பாகிஸ்தானில் நிலக்கரிச் சுரங்கத்தில் வெடிவிபத்து – 32 தொழிலாளர்கள் மரணம்
பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் இடம்பெற்ற வெடி விபத்தில் குறைந்தது 32 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் மேலும் 10 பேர் காணாமல்போயுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவின் (Quetta) புறநகர்ப் பகுதியில் நேற்று இந்த வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த வெடி விபத்தானது மீத்தேன் வாயுவின் தேக்கத்தால் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, அவசரகால மீட்புக் குழுவினர் வருகை தந்ததுடன், ஆரம்பத்தில் 07 உடல்களை மீட்டுள்ளனர். அதைத் […]













