உலகம் செய்தி

ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் 1,400 பேரின் கதையை முடித்துவிட்டோம்: மார்தட்டுகிறது இஸ்ரேல்!

  • April 10, 2026
  • 0 Comments

லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்த 1,400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் பாதுகாப்பு தரப்பு மேற்படி தகவலை இன்று (10) வெளியிட்டுள்ளது. தெற்கு லெபனானில் முன்னெடுக்கப்பட்ட தீவிர ராணுவ நடவடிக்கையின்போது ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயிரக்கணக்கான தளங்கள் அழிக்கப்பட்டன எனவும் இஸ்ரேல் கூறியுள்ளது. மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டுவதற்கு பல நாடுகள் முயற்சித்துவரும் சூழ்நிலையில், லெபனான்மீதான இஸ்ரேலின் கோரத் தாக்குதல் அமைதி முயற்சிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. போர் நிறுத்த பொறிமுறைக்குள் லெபனானையும் உள்வாங்குமாறும், அந்நாடுமீதான தாக்குதலை […]

உலகம் செய்தி

இஸ்ரேல், ஸ்பெயினுக்கிடையில் ராஜதந்திர போர் வெடிப்பு!

  • April 10, 2026
  • 0 Comments

காசா போர்நிறுத்த நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து Gaza ceasefire coordination hub ஸ்பெயினை நீக்குவதற்கு இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu நடவடிக்கை எடுத்துள்ளார். ஈரான்மீதான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளை ஸ்பெயின் கடுமையாக விமர்சித்ததே நிலையிலேயே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினின் நிலைப்பாடு இஸ்ரேலிய படையினரை அவமதிப்பதாகக் கருதும் நெதன்யாகு, தங்கள் நாட்டிற்கு எதிராகச் செயல்படும் நாடுகளுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஸ்பெயினுக்கு இடையிலான இந்த மோதல் சர்வதேச அமைதிப் பேச்சுவார்த்தையில் ஒரு புதிய […]

உலகம் செய்தி

பாதுகாப்பு வளையத்திற்குள் இஸ்லாமாபாத்! படைகள் குவிப்பு!!

  • April 10, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மிகத்தீவிரமான பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான இராஜதந்திர பேச்சுவார்த்தை நாளை (11) இடம்பெறவுள்ள நிலையிலேயே இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 10,000 பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதால், தலைநகர் முழுவதும் முழு அடைப்பு (லொக்டவுன்) நிலையில் காணப்படுகிறது. புhடசாலைகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சில தொழில்நுட்பக் காரணங்களால் திட்டமிடப்பட்ட கூட்டம் ஒரு நாள் தள்ளிவைக்கப்பட்டாலும், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் ஏற்கனவே வருகை தரத் […]

அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிப்பு!

  • April 10, 2026
  • 0 Comments

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 104 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீது நாடாளுமன்றத்தில் இன்று காலை முதல் விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் நிறைவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்போது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக, 153 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். 49 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து, 104 வாக்குகளால் நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தது. நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களும், […]

உலகம் செய்தி

லெபனானில் லட்சக்கணக்கானோர் இடம்பெயர்வு: தலைதூக்கும் மனிதாபிமான நெருக்கடி!

  • April 10, 2026
  • 0 Comments

லெபனானில் தீவிரமடைந்து வரும் மோதல்களால் ஏற்பட்டுள்ள கடுமையான மனிதாபிமான நெருக்கடி குறித்து உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது. லெபனானில் இஸ்ரேல் நடத்திவரும் உக்கிர தாக்குதல்களால் இதுவரை பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர் என உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது. அதேபோல நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட உதவிகளுக்குரிய நிதிய ஐக்கிய நாடுகள் சபை தற்போது வழங்கி வருகிறது. எனினும், இந்த உயிர் காக்கும் […]

இந்தியா

வீட்டில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்: உயர்நீதிமன்ற நீதிபதி ராஜினாமா!

  • April 10, 2026
  • 0 Comments

தமது வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரத்தையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா Yashwant Verma , தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அவர் கடிதம்மூலம் தெரியப்படுத்தியுள்ளார். டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீ விபத்து ஏற்பட்டது. இதன்போத அவர் வீட்டில் இருக்கவில்லை. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் பொலிஸார் வீட்டில் தீயை […]

உலகம் செய்தி

ஹர்முஸ் நீரிணை திறப்பு: இந்திய, ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்கள் ஆராய்வு!

  • April 10, 2026
  • 0 Comments

மேற்காசியாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலை குறித்து இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் தொலைபேசி ஊடாக கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து தடையின்றி இடம்பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும் என இரு நாட்டு அமைச்சர்களும் வலியுறுத்தினர். பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும், எரிசக்தி பாதுகாப்பை பலப்படுத்தவும் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட உறுதிபூண்டுள்ளன. மேற்காசிய போரால்; உயிரிழந்த இந்தியர்களுக்காக ஜப்பான் அமைச்சர் தனது ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டார்.

உலகம் செய்தி

பாகிஸ்தான் பிரதமருக்கு பறக்கும் ‘அழைப்புகள்’: நாளை நடக்கப்போவது என்ன?

  • April 10, 2026
  • 0 Comments

இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதில் பாகிஸ்தான் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தை நிரந்தர ஒப்பந்தமாக மாற்றும் நோக்கில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். பாகிஸ்தானின் இந்த ராஜதந்திர முயற்சியைப் பாராட்டும் வகையில் துருக்கி, பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் தொலைபேசி வாயிலாக வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். நாளை சனிக்கிழமை தொடங்கவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டம் […]

உலகம் செய்தி

மத்திய கிழக்கிலிருந்து ட்ரம்புக்கு அழைப்பை ஏற்படுத்திய பிரிட்டன் பிரதமர்: நடந்தது என்ன?

  • April 10, 2026
  • 0 Comments

பிரிட்டன் பிரதமரின் Keir Starmer வளைகுடா நாடுகளுக்கான விஜயமானது முக்கியமானதொரு இராஜதந்திர நகர்வாகக் கருதப்படுகின்றது. முதலில் சவுதி அரேபியாவுக்கு சென்ற Keir Starmer , அந்நாட்டில் முக்கியத்துமிக்க கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். அதன்பின்னர் நேற்று ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். மேற்படி நாடுகளிலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. குறிப்பாக வளைகுடா நாடுகள்மீதான ஈரானின் தாக்குதல்களைக் கண்டித்ததுடன், ஹார்முஸ் நீரிணைப் பகுதியை மீண்டும் திறப்பதற்கான முக்கியத்துவம் குறித்து நாட்டுத் தலைவர்களுடன் பிரிட்டன் பிரதமர் ஆலோசனை […]

உலகம் செய்தி

தாக்குதலுக்கு இலக்கான ஈரான் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் உயிரிழப்பு!

  • April 10, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா என்பன நடத்திய தாக்குதலில் காயமடைந்த ஈரானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் Kamal Kharrazi உயிரிழந்துள்ளார். ஈரான் ஊடகங்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்று வெளியாகியுள்ளன. ஏப்ரல் முதலாம் திகதி தெஹ்ரானில் உள்ள அவரது வீடுமீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்நிலையிலேயே தற்போது அவரும் உயிரிழந்துள்ளார். 1997 முதல் 2005 வரை ஈரான் வெளிவிவகார அமைச்சராகப் பணியாற்றியதோடு, […]

error: Content is protected !!