அமெரிக்காவின் அச்சுறுத்தல் தொடரும்வரை ஓயமாட்டோம்: ஈரான் எச்சரிக்கை
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC), ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அங்குள்ள ஒரு விமானப்படை தளம் மற்றும் கட்டளை மையம் (command centre) ஆகியவற்றைக் குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளது. அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் தொடரும் வரை, ஈரானிய தரப்பின் எதிர்ப்பும் தொடர்ந்து கொண்டிருக்கும் என்றும், தெஹ்ரானுக்கு எதிரான அச்சுறுத்தல் நிறைந்த பேச்சை அமெரிக்க அதிகாரிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. மேலும், ஈரானிய தரப்பால் அங்கீகரிக்கப்படாத […]









