டத்தரணி  தெரிவித்துள்ளார். முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு, கொழும்பு மேல்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, நேற்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக இருவரும் இரண்டு வாரங்களுக்குள் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வார்கள் என்று, […]