உலகம்

பாகிஸ்தானில் பெண் மருத்துவர் மீது ஆசிட் வீச்சு!! தொடர் போராட்டம் முன்னெடுப்பு!

  • June 15, 2026
  • 0 Comments

பாகிஸ்தானில் பெண் மருத்துவர் மீது அமிலத் தாக்குதல் (ஆசிட் வீச்சி) மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் சுகாதார அமைப்பில் சீர்திருத்தங்கள் மற்றும் சுகாதாரச் செயலாளர் பதவி விலகக் கோரி பாகிஸ்தானிய மருத்துவர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். 29 வயதான மருத்துவர் மஹ்னூர் நசீர், கடந்த 05 ஆம் திகதி லிஃப்ட் ஆபரேட்டரால் அமிலத் தாக்குதலுக்கு உள்ளானார். இதில் அவரது முகம் மற்றும் உடலில் 13 சதவிகித தீக்காயங்கள் ஏற்பட்டன. பின்னர் அவர் சிறப்பு சிகிச்சைக்காக விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார். […]

உலகம்

பாகிஸ்தானில் இராணுவ ஹெலிகாப்டர் விபத்து!

  • June 10, 2026
  • 0 Comments

பாகிஸ்தானில் இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதை அறிவிக்கவில்லை. பாகிஸ்தானின் காஷமீர் ஆக்கரமிப்பு பகுதியான முசாஃபராபாத் (Muzaffarabad) அருகே இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக இராணுவ பிரிவு வெளியிட்டுள்ள ஊடக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் உள்ளூர் அரசாங்கம் ஒரு போராட்டக் குழுவிற்குத் தடை விதித்ததைத் தொடர்ந்து, அதன் […]

உலகம்

மீண்டும் மோதிக் கொள்ளும் ஆப்கான் – பாகிஸ்தான் : 11 பேர் மரணம்!

  • June 10, 2026
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 11 குழந்தைகள் உட்பட குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் போக்கு மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்கள் குறித்து பாகிஸ்தான் தரப்பிலிருந்து உடனடியாக எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை. ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹசன் கெல் பகுதியில், பாகிஸ்தானைச் சேர்ந்த தலிபான் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுபவர்கள் பாதுகாப்பு சோதனை சாவடியை தாக்கியதை தொடர்ந்து மேற்படி வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  

உலகம்

குழந்தைகள் கண் முன்னே பெண் துஷ்பிரயோகம்: குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!

  • June 4, 2026
  • 0 Comments

பாகிஸ்தானில் கடந்த 2020 ஆம் ஆண்டு பிரெஞ்சு பெண் ஒருவரை அவரது குழந்தைகள் முன்பே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்படி பிரெஞ்சு சுற்றுலாப் பயணியின் காரில் பெட்ரோல் தீர்ந்த நிலையில், நள்ளிரவு வேளையில் அவதியுற்றுள்ளார். இதன்போது ​​அபித் அலி (Abid Ali) மற்றும் ஷத்கத் அலி (Shadqat Ali) ஆகியோர் அவரையும், அவரது குழந்தைகளையும் அருகில் உள்ள வயல் ஒன்றுக்கு இழுத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து […]

உலகம்

பாகிஸ்தானில் ரயில் தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு : 24 பேர் உயிரிழப்பு!

  • May 24, 2026
  • 0 Comments

பாகிஸ்தானின் குவெட்டாவில் இன்று குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அப்பகுதியில் உள்ள  ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அத்துடன் இந்த வெடிவிபத்தால் ரயில் ஒன்று தடம் புரண்டதாகவும் அறிவிக்கப்பட்டள்ளது. இதனைத் தொடர்ந்து துப்பாக்கிச்சூடும் நடைபெற்றுள்ளதாக  அல் ஜசீரா நிறுவனம் செய்தி வெளியிட்டது. இந்தச் சம்பவத்தை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வன்மையாகக் கண்டித்துள்ளார். இது “அப்பாவி உயிர்களின் துயரமான இழப்புக்கும், மேலும் பலர் […]

உலகம்

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு – 09 பேர் படுகொலை, பலர் காயம்!

  • May 13, 2026
  • 0 Comments

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள சந்தையொன்றில்  நேற்று  ரிக்ஷாவில் பொறுத்தப்பட்டிருந்த குண்டொன்று வெடித்து சிதறியதில் சுமார் 09 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக உள்ளுர் காவல்துறை தெரிவித்துள்ளது.ஷ ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள இப்பகுதியில் வன்முறை அதிகரித்து வருவதற்கான சமீபத்திய அறிகுறியாக இது அமைந்துள்ளது. கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள லக்கி மர்வத் என்ற மாவட்டத்தில் இந்தத் தாக்குதல் நடந்ததாக உள்ளூர் காவல்துறைத் தலைவர் அஸ்மத் உல்லா (Azmat Ullah) தெரிவித்துள்ளார். இந்தக் குண்டுவெடிப்புக்கு எந்தக் குழுவும் உடனடியாகப் பொறுப்பேற்கவில்லை, […]

உலகம் செய்தி

மத்திய கிழக்கு விவகாரம்: ரஷ்யா–பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் ஆலோசனை

  • April 24, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கின் தற்போதைய நிலவரம் குறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தாரும் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளனர்‌ ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, இரு நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளும் முன்பாகவே இந்த உரையாடல் நடைபெற்றது. ஈரான்–அமெரிக்கா இடையிலான நீண்டநாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சிகளில் இஸ்லாமாபாத் மேற்கொண்டு வரும் மத்தியஸ்தப் பங்கினை லாவ்ரோ பாராட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த முயற்சிகளுக்கு மாஸ்கோ முழுமையான ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாகவும் ரஷ்ய வெளியுறவு […]

உலகம் செய்தி

ஈரான் வெளியுறவு அமைச்சர் இஸ்லாமாபாத்துக்கு பயணம் – போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் பெரும் குழப்பம்

  • April 24, 2026
  • 0 Comments

ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் ஆரக்சி (Abbas Araghchi) இன்று இரவு இஸ்லாமாபாத் நகருக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுவதாக பாகிஸ்தானின் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், இந்த தகவல் குறித்து ஈரான் அல்லது அமெரிக்கா தரப்பிலிருந்து இதுவரை எந்தவோரு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை. பாகிஸ்தானின் துணைப் பிரதமர் மற்றும் இராணுவத் தளபதியுடன் ஈரான் வெளியுறவு அமைச்சர் உரையாடிய சில மணி நேரங்களுக்குப் பின்னரே இந்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த பேச்சுவார்த்தையில் “போர் நிறுத்தம் தொடர்பான பிரச்சினைகள்” குறித்து […]

உலகம் செய்தி

போர் நிறுத்த பேச்சு வார்த்தையால் முடங்கிய பாகிஸ்தான் – பொருள் தட்டுப்பாடு, மக்கள் பெரும் சிரமம்

  • April 24, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத் நகரில் முக்கிய  வீதிகள் ஆறாவது நாளாகவும் மூடப்பட்டுள்ளன. இந்நிலை எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து இதுவரை எந்த உத்தியோகபூர்வ தகவலும் வெளியாகவில்லை. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்த நகரம் தயாராகி வருவதாக கூறப்பட்டாலும், இரு தரப்பினரும் இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு இதுவரை அனுமதி அளிக்கவில்லை. வீதிகள் மூடப்பட்டதால் கனரக சரக்கு வாகனங்கள் நகருக்குள் நுழைய முடியாமல் போயுள்ளது. இதனால் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட புதிய விளைபொருட்களின் விநியோகம் […]

உலகம் செய்தி

பாகிஸ்தானில் மீண்டும் போர் நிறுத்த பேச்சுவார்த்தை – பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

  • April 21, 2026
  • 0 Comments

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடர்பான நிச்சயமற்ற நிலை தொடர்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், பேச்சுவார்த்தைகள் நடைபெறக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் இஸ்லாமாபாத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நகரின் முக்கிய வீதிகளில் இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைகள் எனும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, அரசாங்கத்தின் தயார்நிலை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுடன் தொடர்புகளை வைத்திருக்கும் பாகிஸ்தான், இந்த சூழலில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அதேவேளை, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றமான சூழ்நிலைகளில் பாகிஸ்தான் […]