இலங்கை

நீராட சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாயம்

  • April 15, 2026
  • 0 Comments

சேருநுவர, சோமாவதி வனத்தின் ஊடாகப் பாயும் மகாவலி கங்கையில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் மூழ்கிக் காணாமல் நேற்று (14) மாலை போயுள்ளனர். இவ்வாறு நீரில் மூழ்கியவர்கள் மஹிந்தபுர பகுதியைச் சேர்ந்த 24, 34 மற்றும் 35 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்களாவர். காணாமல் போன இந்த மூன்று சகோதரர்களும், அவர்களது தந்தை மற்றும் மற்றொரு சகோதரருடன் நீராடிக் கொண்டிருந்த போதே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளனர். காணாமல் போனவர்களின் […]

இலங்கை

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தை சேதப்படுத்திய நபர் விளக்கமறியலில்

  • April 12, 2026
  • 0 Comments

புதுப்பிக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் எதிர்வரும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 33 வயதுடைய குறித்த சந்தேகநபர் நபர் நேற்றைய தினம் (11) களனி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், சந்தேகநபர் இன்று (12) கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஏப்ரல் 17 ஆம் திகதி வரையில் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

உலகம்

லெபனான் தாக்குதலில் இலங்கை பெண் காயம்

  • April 9, 2026
  • 0 Comments

லெபனான் மீது நேற்று (08) நடத்தப்பட்ட தாக்குதல்களில் இலங்கை பெண் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். காயமடைந்த பெண் தற்போது நலமுடன் இருப்பதாக பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளினால் 10 நிமிடங்களுக்குள் லெபனான் மீது நடத்தப்பட்ட பாரிய வான்வழித் தாக்குதல்களில் இதுவரை 254 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,165 பேர் காயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதாரப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.  

இலங்கை

சாரதிகளுக்கு எச்சரிக்கை!

  • April 9, 2026
  • 0 Comments

மதுபோதையில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராகச் சட்டத்தை மிகக் கடுமையான முறையில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்துப் பாவனை மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் W.P.G.சேனாதீர தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள காவல்துறை தலைமையகத்தில் நேற்று (8) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், பண்டிகைக் காலத்தில் ஒரு சிறிய வாகன விபத்து இடம்பெற்றாலும் கூட, அதில் சம்பந்தப்பட்ட சாரதிகள் உடனடியாகப் போதைப்பொருள் பரிசோதனைக்கு […]

இலங்கை

அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்!

  • April 9, 2026
  • 0 Comments

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (9) காலை 8 மணி முதல் நாடு தழுவிய ரீதியில் 48 மணிநேர பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. உள்ளகப் பயிற்சி பெற்றவர்களுக்கான வைத்திய நியமனங்கள் அறிவிக்கப்பட்ட விதத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 436 புதிய வைத்திய அதிகாரிகளுக்கான புதிய சேவை இடங்கள், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்களினால் நேற்று(8) அறிவிக்கப்பட்டிருந்தன. இந்த நியமனங்கள் வழங்கப்பட்ட முறையில் காணப்படும் முரண்பாடுகள் மற்றும் அதிருப்தி […]

இலங்கை

USB பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை!

  • April 9, 2026
  • 0 Comments

இலங்கையில் கடந்த 2026ஆம் ஆண்டில் மாத்திரம் சுமார் 1.5 கோடி (14,960,244) உள்ளூர் Malware பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக சர்வதேச சைபர் பாதுகாப்பு நிறுவனமான Kaspersky தெரிவித்துள்ளது. இணையம் ஊடாகப் பரவும் வைரஸ்களை விட, USB Drives, குறுந்தகடுகள் (DVDs) போன்ற சாதனங்கள் மூலமாகவே 37.4 சதவீதமான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. அதாவது, இலங்கையில் உள்ள கணினிப் பயனாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இவ்வாறான சாதனங்கள் மூலம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். உள்ளூர் Malware அச்சுறுத்தல்களுக்கு ஆளாகும் நாடுகளின் பட்டியலில் இலங்கை […]

இலங்கை

இந்த வாரம் முதல் விசேட அரச விடுமுறை இரத்து!

  • April 6, 2026
  • 0 Comments

புதன்கிழமைகளில் வழங்கப்படும் விசேட அரச விடுமுறையானது இரத்து செய்யப்படுவதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி அறிவித்துள்ளார். நாளை மறுதினம், அதாவது ஏப்ரல் 8ஆம் திகதி புதன்கிழமை முதல் இந்த புதிய தீர்மானம் நடைமுறைக்கு வரும் என பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். இதேவேளை, எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து சிரமங்களைக் கருத்திற்கொண்டு அரச அலுவலகங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிச் சேவை துறைகளுக்காக இந்த விசேட விடுமுறை வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.  

இலங்கை

11 கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

  • April 6, 2026
  • 0 Comments

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 11 கோடியே 34 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளைக் கொண்டு வந்த இலங்கை பயணி ஒருவர், இன்று (06) சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொழும்பு, கொம்பனித்தெரு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலில் ஈடுபடும் 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். புதுடெல்லியில் இருந்து AI-277 என்ற விமானம் மூலம் அவர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். அவரது பயணப் […]

இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலையும் சடுதியாக அதிகரிப்பு

  • April 5, 2026
  • 0 Comments

இலங்கையில் இன்று (05) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லாஃப்ஸ் (LAUGFS) சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய LAUGFS சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 1070 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அதன் புதிய விலை 5,700 ரூபாயாகும் அதேநேரம் 5 கிலோ கிராம் நிறையுடைய LAUGFS சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 418 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 2,280 ரூபாயாகும்.

இலங்கை

மண்சரிவு எச்சரிக்கை!

  • April 5, 2026
  • 0 Comments

இரத்தினபுரி மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுப்பதற்குத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தின் கொலன்ன மற்றும் இரத்தினபுரி ஆகிய இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதலாம் கட்டத்தின் கீழ் ‘அவதானத்துடன் இருக்குமாறு’ அறிவுறுத்தப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிவித்தல், நேற்று (04) மாலை 5.00 மணி முதல் இன்று மாலை 5.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் […]

error: Content is protected !!