ஐரோப்பா

ரஷ்யாவை மூர்கமாக தாக்கிய உக்ரைன் – 555 ட்ரோனகள் ஊடுறுவல்

  • June 18, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையொன்றின் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியாக  கிரெம்ளின் குற்றம் சாட்டிள்ளது. நேற்று இரவு ரஷ்யாவின் பல பிராந்தியங்களில் 555 உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் ஊடுறுவியதாகவும், அவற்றை  தனது வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்ததாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளில்லா விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மாஸ்கோவின் முக்கிய விமான நிலையங்கள் விமானச் சேவைகளை நிறுத்தி வைத்த அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தாக்குதலுக்கு உள்ளான  எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு அருகில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் ரஷ்யாவின் தலைநகரைக் […]

ஐரோப்பா

சிறுவர்கள் பயணித்த பேருந்தின் மீது ட்ரோன் தாக்குதல் – உக்ரைன் மீது பழி

  • June 17, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பகுதியில் சிறுவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது  ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. பெலாரஸைச் சேர்ந்த சிறுவர் கால்பந்து அணியை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐந்து குழந்தைகள் உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளதாக ரஷ்யாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் தான் காரணம் என ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. பெலாரஸ் வெளியுறவு அமைச்சகம் இந்தத் தாக்குதலை “பொதுமக்களுக்கு எதிரான […]

ஐரோப்பா

உக்ரைனின் பாரம்பரிய மடாலயம் மீது தாக்குதல் – 04 பேர் பலி!

  • June 15, 2026
  • 0 Comments

உக்ரைனின் ஆன்மீக மற்றும் கலாச்சார பகுதியான பெச்செர்ஸ்க் லாவ்ரா மடாலயம் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 04 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் வசிக்கும் மக்களை அவசரமாக வெளியேறுமாறு  உக்ரைன் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த வாரம் பிரான்சில் நடைபெறவிருக்கும் ஜி7 மாநாட்டிற்கு முன்னதாக, இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 1051-ல் நிறுவப்பட்ட, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான, மத்திய கீவ் பெச்செர்ஸ்க் லாவ்ரா மடாலயம் நேரடித் தாக்குதலில் கடுமையாக சேதமடைந்தது என்று தலைநகரின் […]

ஐரோப்பா

ரஷ்யாவில் குவிந்த முதலீட்டாளர்கள் : செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மீது உக்ரைன் தாக்குதல்!

  • June 3, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்  ( St Petersburg) புறநகர்ப் பகுதிகளில் உக்ரைன் இன்று தாக்குதல் நடத்தியுள்ளது. நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு முக்கிய பொருளாதார மாநாடு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக 130 நாடுகளில் இருந்து விருந்தினர்கள் வருகை தந்திருந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு முதல் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், 59 ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் […]

ஐரோப்பா

உக்ரைனில்  போரை தொடர முடியாத சூழ்நிலையில் ரஷ்யா!!

  • June 2, 2026
  • 0 Comments

உக்ரைனில்  போரை தொடர முடியாத சூழ்நிலையில் ரஷ்யா இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இந்நிலையில் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் பாதுகாப்புச் செலவினங்களைக் குறைக்குமாறு நிதி அதிகாரிகள் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ரஷ்யாவின் நிதி அமைச்சகம் கணிசமான நிதி பற்றாக்குறையை  எதிர்பார்க்கிறது. இந்த ஆண்டு குறைந்தபட்சம் 28 பில்லியன் டொலர் அளவுக்கு நிதி வரம்பு மீறப்படும் என்றும், வரும் ஆண்டுகளிலும் மேலும் செலவு அதிகரிக்கும் என்றும் நிதி அமைச்சர் அன்டன் சிலுவானோவ், (Anton Siluanov) கணித்துள்ளார். போர் […]

ஐரோப்பா

ரஷ்யாவில் தலைத்தூக்கியுள்ள பட்ஜெட் பிரச்சினை!! போர் செலவீனத்தை முடக்க அறிவுரை!

  • June 2, 2026
  • 0 Comments

உக்ரைனில் நேற்று இரவு ரஷ்யா ட்ரோன் தாக்குதல்களை முன்னெடுத்திருந்த நிலையில் மக்கள் பலர்  குண்டுவெடிப்புத் தடுப்பு முகாம்களிலும், நிலத்தடி மெட்ரோ நிலையங்களிலும் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன்,  நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக கீவ் நகரில் பெரிய வெடிப்புகளும், புகை மண்டலங்களும் ஏற்பட்டதாகவும், இதில் நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும், குழந்தைகள் உட்பட 58 பேர் காயமடைந்ததாகவும் மேயர் விட்டாலி கிளிட்ச்கோ  (Vitali Klitschko) தெரிவித்தார். இதற்கிடையே போரை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு போதுமான […]

ஐரோப்பா

உக்ரைனுக்கு ஆதரவாக போரிட்ட பிரித்தானிய பிரஜை உயிரிழப்பு!

  • May 25, 2026
  • 0 Comments

உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் இடம்பெற்று வரும் போரில் பிரித்தானிய பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 23 வயதான அய்ர்டன் ரெட்ஃபியர்ன் (Ayrton Redfearn) என அடையாளம் காணப்பட்டுள்ளார். ரெட்ஃபியர்ன், இதற்கு முன்னர் டார்குவே விமானப் படை மாணவராகவும், ராயல் ஏர் ஃபோர்ஸிலும் (RAF) பணியாற்றியுள்ளார். அவர் 2025 ஆம் ஆண்டில்  உக்ரைனிய இராணுவத்திற்கு ஆதரவளிக்கும் ஒரு சிறப்புப் பிரிவில் இணைந்திருந்தார். இதேவேளை அவரின் மரணத்தை வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளதுடன், இரங்கல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா செய்தி

ரஷ்யாவின் மிகப்பெரிய ஏவுகணை தாக்குதல் – கீவ் உட்பட பல பகுதிகள் கடும் சேதம்

  • May 24, 2026
  • 0 Comments

ரஷ்யா, உக்ரைன் மீது நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் பல ஏவுகணைகளை ஏவி பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியுள்ளது. தலைநகர் கீவ் முக்கிய இலக்காக இருந்ததாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நான்கு பேர் உயிரிழந்ததுடன், சுமார் 83 பேர் காயமடைந்துள்ளனர். குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் பாடசாலைகளும் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதல்கள், உக்ரைன் பொதுமக்கள் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக மேற்கொள்ளப்பட்டதாக ரஷ்ய […]

ஐரோப்பா

உக்ரைனில் ஏவுகணைத் தாக்குதல் – பலர் பலி!

  • May 19, 2026
  • 0 Comments

உக்ரைனின் வடக்குப் பகுதியான செர்னிஹிவ் மற்றும் சுமி பிராந்தியங்களில் ரஷ்யா ஏவுகணை மற்றும் ஆளில்லா ட்ரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நால்வர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்ததாக உக்ரைனிய அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். அதேநேரம் செர்னிஹிவ் (Chernihiv) பிராந்தியத்தில் உள்ள ப்ரைலுகி (Pryluky) நகரின் மையத்தில் நடத்தப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும், 14 வயது சிறுவன் உட்பட குறைந்தது 17 பேர் காயமடைந்ததாகவும் பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பா

மொஸ்கோ மீது தீவிர ட்ரோன் தாக்குதல்களை முன்னெடுத்த உக்ரைன் – நால்வர் பலி!

  • May 17, 2026
  • 0 Comments

ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் நடத்திய மிகப்பெரிய தாக்குதலில் நால்வர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் மொஸ்கோவில் 03 பேரும் நான்காவது நபர்   உக்ரைனை ஒட்டியுள்ள பெல்கோரோட் பிராந்தியத்திலும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைனின் வான்பரப்பில் 1,000-க்கும் மேற்பட்ட உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.