உலகம் முக்கிய செய்திகள்

மத்தியக் கிழக்கில் புதிய பரிமாணத்தை எடுக்கும் மோதல் போக்கு – ஈரான் எச்சரிக்கை

  • July 16, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடர்ந்தால், தற்போதைய மோதல் “ஒரு புதிய பரிமாணத்தை எடுக்கும்” என்று ஈரானிய ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் முகமது அக்ராமியன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். டெலிகிராம் சமூக ஊடக தளத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், “அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தால், இந்தப் போரை புதிய முனைகளுக்கு விரிவுபடுத்த ஈரான் நடவடிக்கை எடுக்கும்” என்று அவர் கூறினார். மேலும், ஈரானிய ஆயுதப் படைகளின் உண்மையான வலிமை மற்றும் திறன்களில் பெரும்பகுதி இன்னும் உலகிற்கு வெளிப்படுத்தப்படவில்லை என்றும் […]

உலகம்

ஈரானின் தொடர் தாக்குதலால் கத்தாரில் மூவர் படுகாயம்

  • July 12, 2026
  • 0 Comments

கத்தாரில் ஈரான் நடத்திய தொடர் தாக்குதல்களால் சிறிய குழந்தை உள்பட மூன்று பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 140 ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் இன்று தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலைத் தாங்கள் இடைமறித்ததாகவும், அதனால் சிதறல்கள் விழுந்ததாகவும் கத்தார் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அந்த சிதறல்களின் காரணமாக மூவர் படுகாயம் அடைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அநேரம் ஐக்கிய அரபு […]

உலகம்

ஈரானை தாக்க ஆயிரம் ஏவுகணைகள் தயார் – டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை

  • July 11, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது மீண்டும் ஒருமுறை அச்சுறுத்தும் மற்றும் கடுமையான தொனியைப் பயன்படுத்தியுள்ளார். ஈரானைக் குறிவைத்துத் தாக்குவதற்கு 1,000 ஏவுகணைகள் தயாராக உள்ளதாக அவர் தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் ஈரானின் அனைத்துப் பகுதிகளையும் முற்றிலுமாக அழிக்குமாறு அமெரிக்க இராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஈரான் தன்னைக் கொன்றுவிடுவோம் என்ற தனது அச்சுறுத்தலை நிறைவேற்றினாலோ அல்லது கொல்ல முயற்சித்தாலோ கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். […]

உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரம் – ஈரானுக்கு 24 மணிநேரம் கெடு

  • July 11, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தவும், அனைத்து கப்பல் வழித்தடங்களும் சுங்கக் கட்டணமின்றி திறந்திருப்பதை உறுதி செய்யவும் ஈரான் 24 மணி நேரத்திற்குள் பகிரங்கமாக உறுதியளிக்க வேண்டும் என அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது. ஈரான் இணங்கத் தவறினால் “கடுமையான விளைவுகள்” ஏற்படும் எனவும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தச் செய்தியை நேரடியாகவும் பிராந்திய மத்தியஸ்தர்கள் மூலமாகவும்  தெரிவித்துள்ளது. முன்னதாக ஹோர்முஸ் ஜலசந்தி திறந்திருப்பதாகவும், அந்த நீர்வழியைக் கடக்க முயற்சிக்கும் வர்த்தகக் கப்பல்கள் தாக்கப்படாது என்றும் அமெரிக்கா […]

உலகம்

“KILL TRUMP” : ஈரானில் ட்ரம்புக்கு எதிராக முழக்கம்

  • July 9, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்யுமாறு வலியுறுத்தும் பதாதைகள் ஈரானில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இன்று காலை மஷ்ஹத் நகரில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் KILL TRUMP என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. முன்னதாக கமேனியின் இறுதி அஞ்சலியின்போது ஒன்றுக்கூடிய மக்கள் ட்ரம்பின் மரணத்தை வேண்டி கோஷமிட்டிருந்தனர். இதற்கிடையே நேட்டோ உச்சிமாநாட்டில் பேசிய ட்ரம்ப் தனக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதை ஒப்புக்கொண்டார். அத்துடன் ஈரானின் கொலை பட்டியலில் தான் முதலிடத்தில் இருப்பதாகவும் கூறினார். மேலும் தம்மைக் குறிவைத்து ஒரு படுகொலையை அரங்கேற்றுவதற்கு […]

உலகம்

ஈரான் மீதான புதிய தாக்குதல்கள் முற்றிலும் அவசியமானவை – மார்க் ரூட்டே

  • July 8, 2026
  • 0 Comments

ஈரான் மீதான அமெரிக்காவின் புதிய தாக்குதல்கள் “முற்றிலும் அவசியமானவை” என்று நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே  (Mark Rutte) இன்று தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் ஜலசந்தியில் மூன்று எண்ணெய்க் கப்பல்கள் எறிகணைகளால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க இராணுவம் ஈரான் மீதான தாக்குதல்களை முடக்கிவிட்டுள்ளது. தெஹ்ரான் எண்ணெய் விற்பனை செய்வதற்கான உரிமத்தையும் ரத்து செய்தது. இது ஏற்கனவே பலவீனமாக இருந்த போர்நிறுத்தத்தின் மீது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ தலைவர்களின் உச்சி மாநாட்டிற்கு முன்பு பேசிய […]

உலகம்

அமெரிக்காவுடன் எந்வொரு பேச்சுவார்த்தைக்கும் திட்டமிடவில்லை – ஈரான்

  • June 30, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் திட்டமிடவில்லை என ஈரான் உத்தியோகப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது. தோஹாவில் அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் சந்திப்பார்கள் என்று ட்ரம்ப் முன்னதாக கூறியிருந்த நிலையில் ஈரான் அதனை திட்டவட்டமாக மறுத்து மேற்படி தெரிவித்துள்ளது. இந்த முரண்பட்ட அறிக்கைகள் அமெரிக்க-ஈரான் ராஜதந்திரத்தின் எதிர்காலம் குறித்து புதிய நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளன. ஈரானிய தொழில்நுட்பக் குழு ஒன்று இந்த வாரம் கத்தாருக்குப் பயணம் மேற்கொள்ளும் என்று ஈரானின் வெளியுறவு அமைச்சகம் கூறியது. ஆனால் அந்தப் பயணம் அமெரிக்க […]

உலகம்

கோதுமை, சோயாபீன்ஸை ஈரானுக்கு ஏற்றுமதி செய்ய தயாராகும் அமெரிக்கா?

  • June 26, 2026
  • 0 Comments

அமெரிக்க விவசாய ஏற்றுமதிகளுக்கு ஈரான் விரைவில் ஒரு புதிய சந்தையாக மாறும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உணவுப் பற்றாக்குறையால் அந்நாடு தவித்து வருவதால், கோதுமை, சோயாபீன்ஸ் மற்றும் மக்காச்சோளத்தை கொள்வனவு செய்வதற்கு  ஈரானிய நிதியை அமெரிக்கா பயன்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்க விவசாயிகளுடனான கலந்துரையாடலில் ட்ரம்ப் இதனை அறிவித்துள்ளார். ஈரான்  உணவுப் பற்றாக்குறையால் மிகவும் சிரமப்பட்டு வருவதாக ட்ரம்ப் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும், தெஹ்ரான் இந்தக் கூற்றை உடனடியாக நிராகரித்தது. ஈரானின் […]

உலகம்

அமெரிக்கா ஈரான் மீது எப்போது, ​​ஏன் பொருளாதாரத் தடைகளை விதித்தது?

  • June 23, 2026
  • 0 Comments

ஈரான் மீது அமெரிக்கா நீண்டகாலமாகத் தடைகளை விதித்து வருகிறது. 1979-இல் தொடங்கிய இந்தத் தடைகள் ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கப் போரின் காரணமாக இந்த ஆண்டும் தொடர்கிறது. 1979 ஈரானில் இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, ஈரானிய மாணவர்கள் தெஹ்ரானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தைக் கைப்பற்றி, அமெரிக்கத் தூதர்களைப் பணயக்கைதிகளாகப் பிடித்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அமெரிக்கா முதன்முறையாக ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. ஈரானிய இறக்குமதிகளுக்குத் தடை விதித்ததுடன், சுமார் 12 பில்லியன் டொலர் மதிப்புள்ள ஈரானிய சொத்துக்களையும் முடக்கியது. […]

கருத்து & பகுப்பாய்வு

இஸ்ரேலில் ஆச்சரியமூட்டும் கணக்கெடுப்பு: 92 வீத பொது மக்கள் போரில் ஈரான் வெற்றி பெற்றதாக கருதுகின்றனர்

  • June 23, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் சமீபத்தில் நடந்த போரும், அதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தமும், இஸ்ரேலின் நீண்டகாலப் பாதுகாப்பைப் பலவீனப்படுத்தியுள்ளதாகவும், ஈரானுக்கே அதிக நன்மை அளித்துள்ளதாகப் பெரும்பாலான இஸ்ரேலியர்கள் நம்புவதாக புதிய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. வெளிநாட்டு செய்தி நிறுவனமான AFP-இன் படி, ஜூன் 17 முதல் 20 வரை ஜெருசலேமின் ஹீப்ரு பல்கலைக்கழகம் மற்றும் ஆகம் நிறுவனம் இணைந்து நடத்திய கணக்கெடுப்பில் 3,644 பேர் பங்கேற்றனர். கணக்கெடுப்பு முடிவுகளின்படி, 92.1 சதவீத இஸ்ரேலிய குடிமக்கள், […]