உலகம் செய்தி

மத்திய கிழக்கு விவகாரம்: ரஷ்யா–பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் ஆலோசனை

  • April 24, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கின் தற்போதைய நிலவரம் குறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தாரும் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளனர்‌ ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, இரு நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளும் முன்பாகவே இந்த உரையாடல் நடைபெற்றது. ஈரான்–அமெரிக்கா இடையிலான நீண்டநாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சிகளில் இஸ்லாமாபாத் மேற்கொண்டு வரும் மத்தியஸ்தப் பங்கினை லாவ்ரோ பாராட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த முயற்சிகளுக்கு மாஸ்கோ முழுமையான ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாகவும் ரஷ்ய வெளியுறவு […]

உலகம் செய்தி

ஈரான் வெளியுறவு அமைச்சர் இஸ்லாமாபாத்துக்கு பயணம் – போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் பெரும் குழப்பம்

  • April 24, 2026
  • 0 Comments

ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் ஆரக்சி (Abbas Araghchi) இன்று இரவு இஸ்லாமாபாத் நகருக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுவதாக பாகிஸ்தானின் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், இந்த தகவல் குறித்து ஈரான் அல்லது அமெரிக்கா தரப்பிலிருந்து இதுவரை எந்தவோரு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை. பாகிஸ்தானின் துணைப் பிரதமர் மற்றும் இராணுவத் தளபதியுடன் ஈரான் வெளியுறவு அமைச்சர் உரையாடிய சில மணி நேரங்களுக்குப் பின்னரே இந்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த பேச்சுவார்த்தையில் “போர் நிறுத்தம் தொடர்பான பிரச்சினைகள்” குறித்து […]

உலகம் செய்தி

போர் நிறுத்த பேச்சு வார்த்தையால் முடங்கிய பாகிஸ்தான் – பொருள் தட்டுப்பாடு, மக்கள் பெரும் சிரமம்

  • April 24, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத் நகரில் முக்கிய  வீதிகள் ஆறாவது நாளாகவும் மூடப்பட்டுள்ளன. இந்நிலை எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து இதுவரை எந்த உத்தியோகபூர்வ தகவலும் வெளியாகவில்லை. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்த நகரம் தயாராகி வருவதாக கூறப்பட்டாலும், இரு தரப்பினரும் இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு இதுவரை அனுமதி அளிக்கவில்லை. வீதிகள் மூடப்பட்டதால் கனரக சரக்கு வாகனங்கள் நகருக்குள் நுழைய முடியாமல் போயுள்ளது. இதனால் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட புதிய விளைபொருட்களின் விநியோகம் […]

உலகம் செய்தி

பாகிஸ்தானில் மீண்டும் போர் நிறுத்த பேச்சுவார்த்தை – பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

  • April 21, 2026
  • 0 Comments

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடர்பான நிச்சயமற்ற நிலை தொடர்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், பேச்சுவார்த்தைகள் நடைபெறக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் இஸ்லாமாபாத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நகரின் முக்கிய வீதிகளில் இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைகள் எனும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, அரசாங்கத்தின் தயார்நிலை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுடன் தொடர்புகளை வைத்திருக்கும் பாகிஸ்தான், இந்த சூழலில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அதேவேளை, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றமான சூழ்நிலைகளில் பாகிஸ்தான் […]

உலகம்

பாகிஸ்தான் செல்லும் அமெரிக்க குழு!

  • April 20, 2026
  • 0 Comments

அமெரிக்க – இஸ்ரேல் ஈரான் மீதான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்கள் இன்று (19) பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்குப் பயணிப்பார்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்ட பதிவில், இஸ்லாமாபாத்தில் ஈரானிய பேச்சுவார்த்தையாளர்களுடன் நடைபெறவுள்ள இரண்டாவது சுற்று நேரடிப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா எந்த அதிகாரிகளை அனுப்பும் என்ற விபரங்களை அவர் வெளியிடவில்லை. கடந்த வார இறுதியில் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தலைமையிலான அமெரிக்கத் தூதுக்குழுவினர் மேற்கொண்ட […]

உலகம்

அமைதிப் பேச்சுவார்த்தை இன்று பாகிஸ்தானில் ஆரம்பம்

  • April 11, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் போர் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் இன்று (11) ஆரம்பமாகவுள்ளது. குறித்த பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கா சார்பாக அந்நாட்டின் துணை ஜனாதிபதி ஜே.டி. வென்ஸ் (J.D. Vance) உள்ளிட்ட குழுவினர் பாகிஸ்தானைச் சென்றடைந்துள்ளனர். ஈரான் சார்பாக அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) தலைமையிலான குழுவினரும் இதில் கலந்துகொள்ளவதற்காக பாகிஸ்தான் சென்றடைந்துள்ளதாக சர்வதேச  ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

உலகம்

உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரம்!

  • March 27, 2026
  • 0 Comments

உலகின் மிகவும் காற்று மாசுபட்ட நாடுகள் வரிசையில் பாகிஸ்தான் முதலிடம் பிடித்துள்ளது. சுவிட்சர்லாந்து காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான IQAir 2025 ஆம் ஆண்டுக்கான உலகக் காற்றுத் தர பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த வரிசையில் பாகிஸ்தான் முதலிடம் பிடித்துள்ளதுடன், பங்களாதேஷ் மற்றும் தஜிகிஸ்தான் இரண்டாம், மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. வாகனப் புகை, கட்டுமானப் புழுதி, தொழிற்சாலைக் கழிவுகள், பயிர்க் கழிவுகளை எரித்தல் போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. உலகளாவிய ரீதியிலான 143 நாடுகளில் வெறும் 13 […]

உலகம் செய்தி

பாகிஸ்தான் நோக்கிச் சென்ற கப்பலை திருப்பி அனுப்பிய ஈரான்!

  • March 25, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் நீரிணை ஊடாக பாகிஸ்தான் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த கொள்கலன் கப்பல் ஒன்றை ஈரான் இராணுவம் திருப்பி அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவிலிருந்து பாகிஸ்தானின் கராச்சி துறைமுகம் நோக்கி முறையான அனுமதி இன்றி பயணித்த ‘Selan’ என்ற கொள்கலன் கப்பல், ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஊடாக நுழைய முயன்றபோது ஈரானிய கடற்படையினர் அதனைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த நடவடிக்கை குறித்து IRGC கடற்படைத் தளபதி அலிரேசா டாங்சிரி தனது […]

உலகம்

பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு எது தெரியுமா?

  • March 23, 2026
  • 0 Comments

2026 ஆம் ஆண்டிற்கான உலக பயங்கரவாதக் குறியீட்டின் (Global Terrorism Index) படி, உலகளவில் பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் பாகிஸ்தானில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் காரணமாக 1,139 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, இந்தியா இப்பட்டியலில் 13 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு

அபார வெற்றியீட்டிய இந்தியா – பாகிஸ்தான் படுதோல்வி

  • February 15, 2026
  • 0 Comments

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27 ஆவது போட்டியில் இந்திய அணி 61 ஓட்டங்களால்  அபார வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றுக் […]

error: Content is protected !!