ஐரோப்பா

பிரித்தானியாவில் 14 வயது சிறுமி மீது கொலைகுற்றச்சாட்டு!! நீதிமன்றத்தில் முன்னிலை!

  • June 12, 2026
  • 0 Comments

மென்செஸ்டரில் உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற கத்திகுத்து தாக்குதலுடன் தொடர்புடைய 14 வயது சிறுமி  இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் காணொளி காட்சி மூலம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது ​​அவர் மூன்று கொலை முயற்சி குற்றச்சாட்டுகளையும், பாடசாலை வளாகத்தில் கூர்மையான ஆயுதத்தை வைத்திருந்த இரண்டு குற்றச்சாட்டுகளையும்  எதிர்கொண்டார். வழக்கை விசாரணை செய்த நீதிபதி குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மை காரணமாக, கிரவுன் நீதிமன்றத்தில் விசாரணை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கமைய அடுத்த விசாரணை ஜுன் 19 அன்று ஓல்ட் […]

ஐரோப்பா

பிரிட்டனின் மிகப்பெரிய போர்க்கப்பலில் குறைப்பாடு!! தாமதமாகும் பயணம்!

  • June 6, 2026
  • 0 Comments

பிரிட்டனின் மிகப்பெரிய போர்க்கப்பலான, எச்.எம்.எஸ் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் (HMS Prince of Wales) கப்பலில் சிறிய தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 3.5 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள இந்த விமானம் தாங்கி கப்பல், அட்லாண்டிக் மற்றும் உயர் வடக்குப் பகுதிகளில் பாதுகாப்பை வழங்கும் நோக்கில் புறப்பட்டிருந்தது. இந்நிலையில் நோர்வேயின் ஸ்டாவாங்கர் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது தொழில்நுட்ப கேளாாறை எதிர்கொண்டதாக அதிகாரிகள் உறுதிப்படுதுதியுள்ளனர். மேற்படி கோளாறு சீரமைக்கப்பட்டவுடன் வரும் நாட்களில் கப்பல் தனது பயணத்தைத் தொடரும் என்றும் பாதுகாப்பு […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் சீக்கியர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார்களா?

  • June 3, 2026
  • 0 Comments

பிரத்தானியாவில் ஹென்றி நோவாக்கின் மரணத்தைத் தொடர்ந்து சீக்கிய கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. திக்வாவின் செயல்கள் சீக்கிய போதனைகளுக்கு முரணானவை என்று கூறி அவற்றைக் கண்டித்துள்ளனர். ஆனால், பிரத்தானியா முழுவதும் சீக்கியர்கள் பரவலாகக் குறிவைக்கப்படுவதாகவும், அச்சுறுத்தப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக சீக்கியர்கள் வழிமறிக்கப்பட்டு அச்சுறுத்தப்படுவதாக வரும் செய்திகளால், தங்கள் சமூகத்தினரிடையே அச்சம் நிலவுவதாக சீக்கியத் தலைவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். மேலும்,  நோவாக்கின்  இறுதித் தருணங்களைக் காவல்துறை கையாண்ட விதம் குறித்து மறுஆய்வு செய்யுமாறும், அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். குருத்வாராக்களில் கூடுதல் பாதுகாப்பு […]

ஐரோப்பா

பிரித்தானியாவை உலுக்கிய வெப்ப அலை : 15 பேர் பலி!

  • June 1, 2026
  • 0 Comments

சமீபத்திய வெப்ப அலையின் காரணமாக பிரித்தானியா முழுவதும் ஏறக்குறைய 15 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மரணங்கள் நீர் நிலைகளில் சம்பவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ரோயல் லைஃப் சேவிங் சொசைட்டி (Royal Life Saving Society), , தண்ணீரில் இறங்குவதற்கு முன்பு சிந்திக்குமாறு மக்களை வலியுறுத்தியுள்ளது. அதே நேரத்தில் இங்கிலாந்து சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனம் குளிர் நீர் அதிர்ச்சி குறித்து எச்சரித்துள்ளது.  

ஐரோப்பா

புலம்பெயர்தோரை நாடு கடத்தும் விவகாரத்தில் பிரிட்டனுக்கு சாதகமாக வந்த தீர்ப்பு!

  • June 1, 2026
  • 0 Comments

பிரித்தானியாவிற்கு புலம்பெயர்வோரை ருவாண்டாவிற்கு நாடு கடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த திட்டம் தோல்வியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பிரிட்டன் தனது ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறிவிட்டதாகக் கூறும் ருவாண்டா அரசாங்கம்  100 மில்லியன் பவுண்டுகளை நஷ்ட ஈடாக கோரி ஹேக்கில் உள்ள நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. வழக்கினை கடந்த மூன்று நாட்களாக விசாரித்த நீதிபதிகள் தோல்வியடைந்த இந்த திட்டத்திற்கு பிரித்தானியா பணம் செலுத்த வேண்டியதில்லை என தீர்ப்பளித்துள்ளனர். இதேவேளை 2024 ஆம் ஆண்டு தொழிற்கட்சி ஆட்சிக்கு […]

ஐரோப்பா

குறைந்த நிதி ஒதுக்கீடு!! கடந்தகால படிப்பினைகள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

  • May 31, 2026
  • 0 Comments

எபோலா தொற்றை கட்டுப்படுத்த கடந்தகாலத்தோடு ஒப்பிடுகையில் பிரித்தானியா இம்முறை குறைந்த அளவிலான நிதியை ஒதுக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. 2014-15-ல் £427 மில்லியன் வழங்கிய நிலையில், தற்போது வெறும் 21 மில்லியன் மட்டுமே வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதிகரித்து வரும் பாதுகாப்பு செலவீனங்களை கருத்தில் கொண்டு குறைந்த அளவிலான நிதி ஒதுக்கப்பட்டதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், உலகளாவிய சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவருமான பெக்கி கூப்பர் (Beccy Cooper), 2014/15 […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் முடிவுக்கு வரும் வெப்ப அலை : கனமழை பெய்ய வாய்ப்பு!

  • May 31, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் நிலவிய கடுமையான வெப்ப அலை முடிவுக்கு வரவுள்ளதாக மெட் அலுவலகம் தெரிவித்துள்ளது. அறிவிப்பின்படி அடுத்து வரும் இரண்டு நாட்கள் கடுமையான மழை பெய்யும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் வரைபடங்கள், கனமழை பரவலாகக் காணப்படுவதைக் காட்டுகின்றன; சில பகுதிகளில் மணிக்கு 8 மி.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று இரவு 11.00 மணியில் இருந்து மேற்கிலிருந்து மழை பெய்ய தொடங்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 35.1°C ஆக இருந்த அதிகபட்ச வெப்பநிலைக்குப் பிறகு, […]

ஐரோப்பா

பிரித்தானியா முழுவதும் கேட்ட மர்ம ஒலி!! வீடுகள் அதிர்ந்ததால் பரபரப்பு!

  • May 31, 2026
  • 0 Comments

பிரித்தானியா முழுவதும் நேற்றைய தினம் மர்மமான வெடிச் சந்தம் ஒன்று கேட்டதாக பெரும்பாலான மக்கள் முறைப்பாடு அளித்துள்ளனர். இந்நிலையில் இந்த சத்தம் விண்கல் அல்லது எரிமலைப் பாறையால் ஏற்பட்டிருக்கலாம் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மாசசூசெட்ஸில் (Massachusetts) உள்ள காவல் துறைகளுக்கு அந்தச் சத்தம் குறித்து ஏராளமான அழைப்புகள் கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குடியிருப்பாளர்கள் பலர் வீடு அதிரும் ஒரு உணர்வு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுவொரு விண்கல் தொடர்பான சத்தமாக இருக்கலாம் என வானிலை ஆய்வாளர்களான […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் குழாய் மூலமான நீர் விநியோகம் தடைப்பட வாய்ப்பு!

  • May 30, 2026
  • 0 Comments

பிரத்தானியாவை உலுக்கும் வெப்ப அலை காரணமாக நீர் பயன்பாடு கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மக்களுக்கு குழாய் மூலம் நீர் விநியோகம் செய்வதை நிறுத்துமாறு தேம்ஸ் வாட்டர் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கு பதிலாக தண்ணீர் ஊற்றும் கேன்களைப் பயன்படுத்தவும், முடிந்தவரை தண்ணீரை மறுபயன்பாடு செய்யவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கார் கழுவுதல் போன்ற பணிகளைத் தாமதப்படுத்தவும் தேம்ஸ் வாட்டர் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.  

ஐரோப்பா

பிரித்தானியாவில் கடும் வெப்ப அலைக்கு மத்தியில் சில பகுதிகளில் நீர் விநியோகம் தடை!

  • May 29, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் சில பகுதிகளில் தண்ணீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால்   சமையல், குளியல் மற்றும் கழிப்பறைகளைப் பயன்படுத்துதல் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு நீர் இன்றி மக்கள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக விட்ஸ்டபிள் மற்றும் ஹெர்ன் பே  (Herne Bay) உள்ளிட்ட பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. உணவகங்கள் மற்றும் கஃபே போன்ற வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இது குறிப்பிடத்தக்க நிதி இழப்புகளுக்கும், உள்ளூர் பொருளாதாரம் குறித்த கவலைகளுக்கும் வழிவகுத்துள்ளது. கடும் வெப்பம் காரணமாக ஏற்பட்ட அதிக தேவையே […]