உலகம்

பாகிஸ்தானில் நிலக்கரிச் சுரங்கத்தில் வெடிவிபத்து – 32 தொழிலாளர்கள் மரணம்

  • July 31, 2026
  • 0 Comments

பாகிஸ்தானில்    நிலக்கரி சுரங்கத்தில் இடம்பெற்ற  வெடி விபத்தில் குறைந்தது 32  தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் மேலும் 10 பேர் காணாமல்போயுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவின் (Quetta) புறநகர்ப் பகுதியில் நேற்று இந்த வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த வெடி விபத்தானது மீத்தேன் வாயுவின் தேக்கத்தால் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, அவசரகால மீட்புக் குழுவினர் வருகை தந்ததுடன், ஆரம்பத்தில் 07 உடல்களை மீட்டுள்ளனர். அதைத் […]

உலகம்

பாகிஸ்தானில் பொலிஸாருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சமர் – 11 அதிகாரிகள் உயிரிழப்பு

  • July 30, 2026
  • 0 Comments

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றின் மீது தீவிரவாதிகள் இரவோடு இரவாக நடத்திய தாக்குதலில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இருபதுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. பொலிஸ் நிலையத்தை கனரக ஆயுதங்களால் தாக்கியுள்ளதுடன்,  அங்கு வந்துகொண்டிருந்த கூடுதல் படையினரை பதுங்கியிருந்து தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படைகள் ஒரு மணி நேரம் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். […]

உலகம்

அமெரிக்காவிடம் 10 பில்லியன் டொலர் மதிப்பிலான அந்நியச் செலாவணியை கோரும் பாகிஸ்தான்

  • July 23, 2026
  • 0 Comments

போர் மத்தியஸ்தம் செய்வதற்கு பிரதியீடாக பாகிஸ்தான் 10 பில்லியன் டொலர் மதிப்பிலான அந்நியச் செலாவணி நிலைப்படுத்தல் வசதியை அமெரிக்காவிடம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் இந்த கோரிக்கைக்கு ஒப்புதல் கிடைத்தால் பண நெருக்கடியில் சிக்கியுள்ள தெற்காசியப் பொருளாதாரத்திற்கு இது உயர் நாடியாக இருக்கும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்டிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இஸ்லாமாபாத், அமெரிக்காவிற்கும் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும் இடையே 10 பில்லியன் டொலர் மதிப்பிலான, ஐந்து ஆண்டுகள் […]

உலகம்

பாகிஸ்தானில் தீவிரவாதிகளுடன் பொலிஸார் மோதல் -09 பேர் பலி

  • July 7, 2026
  • 0 Comments

பாகிஸ்தானில் தீவிரவாதிகளுடன் நேற்று இரவு முழுவதும் இடம்பெற்ற மோதலில் 09 பாகிஸ்தான் பொலிஸார் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சுற்றுலாத் தலமான ஜியாரத் மாவட்டத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு பொலிஸாருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றதாக ஜியாரத் துணை ஆணையர் அப்துல் குத்தூஸ் அச்சாக்சாய் (Ziarat Abdul Quddus Achakzai) தெரிவித்துள்ளார். பாதுகாப்புச் சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்த மோதல் தொடங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொல்லப்பட்ட காவலர்களின் உடல்கள் […]

உலகம்

பாகிஸ்தானில் சோகம் – இஸ்லாமாபாத் சென்ற 40 பேர் பலி!

  • July 3, 2026
  • 0 Comments

பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் இன்று பேருந்தொன்று பள்ளத்தாக்கில் கவிழந்து விபத்துக்குள்ளானது. இதில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த பேருந்து, மாகாணத் தலைநகரான குவெட்டாவிலிருந்து தேசியத் தலைநகரான இஸ்லாமாபாத்திற்குச் சென்று கொண்டிருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் 48 பயணிகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  

உலகம்

ஆப்கானிஸ்தானில் தரைவழித் தாக்குதல்களை தொடங்கியது பாகிஸ்தான் -29 பேர் பலி

  • June 29, 2026
  • 0 Comments

ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தரைவழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது இந்த தாக்குதல்களில் 29  பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கும் நீண்டகாலமாக இருந்து வரும் மோதல் போக்கு தற்போது தீவிரமடைந்து வருகின்ற நிலையில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இஸ்லாமாபாத் ஒரு இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியதாக பாகிஸ்தானின் தகவல் துறை அமைச்சர் அத்தாவுல்லா தாரார் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் படைகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் இடங்களின் விவரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். “பக்தியா, பக்திகா மற்றும் குனார் […]

உலகம்

பாகிஸ்தானில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு

  • June 27, 2026
  • 0 Comments

பாகிஸ்தானில் இன்று காலை 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய-மத்தியதரைக்கடல் நில அதிர்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. 35 கிலோமீட்டர் (22 மைல்கள்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால் எவ்வித உயிரழப்புகளும் ஏற்படவில்லை என்றும், ஏனைய சேதங்கள் தொடர்பில் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்திய மற்றும் யூரேசிய புவித்தட்டுகளின் மோதல் மண்டலத்தில் பாகிஸ்தான் அமைந்துள்ளதால், உலகின் மிகவும் நில அதிர்வு மிகுந்த நாடுகளில் இதுவும் ஒன்றாகும். இந்தத் […]

இந்தியா

தற்செயலாக பாகிஸ்தான் வான்வெளியில் நுழைந்த இந்திய விமானம் – விமானி பணிநீக்கம்

  • June 25, 2026
  • 0 Comments

தலைநகர் டெல்லியிலிருந்து வடக்கு நகரமான அமிர்தசரஸுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் சிறிது நேரம் பாகிஸ்தான் வான்வெளியில் நுழைந்ததைத் தொடர்ந்து,  விமானி ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தின்போது அந்த விமானி ஏர்பஸ் ஏ321 ரக விமானத்தை இயக்கியுள்ளார். விமானம் அமிர்தசரஸை நெருங்கிக் கொண்டிருந்தபோது, ​​பறவை மோதல் குறித்த முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து விமானத்தை நிறுத்தி வைக்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டி.ஜி.சி.ஏ. (DGCA) தெரிவித்துள்ளது. அறிவுறுத்தலுக்கு அமைய விமானம் தரையிறங்கியபோது […]

உலகம்

இந்தியா மீது போர் தொடுப்போம் – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அச்சுறுத்தல்

  • June 23, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப், இந்தியாவுக்கு எதிராகப் போர் தொடுப்பதாக அச்சுறுத்தல் விடுத்துள்ளார். நாட்டில் நிலவும் கடுமையான உள்நாட்டு நீர் பற்றாக்குறை மற்றும் நிர்வாகத் தோல்விகளுக்கு மத்தியில் பாகிஸ்தான் அமைச்சரின் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன. தண்ணீர் நமது தேசியப் பாதுகாப்பின் ஒரு அங்கம் என்றும், இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் தருணத்தில் நாம் அதற்கு எதிராகப் போர் தொடுப்போம் என்றும் குவாஜா ஆசிஃப் தெரிவித்தார். தண்ணீர் விநியோகத்தைத் தடைசெய்ய இந்தியா விரைவாகச் செயல்படுவதற்கான ஆதாரம் இருந்தால், இராணுவ […]

உலகம்

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு – 07 பேர் பலி

  • June 20, 2026
  • 0 Comments

பாகிஸ்தானில் இன்று இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவ்விரு சம்பவங்களில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் குண்டு வாகனம் ஒன்றில் இருந்து வெடித்ததாகவும், இரண்டாவது குண்டு ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் வெடித்ததாகவும் கூறப்படுகிறது. இரண்டு குண்டுவெடிப்புகளும் தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்பட்டதாக அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. முதல் குண்டுவெடிப்பில் ஐந்து பேரும், இரண்டாவது குண்டுவெடிப்பில் இரண்டு பேரும் கொல்லப்பட்டதுடன், மேலும மூவர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த மேலதிக […]