கப்பல்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த உக்ரைன் இணக்கம்
சமீபகாலமாக கருங்கடலில் ரஷ்ய கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இந்த நடவடிக்கையானது ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நடவடிக்கையானது கருங்கடல் பகுதியில் பயணிக்கும் வேறு நாடுகளின் கப்பல்களுக்கும் ஆபத்தாக மாறியுள்ளது. இந்நிலையில் ரஷ்யா அல்லாத எண்ணெய் கப்பல்களையும் கருங்கடல் உள்கட்டமைப்புகளையும் குறிவைக்க வேண்டாம் என உக்ரைன் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி வர்த்தகக் கப்பல் உரிமையாளர்கள் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் தொடர்பு மையங்களை […]













