ஆசியா செய்தி

சவூதி அரேபியாவில் ஒரே வாரத்தில் 19,975 பேர் கைது

  • January 31, 2026
  • 0 Comments

குடியிருப்பு, வேலை மற்றும் எல்லை பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக ஒரு வாரத்தில் 19,975 பேரை சவூதி(Saudi) அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குடியிருப்பு சட்டங்களை மீறியதற்காக மொத்தம் 12,906 பேர் கைது செய்யப்பட்டனர். அதே நேரத்தில் 3,918 பேர் சட்டவிரோத எல்லை கடக்க முயற்சித்ததற்காகவும் 3,151 பேர் தொழிலாளர் தொடர்பான பிரச்சினைகளுக்காகவும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சவூதி அரேபியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதற்காக 1,716 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 60 சதவீதம் பேர் எத்தியோப்பியர்கள், 39 சதவீதம் […]

இலங்கை செய்தி

எரிபொருள் விலை திருத்தங்களை அறிவித்த இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

  • January 31, 2026
  • 0 Comments

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்(Ceypetco) எரிபொருள் விலை திருத்தங்களை அறிவித்துள்ளது. அதன்படி, ஆட்டோ டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைந்து 277 ரூபாய் ஆகவும், பெட்ரோல் 92 ஆக்டேன் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைந்து 292 ரூபாய் ஆகவும் உள்ளது. இதற்கிடையில், பெட்ரோல் 95 ஆக்டேன், சூப்பர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதற்கிடையில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்(Ceypetco) எரிபொருள் விலை திருத்தத்தை திருத்தியமைத்ததைத் தொடர்ந்து, லங்கா IOC நிறுவனமும் […]

ஐரோப்பா செய்தி

ஸ்பெயினில் காணாமல் போன பிரபல கோல்ப் வீரரின் வெண்கல சிலை துண்டு துண்டாக மீட்பு

  • January 31, 2026
  • 0 Comments

வடக்கு ஸ்பெயினின்(Spain) கான்டாப்ரியா(Cantabria) பகுதியில் உள்ள பெட்ரெனாவிலிருந்து(Petrerna) காணாமல் போன மறைந்த கோல்ஃப் வீரர் செவ் பாலேஸ்டெரோஸின்(Chev Ballesteros) வெண்கல சிலை மீட்கப்பட்டுளள்து. குறித்த வெண்கல சிலை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த போது துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர்வாசிகள் மற்றும் ரசிகர்களுக்கு குறிப்பிடத்தக்க உணர்ச்சிபூர்வமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ள இந்த வெண்கல சிலையின் மதிப்பு சுமார் 30,000 யூரோக்கள் ($35,820) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலையின் உடல் மற்றும் தலை அப்படியே இருந்தபோதிலும், கைகள் பல […]

செய்தி விளையாட்டு

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி

  • January 31, 2026
  • 0 Comments

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபல நியூசிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அந்தவகையில், ஐந்தாவது டி20 போட்டி திருவனந்தபுரத்தில்(Thiruvananthapuram) நடைபெற்றது. இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களுக்கு 5 விக்கெட்களை இழந்து 271 ஓட்டங்கள் குவித்தது. இந்திய அணி சார்பில், இஷான் கிஷான்(Ishan Kishan) 103 ஓட்டங்களும் சூர்யகுமார் யாதவ்(Suryakumar […]

உலகம் செய்தி

பலுசிஸ்தானில் பாதுகாப்புப் படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே மோதல் – 88 பேர் மரணம்

  • January 31, 2026
  • 0 Comments

தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தான்(Balochistan) முழுவதும் பல நகரங்களில் பாகிஸ்தானின் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 67 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த தாக்குதல்களில் 10 காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரும் 11 பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர். பலுசிஸ்தான் மாகாணம் முழுவதும் 12 வெவ்வேறு இடங்களில் தீவிரவாதிகள் இந்த ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்நிலையில், தாக்குதல்களைக் கண்டித்த பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி(Mohsin Naqvi) ஒரு அறிக்கையில் பாதுகாப்புப் படையினருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார். ஈரான்(Afghanistan) மற்றும் […]

இந்தியா செய்தி

ஜார்க்கண்டில் பகுதியளவு எரிந்த நிலையில் இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

  • January 31, 2026
  • 0 Comments

ஜார்க்கண்டின்(Jharkhand) கிரிதிஹ்(Giridih) மாவட்டத்தில் உள்ள ஒரு காட்டில் இளம் பெண்ணின் எரிந்த உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் சினோ(Sino) கிராமத்தைச் சேர்ந்த 21 வயது சஹினா தஹுல் அன்சாரி(Sahina Dahul Ansari) என அடையாளம் காணப்பட்டுள்ளார். பகோதர்(Bagodar) காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெக்கோ-கரிபஹாரி(Peko-Karipahari) வனப்பகுதிக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட சடலம், இறந்த பெண்ணின் தந்தை தஹுல் அன்சாரி(Dahul Ansari) மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வரதட்சணைக்காக தனது மகளை கொன்று பின்னர் ஆதாரங்களை மறைக்க சடலத்தை எரித்ததாக மருமகன் மற்றும் […]

உலகம் செய்தி

இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியா உடன் ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா

  • January 31, 2026
  • 0 Comments

இஸ்ரேலுக்கு(Israel) 6.67 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுத விற்பனைக்கும், சவுதி அரேபியாவிற்கு(Saudi Arabia) 9 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுத விற்பனைக்கும் டிரம்ப் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதிகரித்து வரும் பிராந்திய பதட்டங்கள் மற்றும் டிரம்பின் தொடர்ச்சியான காசா போர் நிறுத்த முயற்சிகளுக்கு மத்தியில் இந்த ஒப்பந்தங்கள் வந்துள்ளன. இஸ்ரேலுக்கான ஆயுத தொகுப்பில் $3.8 பில்லியன் மதிப்புள்ள 30 அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்கள்(Apache attack helicopters) அடங்கும். மேலும், $1.98 பில்லியன் மதிப்புள்ள 3,250 இலகுரக தந்திரோபாய […]

இந்தியா செய்தி

கர்நாடகாவில் நடந்த வெடிவிபத்தில் பாடசாலை குழந்தைகள் உட்பட 6 பேர் காயம்

  • January 31, 2026
  • 0 Comments

கர்நாடகாவின்(Karnataka) மோல்கேரா(Molkera) கிராமத்தில் உள்ள மோல்கி மாரய்யா(Molki Marayya) கோயில் அருகே சாலையோரப் பகுதியில் சதேகத்திற்கிடமான பொருள் ஒன்று வெடித்ததில் பாடசாலை குழந்தைகள் உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலரின் காயங்கள் கடுமையானவை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிராமத்திலும் அதைச் சுற்றியும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெடித்த பொருளின் தன்மை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் மாதிரிகளை சேகரித்து வெடிப்புக்கான காரணத்தை மதிப்பிடுவதற்காக தடயவியல் குழுக்கள் சம்பவ […]

இலங்கை செய்தி

இந்தியாவிடமிருந்து 10 பெய்லி பாலங்கள் இன்று இலங்கைக்கு

  • January 31, 2026
  • 0 Comments

“டிட்வா” புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது சேதமடைந்த பாலங்களைப் புனரமைக்கும் நோக்கில், இந்தியா மேலும் 10 பெய்லி பாலங்களை இன்று (31) இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது எக்ஸ் (X) பக்கத்தில் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த பாலங்கள் இந்தியா இலங்கைக்கு வழங்க முன்வந்துள்ள 450 மில்லியன் டொலர் பொருளாதாரப் பொதியின் ஒரு அங்கமாகும் என அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த பாலங்கள் இலங்கைக்கு வந்தடைந்ததும், பாதிக்கப்பட்ட […]

ஆசியா செய்தி

காசா மீது இஸ்ரேல் தாக்குதல் – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

  • January 31, 2026
  • 0 Comments

போர் நிறுத்தத்திற்கு மத்தியில் காசாவில்(Gaza) இஸ்ரேல்(Israel) நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது. வடக்கு மற்றும் தெற்கு காசாவில் உள்ள இடங்களை குறிவைத்து தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் இது அக்டோபர் மாதம் போர் நிறுத்தத்திற்குப் பிறகு நடத்தபட்ட மிகப்பெரிய தாக்குதல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காசா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடம் மற்றும் கான் யூனிஸில்(Khan Younis) உள்ள ஒரு கூடார முகாம் ஆகியவை அடங்கும் என்று ஷிஃபா(Shifa) மருத்துவமனை தெரிவித்துளளது. இரண்டு வெவ்வேறு […]

error: Content is protected !!