உலகம்

ஈரான் மீதான தாக்குதல்களுக்கு 13000 குண்டுகளை பயன்படுத்திய அமெரிக்கா

  • July 17, 2026
  • 0 Comments

அமெரிக்கப் படைகள் ஆறாவது நாளாக ஈரான் மீதான தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றனர். இதில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டும், 20 பேர் காயமடைந்தும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சமீபத்திய உயிரிழப்பு எண்ணிக்கை 40-ஐ நெருங்கியுள்ளதாகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 400ஐக் கடந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாலங்கள், விமான நிலையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் ஒரு ரயில் நிலையம் உள்ளிட்ட பொதுமக்களின் உள்கட்டமைப்புகள் மீது குண்டுவீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றமையால் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா சமீபத்திய தாக்குதல்களில் […]

உலகம்

அமெரிக்கா துருக்கிக்கு ஆயுதங்களை வழங்கக் கூடாது – இஸ்ரேல் முட்டுக்கட்டை

  • July 6, 2026
  • 0 Comments

அமெரிக்கா, துருக்கிக்கு (Turkey) அதிநவீன F-35 போர் விமானங்களையோ அல்லது அதற்கான ஜெட் இன்ஜின்களையோ விற்பனை செய்யக் கூடாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமான Fox Newsக்கு  அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் துருக்கிக்குச் சென்று அங்குள்ள நேட்டோ (NATO) மாநாட்டில் பங்கேற்கவிருக்கும் நிலையில், இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது. துருக்கிக்கு அதிநவீன ஆயுதங்களை வழங்குவது “மத்திய கிழக்கின் அதிகார சமநிலையைக் […]

உலகம்

கோதுமை, சோயாபீன்ஸை ஈரானுக்கு ஏற்றுமதி செய்ய தயாராகும் அமெரிக்கா?

  • June 26, 2026
  • 0 Comments

அமெரிக்க விவசாய ஏற்றுமதிகளுக்கு ஈரான் விரைவில் ஒரு புதிய சந்தையாக மாறும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உணவுப் பற்றாக்குறையால் அந்நாடு தவித்து வருவதால், கோதுமை, சோயாபீன்ஸ் மற்றும் மக்காச்சோளத்தை கொள்வனவு செய்வதற்கு  ஈரானிய நிதியை அமெரிக்கா பயன்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்க விவசாயிகளுடனான கலந்துரையாடலில் ட்ரம்ப் இதனை அறிவித்துள்ளார். ஈரான்  உணவுப் பற்றாக்குறையால் மிகவும் சிரமப்பட்டு வருவதாக ட்ரம்ப் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும், தெஹ்ரான் இந்தக் கூற்றை உடனடியாக நிராகரித்தது. ஈரானின் […]

உலகம்

எரிபொருள் விற்பனை : ஈரானுக்கு பொது உரிமத்தை வழங்கியது அமெரிக்கா!

  • June 22, 2026
  • 0 Comments

ஈரான்  எரிபொருள் விற்பனை செய்வதற்கான தடையை தற்காலிகமாக நீக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதன்படி, அறுபது நாட்களுக்கு செல்லுபடியாகும் பொது உரிமத்தை வழங்குக  அமெரிக்க கருவூலத் துறை நடவடிக்கை  எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. “சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளுக்கு இணங்க, ஹோர்முஸ் ஜலசந்தியில் தடையற்ற மற்றும் வெளிப்படையான போக்குவரத்திற்கும், சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) ஆய்வாளர்களைத் தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கவும் ஈரான் உறுதியளித்துள்ளதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பது […]

உலகம்

இந்தியா மீது வர்த்தக வரி விதிக்க அமெரிக்கா பரிசீலனை!

  • June 3, 2026
  • 0 Comments

கட்டாய உழைப்பு தடையை அமுல்படுத்தாத இந்தியா உள்ளிட்ட 59 நாடுகள் மீது  வரி விதிப்பது தொடர்பில் அமெரிக்கா பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய இந்தியா உட்பட   முக்கிய வர்த்தகப் பங்காளிகள் மீது 12.5 சதவீதம் வரி விதிக்க அமெரிக்கா ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நடைமுறை அமெரிக்கத் தொழிலாளர்கள் உலகளவில் சமமற்ற ஒரு களத்தில் போட்டியிட வேண்டிய கட்டாயத்தை உருவாக்கும் ஒரு சூழலை ஏற்படுத்துவதாக அந்நாட்டின் வர்த்தக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். “இந்த ஏற்றத்தாழ்வை […]

உலகம் செய்தி

ஹோர்முஸ் நீரிணை வழியாக 24 மணி நேரத்தில் 28 கப்பல்கள் பயணம் – ஐஆர்ஜிசி தகவல்

  • May 31, 2026
  • 0 Comments

கடந்த 24 மணி நேரத்தில் எண்ணெய் டேங்கர்கள், கொள்கலன் கப்பல்கள் மற்றும் பிற வர்த்தகக் கப்பல்கள் உட்பட மொத்தம் 28 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பாகக் கடந்து சென்றதாக இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (ஐஆர்ஜிசி) தெரிவித்துள்ளது. ஐஆர்ஜிசி கடற்படையின் ஒருங்கிணைப்பு மற்றும் பாதுகாப்பின் கீழ் இந்தக் கப்பல் போக்குவரத்து நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது. மேலும், ஹோர்முஸ் நீரிணை மீதான கண்காணிப்பும் கட்டுப்பாடும் தொடர்ச்சியாக, உறுதியுடனும் அதிகாரத்துடனும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் […]

உலகம் செய்தி

ஈரானுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை ஹோர்மூஸில் அமெரிக்க முற்றுகை தொடரும் – ட்ரம்ப்

  • May 24, 2026
  • 0 Comments

“ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டு, சான்றளிக்கப்பட்டு, கையெழுத்திடப்படும் வரை, அந்த நீர்வழிப்பாதையில் அமெரிக்க கடற்படையின் முற்றுகை முழு வீச்சில் தொடரும்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். “இரு தரப்பினரும் அவசரப்படாமல், நிதானமாகச் செயல்பட வேண்டும்,” என்று ட்ரம்ப் ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ளார். “தவறுகளுக்கு இடமில்லை , ஈரானுடனான நமது உறவு மிகவும் தொழில்முறை சார்ந்ததாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் மாறி வருகிறது,” என்றும் அவர் மேலும் கூறினார்.

உலகம் செய்தி

போர் விவகாரத்தில் நிலைப்பாடு மாறாது – ஈரானின் மூத்த ஆய்வாளர் கருத்து

  • May 19, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் தடைகள் மற்றும் கடற்படை முற்றுகையால் ஈரானின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும்,  அது தெஹ்ரானின் நிலைப்பாட்டை மாற்றவில்லை என மத்திய கிழக்கு மூலோபாய ஆய்வுகளுக்கான மையத்தின் மூத்த ஆய்வாளர் அபாஸ் அஸ்லானி  (Abas Aslani)தெரிவித்துள்ளார். அல் ஜசீராவுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார் பொருளாதார சிரமங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதித்தாலும், பாதுகாப்பு நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா பொருளாதார அழுத்தத்தின் மூலம் ஈரானை பேச்சுவார்த்தை மேசையில் தனது நிலைப்பாட்டை மாற்ற வைக்க […]

உலகம்

அமெரிக்காவிற்கு எதிரான நடவடிக்கை இரத்தக் களரிக்கு வழிவகுக்கும் – கியூபா எச்சரிக்கை!

  • May 18, 2026
  • 0 Comments

கியூபாவுக்கு எதிரான எந்தவொரு அமெரிக்க இராணுவ நடவடிக்கையும் “பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு கணக்கிட முடியாத விளைவுகளை” ஏற்படுத்தும் ஒரு “இரத்தக் களரிக்கு” வழிவகுக்கும் என்று அந்நாட்டின் ஜனாதிபதி மிகுவல் தியாஸ்-கானெல் (Miguel Diaz-Canel) எச்சரிக்கை விடுத்துள்ளார். கியூபா 300-க்கும் மேற்பட்ட இராணுவ ஆளில்லா விமானங்களை வாங்கியுள்ளதாகவும், அவற்றை அமெரிக்க இலக்குகளுக்கு எதிராக பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் வெளியான செய்திகளை தொடர்ந்து மிகுவல் தியாஸின் எச்சரிக்கை வந்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “கியூபா ஒரு அச்சுறுத்தலாக […]

உலகம்

அமெரிக்காவிடம் இருந்து 200 போயிங் ஜெட் விமானங்களை  கொள்வனவு செய்யும் சீனா!

  • May 15, 2026
  • 0 Comments

200 போயிங் ஜெட் விமானங்களை  கொள்வனவு செய்ய சீனா ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், “அது ஒரு அறிக்கை போல இருந்தாலும், அது ஒரு உறுதிமொழி என்றே நான் கருதுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். இதேவேளை 787 டிரீம்லைனர் மற்றும் 777 போன்ற 100 பெரிய ரக விமானங்களுக்கு கூடுதலாக, சுமார் 500 ஒற்றை வழித்தட போயிங் 737 மேக்ஸ் விமானங்களையும் சீனா ஆர்டர் செய்யக்கூடும் என […]