ஐரோப்பா

ரஷ்யாவில் குவிந்த முதலீட்டாளர்கள் : செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மீது உக்ரைன் தாக்குதல்!

  • June 3, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்  ( St Petersburg) புறநகர்ப் பகுதிகளில் உக்ரைன் இன்று தாக்குதல் நடத்தியுள்ளது. நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு முக்கிய பொருளாதார மாநாடு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக 130 நாடுகளில் இருந்து விருந்தினர்கள் வருகை தந்திருந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு முதல் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், 59 ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் […]

ஐரோப்பா

உக்ரைனில்  போரை தொடர முடியாத சூழ்நிலையில் ரஷ்யா!!

  • June 2, 2026
  • 0 Comments

உக்ரைனில்  போரை தொடர முடியாத சூழ்நிலையில் ரஷ்யா இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இந்நிலையில் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் பாதுகாப்புச் செலவினங்களைக் குறைக்குமாறு நிதி அதிகாரிகள் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ரஷ்யாவின் நிதி அமைச்சகம் கணிசமான நிதி பற்றாக்குறையை  எதிர்பார்க்கிறது. இந்த ஆண்டு குறைந்தபட்சம் 28 பில்லியன் டொலர் அளவுக்கு நிதி வரம்பு மீறப்படும் என்றும், வரும் ஆண்டுகளிலும் மேலும் செலவு அதிகரிக்கும் என்றும் நிதி அமைச்சர் அன்டன் சிலுவானோவ், (Anton Siluanov) கணித்துள்ளார். போர் […]

ஐரோப்பா

ரஷ்யாவில் தலைத்தூக்கியுள்ள பட்ஜெட் பிரச்சினை!! போர் செலவீனத்தை முடக்க அறிவுரை!

  • June 2, 2026
  • 0 Comments

உக்ரைனில் நேற்று இரவு ரஷ்யா ட்ரோன் தாக்குதல்களை முன்னெடுத்திருந்த நிலையில் மக்கள் பலர்  குண்டுவெடிப்புத் தடுப்பு முகாம்களிலும், நிலத்தடி மெட்ரோ நிலையங்களிலும் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன்,  நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக கீவ் நகரில் பெரிய வெடிப்புகளும், புகை மண்டலங்களும் ஏற்பட்டதாகவும், இதில் நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும், குழந்தைகள் உட்பட 58 பேர் காயமடைந்ததாகவும் மேயர் விட்டாலி கிளிட்ச்கோ  (Vitali Klitschko) தெரிவித்தார். இதற்கிடையே போரை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு போதுமான […]

ஐரோப்பா

மாறி மாறி தாக்கிக்கொண்ட உக்ரைன், ரஷ்யா!! 600 ட்ரோன்கள், 90 ஏவுகணைகள் பயன்பாடு!

  • May 24, 2026
  • 0 Comments

கீவ் மீது நடத்தப்பட்ட பெரிய அளவிலான தாக்குதலில் ரஷ்யா அதிவேக ஒரெஷ்னிக் பாலிஸ்டிக் ஏவுகணையைப் பயன்படுத்தியதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். இந்தத் தாக்குதலில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், 83 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் குடியிருப்புப் பகுதிகள், அரசு கட்டிடங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளுக்குக் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மோதலில் ஒரெஷ்னிக் ஏவுகணை பயன்படுத்தப்பட்ட மூன்றாவது சந்தர்ப்பமாக இது பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதற்கிடையே […]

ஐரோப்பா செய்தி

ரஷ்யாவின் மிகப்பெரிய ஏவுகணை தாக்குதல் – கீவ் உட்பட பல பகுதிகள் கடும் சேதம்

  • May 24, 2026
  • 0 Comments

ரஷ்யா, உக்ரைன் மீது நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் பல ஏவுகணைகளை ஏவி பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியுள்ளது. தலைநகர் கீவ் முக்கிய இலக்காக இருந்ததாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நான்கு பேர் உயிரிழந்ததுடன், சுமார் 83 பேர் காயமடைந்துள்ளனர். குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் பாடசாலைகளும் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதல்கள், உக்ரைன் பொதுமக்கள் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக மேற்கொள்ளப்பட்டதாக ரஷ்ய […]

ஐரோப்பா

அணுவாயுதம் எப்போது பயன்படுத்தப்படும் : ரஷ்ய ஜனாதிபதி விளக்கம்!

  • May 22, 2026
  • 0 Comments

ரஷ்யா போரில் அணுவாயுதங்களை பயன்படுத்தும் என நீண்டகாலமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், கடைசி முயற்சியாகவே அணுவாயுதங்கள் பயன்படுத்தப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கூறியுள்ளார். 64,000 துருப்புகள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் அதிவேக ஏவுகணைகளை உள்ளடக்கிய, பல ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய அணுசக்திப் பயிற்சியை ரஷ்யாவும், பெலாரஸும் நிறைவு செய்துள்ளன. நேட்டோவுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இவ்விரு நாடுகளும் முன்னெடுத்துள்ள இந்த பயிற்சியை ஐரோப்பிய நாடுகள் கண்டித்துள்ளன. நேட்டோ மீதான எந்தவொரு தாக்குதலும் […]

ஐரோப்பா

சீனா – ரஷ்யா உறவில் முன்னேற்றம் : புட்டின் நெகிழ்ச்சி!

  • May 19, 2026
  • 0 Comments

தேசிய ஒற்றுமை மற்றும் இறையாண்மை, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் ரஷ்யாவும் சீனாவும் ஒன்றுக்கொன்று ஆதரவளிக்கத் தயாராக உள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவித்துள்ளார். சீனப் பயணத்திற்கு முன்னதாக காணொளி வாயிலாக இன்று கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் பரஸ்பர புரிதல் மற்றும் நம்பிக்கையின் ‘முன்னெப்போதும் இல்லாத நிலையை’ எட்டியுள்ளதாக கூறியுள்ளார். பரஸ்பர நன்மை பயக்கும் மற்றும் சமத்துவ அடிப்படையிலான கொள்கைகளில் […]

ஐரோப்பா

ரஷ்யாவில் பணிப்புரிந்த இந்திய தொழிலாளர் பலி!! மேலும் மூவர் படுகாயம்!

  • May 18, 2026
  • 0 Comments

ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இந்திய தொழிலாளர் உள்பட மேலும் மூன்று பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொஸ்கோ பகுதியில் நடந்த ட்ரோன் தாக்குதலில் குறித்த நான்குபேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர். ரஷ்யாவில் உள்ள இந்தியத் தூதரகம் இந்த உயிரிழப்புகளை உறுதிப்படுத்தியுள்ளது. காயமடைந்த மற்ற மூவரும் இந்திய நாட்டவர்களே என்றும்  தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது. “தூதரக அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டுள்ளதுடன், சிகிச்சைப் பெற்று வருபவர்களையும் சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஐரோப்பா

ஐ.நா. மனிதாபிமான உதவிக் குழுவின் வாகன அணிவகுப்பை குறிவைத்த ரஷ்யா!

  • May 16, 2026
  • 0 Comments

ஐ.நா. மனிதாபிமான உதவிக் குழுவின் வாகன அணிவகுப்பை, ரஷ்யா வேண்டுமென்றே இரண்டு முறை ஆளில்லா விமானங்கள் மூலம் குறிவைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கை உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் ஐ.நா. மனிதாபிமானத் தலைவர் டாம் பிளெட்சர் (Tom Fletcher) ஆகியோரின் கண்டனத்தையும் தூண்டியுள்ளது. இந்த வாரம், ரஷ்யா உக்ரைன் முழுவதும் தொடர்ச்சியான தாக்குதல்களில் 1,500-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களையும் ஏராளமான  ஏவுகணைகளையும் ஏவியது. இதன் விளைவாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் 20 நேரடி […]

ஐரோப்பா

ரஷ்யாவின் தேடப்படும் நபர்கள் பட்டியில் பிரிட்டனின் முன்னாள் அமைச்சர்!

  • May 13, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸை ( Ben Wallace) ரஷ்யா தேடப்படும் நபர்கள் பட்டியலில் சேர்த்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்கு முன்பிருந்து ஆகஸ்ட் 2023 வரை வாலஸ் பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றினார். அவர் பணியில் இருந்தபோது உக்ரைனுக்கு அதிகளவிலான இராணுவ உதவிக்கு ஆதரவு தெரிவித்து வந்தார். அத்துடன் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பையும் கண்டித்துள்ளார். இந்நிலையில் கடந்த அக்டோபரில், கிரிமியா குறித்து வாலஸ் தெரிவித்த கருத்துகளுக்காக, அவரை சர்வதேச தேடப்படும் நபர்கள் […]