ஐரோப்பா

ரஷ்யாவின் தேடப்படும் நபர்கள் பட்டியில் பிரிட்டனின் முன்னாள் அமைச்சர்!

  • May 13, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸை ( Ben Wallace) ரஷ்யா தேடப்படும் நபர்கள் பட்டியலில் சேர்த்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்கு முன்பிருந்து ஆகஸ்ட் 2023 வரை வாலஸ் பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றினார். அவர் பணியில் இருந்தபோது உக்ரைனுக்கு அதிகளவிலான இராணுவ உதவிக்கு ஆதரவு தெரிவித்து வந்தார். அத்துடன் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பையும் கண்டித்துள்ளார். இந்நிலையில் கடந்த அக்டோபரில், கிரிமியா குறித்து வாலஸ் தெரிவித்த கருத்துகளுக்காக, அவரை சர்வதேச தேடப்படும் நபர்கள் […]

உலகம் செய்தி

உலக எரிசக்தி சந்தையின் செல்வாக்கை அமெரிக்கா அபகரிக்க முயல்கிறது -ரஷ்யா குற்றச்சாட்டு

  • May 13, 2026
  • 0 Comments

உலகளாவிய எரிசக்தித் துறையில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்த முயல்வதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் குற்றம் சாட்டியுள்ளார். டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான கொள்கைகள், உலக எரிசக்தி சந்தையின் செல்வாக்கை “அபகரிக்க” முயல்கின்றன என அவர் விமர்சித்துள்ளார். லுகோயில் மற்றும் ரோஸ்நெஃப்ட் போன்ற ரஷ்ய எரிசக்தி நிறுவனங்களை சர்வதேச சந்தைகளிலிருந்து வெளியேற்றுவதே அமெரிக்காவின் நோக்கம் என தெரிவித்துள்ளார். அவர் RT இந்தியா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அமெரிக்கா வெளியிட்ட சில கொள்கை ஆவணங்களில் உலக எரிசக்தி சந்தையில் […]

இந்தியா

அதி நவீன ஏவுகணை கொள்வனவு : இந்தியா, ரஷ்யா இடையே ஒப்பந்தம்!

  • May 5, 2026
  • 0 Comments

ரஷ்யாவுடன் ஒரு பில்லியன் டொலருக்கும் அதிக மதிப்புடைய ஒப்பந்தம் ஒன்றை இந்தியா கையெழுத்திட்டுள்ளது. ஒந்த ஒப்பந்தப்படி R-37M  ரக ஏவுகணைகளை இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்யவுள்ளது. இந்த ஒப்பந்தம் சுமார் 300 ஏவுகணைகளை உள்ளடக்கியது, இதன் மதிப்பு ஏறத்தாழ 1.2 பில்லியன் டொலர் ஆகும். இந்த ஏவுகணைகள் இந்தியாவின் எஸ்யு-30எம்கேஐ (Su-30MKI) போர் விமானங்களில் பொருத்தப்படவுள்ளன. பாகிஸ்தானுடனான மோதல்கள் மற்றும் சீனாவுடனான தற்போதைய பதற்றம் ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் இந்திய ஆயுதப் படைகளை நவீனமயமாக்கும் நடவடிக்கையின் […]

ஐரோப்பா

ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்தது பிரித்தானியா!

  • May 5, 2026
  • 0 Comments

ஆப்பிரிக்கா மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை ஆட்கடத்தல் செய்து போரில் ஈடுபடுத்தும் ரஷ்ய வலையமைப்பு கும்பல்களை இலக்காகக் கொண்டு பிரித்தானியா புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்த வலையமைப்புகள், நைஜீரியா, சிரியா மற்றும் யேமன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தனிநபர்களைப் பொய்யான வாக்குறுதிகள் மூலம் கவர்ந்து, பின்னர் அவர்களை உக்ரைனில் உள்ள போர்க்களங்களுக்கு அனுப்புவதாகக் கூறப்படுகிறது. ரஷ்ய ட்ரோன் தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்காக ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவிலிருந்து மக்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் […]

ஐரோப்பா

தந்திரோபாய அணு ஆயுதங்களை ஏவத் தயாராகும் ரஷ்யா!

  • May 3, 2026
  • 0 Comments

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தந்திரோபாய அணு ஆயுதங்களை ஏவத் தயாராக இருப்பதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனிய இராணுவத் தளபதி ரோமன் கோஸ்டென்கோ (Roman Kostenko) இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார். இந்த மோதலில் ரஷ்யா தோல்வியை சந்திப்பதாக உணர்ந்தால், அது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். பல கிலோடன்கள் முதல் பல பத்து கிலோடன்கள் வரையிலான ஆற்றல் கொண்ட தந்திரோபாய அணு ஆயுதங்களை ரஷ்யா ஏவக்கூடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். […]

இலங்கை

இலங்கை வரும் ரஷ்ய தூதுக் குழுவினர்!

  • May 2, 2026
  • 0 Comments

ரஷ்ய கூட்டமைப்பின் சுகாதார அமைச்சர் மிகைல் முரஷ்கோ (Mikhail Murashko)  உள்ளிட்ட தூதுக்குழுவினர், மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக நாளை (03) நாட்டிற்கு வரவுள்ளனர். இந்தப் பயணத்தின் போது, ​​ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சுகாதாரத் துறையில் உறவுகளையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவது குறித்து,  அமைச்சர்  நலிந்த ஜெயதிஸ்ஸவுடன் ஒரு சிறப்பு கலந்துரையாடலையும்  நடத்த உள்ளனர். இந்தத் தூதுக்குழுவினர், வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர்   விஜயத ஹெரத்தை சந்திக்க உள்ளனர். மேலும்,  மே 04 அன்று […]

ஐரோப்பா

பேருந்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய ரஷ்யா : இருவர் பலி!

  • May 2, 2026
  • 0 Comments

உக்ரைனின் தெற்கு நகரமான கெர்சனில் பேருந்தொன்றின் மீது ரஷ்யா இன்று ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஏழு பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பொதுப் பயன்பாட்டுத் துறை ஊழியர்கள் என்று பிராந்திய ஆளுநர் ஒலெக்சாண்டர் ப்ரோகுடின் (Oleksandr Prokudin) குறிப்பிட்டுள்ளார். உடைந்த ஜன்னல்களுடன் பேருந்தையும், அதன் தரையில் இரத்தக் கறைகளுடன் கிடந்த ஒரு உடலையும் காட்டும் படங்களை அவர் டெலிகிராமில் பதிவிட்டுள்ளார். இதேவேளை “இத்தகைய தாக்குதல்கள், பொதுமக்களுக்கு […]

ஐரோப்பா

உக்ரைனின் முக்கிய கோட்டையை கைப்பற்ற முழுவீச்சில் பணியாற்றும் ரஷ்யா!

  • May 2, 2026
  • 0 Comments

உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள கோஸ்டியாண்டினிவ்கா (Kostiantynivka) நகருக்கு அருகே ரஷ்யப் படைகள் காலூன்ற முயற்சித்து வருகின்றன. இந்த நகரம், பலமாக அரணமைக்கப்பட்ட ‘கோட்டைப் பட்டை’யின் ஒரு பகுதியாக விளங்குகிறது. தொடர்ந்து வரும் ரஷ்ய ஊடுருவல் முயற்சிகளை உக்ரைனியப் படைகள் முறியடித்து வருவதாகவும், நகருக்குள் எதிர் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் உக்ரைன் இராணுவத் தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி (Oleksandr Syrskyi)  தெரிவித்தார். போர்க்கள வரைபடத்தின்படி, ரஷ்யப் படைகள் கோஸ்டியாண்டினிவ்காவின் தெற்குப் புறநகர்ப் பகுதியிலிருந்து சுமார் […]

ஐரோப்பா

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் !

  • May 1, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் கருங்கடல் துறைமுகத்தில் உள்ள துவாப்சே (Tuapse) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது உக்ரைன் நான்காவது முறையாக தாக்குதல் நடத்தியுள்ளது. துவாப்சே மீதான தாக்குதல்கள் சுற்றுச்சூழல் அவசரநிலைக்கு வழிவகுத்துள்ளன. அங்கு வசிப்பவர்கள் “பேரழிவு நிலைமைகள்” நிலவுவதாகவும், எண்ணெய் காற்று, மண் மற்றும் கருங்கடலை மாசுபடுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், ரஷ்ய ஆளில்லா விமானங்கள் உக்ரைனின் துறைமுக நகரமான ஒடெசாவைத் தாக்கியதில், குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மே 09 ஆம் திகதியன்று  வெற்றி தினக் கொண்டாட்டத்தை […]

உலகம்

போர்களத்தில் வடகொரிய வீரர்களுக்கு விடுக்கப்பட்ட உத்தரவு – பலர் உயிர் மாய்ப்பு!

  • April 29, 2026
  • 0 Comments

ரஷ்யாவிற்கு ஆதரவாக போரிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட வீரர்களை வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் பாராட்டியுள்ளார். ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் பகுதியில் உக்ரேனியப் படைகளுடன் சண்டையிடும்போது, ​​எதிரிகளிடம் பிடிபடாமல் இருப்பதற்காகக் குறித்த வீரர்கள் கையெறி குண்டுகளைபயன்படுத்தி தற்கொலை செய்துக்கொண்டனர். இது, அங்கு நடைமுறையில் உள்ள தீவிரமான போர்க்களக் கொள்கையை உறுதிப்படுத்துகிறது. உளவுத்துறை அறிக்கைகள் மற்றும் தப்பி ஓடியவர்களின் சாட்சியங்கள் உட்பட, பெருகிவரும் ஆதாரங்கள், எதிரிகளின் கைகளில் சிக்காமல் இருப்பதற்காக, தங்களைத் தாங்களே வெடிக்கச் செய்தல் அல்லது பிற தற்கொலை […]

error: Content is protected !!