ஐரோப்பா

ரஷ்யா மீது உக்ரைன் ஆளில்லா விமானத் தாக்குதல் – குறைந்தது 08 பேர் உயிரழப்பு

  • August 3, 2026
  • 0 Comments

ரஷ்யாவில் கடந்த இரண்டு நாட்களாக உக்ரைன் முன்னெடுத்த ட்ரோன் தாக்குதல்களில் குறைந்தது 08 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் மிகப்பெரிய இணையவழி சில்லறை விற்பனையாளரான வைல்ட்பெர்ரீஸுக்குச் சொந்தமான கிடங்கு உள்ளிட்ட இலக்குகளை மையமாகக் கொண்டு இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நேற்று இரவு மாத்திரம் 635 உக்ரேனிய ஆளில்லா விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக விளையாட்டு மைதானத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் 13 வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாகவும், மேலும் இரு […]

ஐரோப்பா

“ரஷ்யாவுக்கு சந்தேகம் வேண்டாம் : பிரித்தானியா உக்ரைனுக்கு தோளோடு தோள் நிற்கிறது

  • July 27, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் புதிய பிரதமரான ஆண்டி பர்னம் இன்றைய தினம் (27.07) உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்திக்கவுள்ளார். இடைக்கால பிரதமராக பதவியேற்றப்பின் தனது முதல் சர்வதேச விருந்தினராக அவர் ஜெலென்ஸ்கியை வரவேற்கவுள்ளார். இது உக்ரைனுக்கான லண்டனின் அசைக்க முடியாத ஆதரவை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. இரு தலைவர்களும் ஒரு கடற்படைத் தளத்தில் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு, பிரிட்டன் தலைமையிலான பயிற்சித் திட்டங்கள் உக்ரைனின் ஆயுதப் படைகளை வலுப்படுத்தவும், போர்க்களத்தில் முடிவுகளை வழங்கவும் […]

ஐரோப்பா

சபோர்ஷியாவில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் உக்ரைன் தாக்குதல் – பொதுமக்கள் பலி

  • July 25, 2026
  • 0 Comments

உக்ரைனின் சபோரிஷியா பிராந்தியத்தில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில், விடுமுறைக்கால முகாம்கள் மீது நேற்று இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 08 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் இரண்டு குழந்தைகளும் அடங்குவதாக ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட உள்ளூர் அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். உக்ரைன் வேண்டுமென்றே பொதுமக்களைத் தாக்கியதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நான்கு ஆண்டுகளை கடந்து நீடிக்கும் உக்ரைன் – ரஷ்யா போரில் சர்வதேச சட்டங்களை மீறி பொதுமக்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இருப்பினும் இரு நாடுகளும் இந்த […]

ஐரோப்பா

ரஷ்யாவின் வைல்ட்பெர்ரீஸ் நிறுவனம் மீது உக்ரைன் தொடர் தாக்குதல்

  • July 24, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் மிகப்பெரிய இணையவழி சில்லறை விற்பனையாளரான வைல்ட்பெர்ரீஸ் (Wildberries) நிறுவனத்திற்குச் சொந்தமான மற்றொரு கிடங்கின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷ்ய இராணுவத்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறப்படும் உள்கட்டமைப்புகளுக்கு எதிரான தனது ஆளில்லா விமானத் தாக்குதல்களை கீவ் விரிவுபடுத்தி வரும் நிலையில், இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நிறுவனம் தனது தளவாட மையங்களில் ஒன்றில் செயல்பாடுகளை இடைநிறுத்தியுள்ளது. வைல்ட்பெர்ரீஸ் நிறுவனம்  ரஷ்ய ஆயுதப் படைகளுக்கு ஆதரவளிப்பதாக கூறியே உக்ரைன் இந்த தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. இருப்பினும் உக்ரைனின் இந்த கூற்றுக்களை […]

ஐரோப்பா

ரஷ்யா மீது தீவிர தாக்குதலை தொடுத்த உக்ரைன் – 08 பேர் உயிரிழப்பு

  • July 18, 2026
  • 0 Comments

ரஷ்யாவில் உள்ள இரண்டு வைல்ட்பெர்ரிஸ் கிடங்குகள் மீது உக்ரைன் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதல்களில் எட்டு பேர் உயிரிழந்ததுடன், சுமார் 60 பேர் காயமடைந்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான கிடங்குகள், தம்போவ் (Tambov) பிராந்தியத்தின் கோட்டோவ்ஸ்க் (Kotovsk) மற்றும் மொஸ்கோ பிராந்தியத்தின் எலக்ட்ரோஸ்டால்  (Elektrostal) ஆகிய இடங்களில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ரஷ்யாவிற்குள் சுமார் 500 மைல் தொலைவில் உள்ள எங்கெல்ஸ் விமானத் தளத்திலும் உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், ரஷ்யாவின் Tu-95 ரக மூலோபாய குண்டுவீச்சு விமானம் […]

ஐரோப்பா

உக்ரைனுக்கு ஆதரவு – பிரான்ஸில் ஒன்றுக்கூடும் 25 நாடுகளின் தலைவர்கள்

  • July 12, 2026
  • 0 Comments

உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலன்ஸ்கி நாளை மற்றும் நாளை மறுதினம் பாரிஸிற்கு விஜயம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 14 கொண்டாட்டங்களுக்கு முன்னதாக, “விருப்பமுள்ளவர்களின் கூட்டணி”யின் கூட்டத்தை நடத்த பிரான்ஸ் தயாராகி வருகிறது. இதன்போது உக்ரைனுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில்  விவாதிப்பதற்காக 25 நாடுகளின் தலைவர்கள் அல்லது அரசாங்கத் தலைவர்கள் பாரிஸில் ஒன்றுக்கூடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸில் உருவாக்கப்பட்டு, பிரித்தானியாவுடன் இணைந்து வழிநடத்தப்படும் இந்தக் கூட்டணி, தற்போது 37 நாடுகளை உள்ளடக்கி விரிவடைந்துள்ளது. இக்கூட்டணி சில சந்தர்ப்பங்களில்  […]

ஐரோப்பா

பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணைகள் மூலம் உக்ரைன் மீது தாக்குதல் – இருவர் பலி

  • July 11, 2026
  • 0 Comments

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய கடுமையான தாக்குதலில், ஆறு பாலிஸ்டிக் ஏவுகணைகள், ஆறு குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 121 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக, கீவ், ஒடெசா மற்றும் கார்கிவ் ஆகிய நகரங்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், 19 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனியப் படைகள் குறைந்தது இரண்டு குரூஸ் ஏவுகணைகளையும் 111 ட்ரோன்களையும் வெற்றிகரமாக இடைமறித்ததாக அறிவித்துள்ளன. ஆனால் வான் பாதுகாப்பு ஆயுதங்களின் கடுமையான பற்றாக்குறையால் பாலிஸ்டிக் ஏவுகணைகளை எதிர்கொள்வதில் சிரமப்பட்டதாகவும் தெரிவித்துள்ளன. ஒப்புக்கொள்ளப்பட்ட வான் […]

ஐரோப்பா

உக்ரைன் மீது அணுவாயுதத்தை பயன்படுத்த தயாராகும் ரஷ்யா : சீனா எச்சரிக்கை

  • July 10, 2026
  • 0 Comments

உக்ரைனில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சீனா ஜனாதிபதி எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த கூற்றை உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே அசோவ் கடலில் ரஷ்யாவின் எண்ணெய் கப்பல்களை தாக்கியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்யப் படைகளுக்கான எரிபொருள் விநியோகத்தைத் தடை செய்வதற்கும், மொஸ்கோ ஆக்கிரமித்துள்ள கிரிமியாவைத் தனிமைப்படுத்துவதற்குமான முயற்சிகளைத் தீவிரப்படுத்துவதற்காக இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வாரத்தின் முதல் நான்கு நாட்களில், […]

ஐரோப்பா செய்தி

உக்ரைன் மீது ஏவுகணை மழை – பலர் பலி

  • July 6, 2026
  • 0 Comments

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்ய இன்று அதிகாலை பாரிய ஏவுகணை தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. இதில் 07 பேர் கொல்லப்பட்டதாகவும், பல கட்டிடங்கள் சேதமாக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நகரத்தின் இராணுவ நிர்வாகத் தலைவர் டைமூர் தகாச்சென்கோ (Tymur ‌Tkachenko) டெலிகிராமில்  இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார். குறித்த பகுதியில் மீட்பு பணியாளர்கள் பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக பொடில்ஸ்கி மாவட்டத்தில் பாரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு நகரம் முழுவதும் 24 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  

ஐரோப்பா

ரஷ்யாவின் மற்றுமோர் முக்கிய எண்ணெய் முனையம் மீது உக்ரைன் தாக்குதல்

  • July 5, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள  முக்கிய எண்ணெய் முனையத்தை உக்ரைன் தாக்கியுள்ளது. இந்தத் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, இது ரஷ்யாவின் போருக்கு வருவாய் ஈட்டித் தரும் ஒரு முக்கிய உள்கட்டமைப்பு என்றும், அப்பகுதியில் உள்ள ஒரு முக்கிய ரஷ்ய கடற்படைத் தளமும் தாக்கப்பட்டதாகவும் கூறினார். இந்தத் தாக்குதல் குறித்து, ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஆளுநர் அலெக்சாண்டர் பெக்லோவ், அந்நகரம் ஒரு பெரிய ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு உள்ளானதாகக் உறுதிப்படுத்தியுள்ளார். சமீபகாலமாக, […]