இலங்கை செய்தி

மஹர சிறைச்சாலையில் கைதிகள் ஏற்படுத்திய கலவரம் கட்டுப்பாட்டுக்குள்

மஹர சிறைச்சாலையில் கைதிகள் ஏற்படுத்திய கலவரம் கட்டுப்பாட்டுக்குள்

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

“மஹர சிறைச்சாலையில் கைதிகளுக்காக நேற்று திறந்துவைக்கப்பட்ட புனர்வாழ்வு மையத்தின் கட்டிடம் முற்றாகச் சேதமாக்கப்பட்டுள்ளது.

அத்துடன், புனர்வாழ்வு அலுவலகம் மற்றும் பிரதான அலுவலகம் என்பனவும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. சிறைச்சாலையின் பிரதான நுழைவாயில் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த அமைதியின்மையானது இன்று காலை வரை நீடித்தது. சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர், விமானப்படையினர் மற்றும் கடற்படையினரின் கூட்டு ஒத்துழைப்புடன் நிலைமை தற்போது சீர்செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வன்முறைச் சம்பவத்தில் 7 கைதிகள் காயமடைந்ததுடன், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்,” எனத் தெரிவித்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை