Trump has Modi top of mind: Will visit Delhi within this year இந்தியா உலகம் செய்தி

ட்ரம்பின் மனதில் மோடிக்கு முதலிடம்: இவ்வருடத்துக்குள் டெல்லி விஜயம்

  • September 5, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சந்திக்க விரும்பும் தலைவர்களில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியே முதலிடத்தில் உள்ளார் என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் கூறியவை வருமாறு , “வரும் டிசம்பரில் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், டோரல் நகரில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் 35-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். அப்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் […]

காங்கிரஸ் மூத்த தலைவரான சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘பிலாங்கிங்’ (Belonging), வரும் நவம்பர் 10-ஆம் திகதி ஹார்பர்காலின்ஸ் (HarperCollins) பதிப்பகத்தால் வெளியிடப்படவுள்ளது. இந்தியா செய்தி

சோனியா காந்தியின் சுயசரிதை நூல் நவம்பரில் வெளியீடு

  • September 5, 2026
  • 0 Comments

காங்கிரஸ் மூத்த தலைவரான சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘பிலாங்கிங்’ (Belonging), வரும் நவம்பர் 10-ஆம் திகதி ஹார்பர்காலின்ஸ் (HarperCollins) பதிப்பகத்தால் வெளியிடப்படவுள்ளது. இப்புத்தகத்தில் சோனியா காந்தியின் குழந்தைப் பருவம், திருமணம், ராஜீவ் காந்தி படுகொலை மற்றும் அவரது அரசியல் பிரவேசம் ஆகிய முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. முன்னதாக, இந்நூலை வெளியிடவிருந்த “பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா” (Penguin Random House India) நிறுவனம் இதிலிருந்து பின்வாங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் […]

இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாகப் பரவியுள்ள அடர் புகை மூட்டம் (Haze), காற்று மாசுபாட்டை அபாயகரமான நிலைக்கு உயர்த்தியதை அடுத்து , மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

இந்தோனேசிய காட்டுத்தீயால் பரவும் அடர் புகை: மலேசியாவில் அவசரநிலை பிரகடனம்

  • September 5, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாகப் பரவியுள்ள அடர் புகை மூட்டம் (Haze), காற்று மாசுபாட்டை அபாயகரமான நிலைக்கு உயர்த்தியதை அடுத்து , மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. “பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் காற்று மாசுபாடு உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, சரவாக் மாநிலத்தின் செரியான் (Serian) பிரிவு முழுவதிலும் அவசரநிலையைப் பிரகடனப்படுத்த மன்னர் சுல்தான் இப்ராஹிம் ஒப்புதல் அளித்துள்ளார்” எனப் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் […]

இந்தியா, கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 8 மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்து தேசிய நெடுஞ்சாலை 66-ல் நிகழ்ந்துள்ளது. இந்தியா செய்தி தமிழ்நாடு

கேரளாவில் கோர விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் பலி

  • September 5, 2026
  • 0 Comments

இந்தியா, கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 8 மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்து தேசிய நெடுஞ்சாலை 66-ல் நிகழ்ந்துள்ளது. தமிழகத்தின் மதுரை பதிவு எண் கொண்ட காரில் 8 பேர் பயணித்துள்ளனர். அந்தக் கார் குருவாயூரில் இருந்து கொடுங்கல்லூர் நோக்கி சென்றுள்ளது. அப்போது அதே திசையில் ஒரு லாரி நிறுத்தப்பட்டிருந்தது. அங்கு சாலை பணியும் நடந்து வருகிறது. இந்நிலையில், எதிர்பாராத விதமாக அந்த […]

நாட்டில் இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிற்றோ சமையல் எரிவாயு விலை குறைக்கப்படுவதாக லிற்றோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன அறிவித்துள்ளார். இலங்கை செய்தி

இலங்கையில் சமையல் எரிவாயு விலை குறைப்பு

  • September 5, 2026
  • 0 Comments

நாட்டில் இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிற்றோ சமையல் எரிவாயு விலை குறைக்கப்படுவதாக லிற்றோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன அறிவித்துள்ளார். இதற்கமைய 12.5 கிலோ லீற்றோர் கேஸ் சிலிண்டர் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 4,365 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5 கிலோ லீற்றோர் கேஸ் சிலிண்டர் விலை 42 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 1,750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2.3 கிலோ கிலோ […]

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக எதிர்வரும் 8ஆம் திகதி கொழும்பு வரவுள்ளார். இலங்கை செய்தி

08 ஆம் திகதி இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்

  • September 5, 2026
  • 0 Comments

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக எதிர்வரும் 8ஆம் திகதி கொழும்பு வரவுள்ளார். இந்தப் பயணத்தின் போது, ​​இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்து இலங்கை தலைவர்களுடன் அவர் விரிவான கலந்துரையாடல்களை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 9 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோரை இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திக்கவுள்ளார். […]

உலகளாவிய உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் , 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதிக்குப் பிந்தைய மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

போர், மோசமான வானிலையால் உலகளவில் உச்சம் தொட்ட உணவுப் பொருட்களின் விலை

  • September 4, 2026
  • 0 Comments

உலகளாவிய உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் , 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதிக்குப் பிந்தைய மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. மோசமான வானிலை மாற்றம் மற்றும் கருங்கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் இடையூறுகள் காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விநியோகத்தில் அச்சம் ஏற்பட்டுள்ளதாலேயே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் வர்த்தகம் செய்யப்படும் உணவுப் பொருட்களின் மாதாந்த விலை மாற்றங்களைக் கண்காணிக்கும் ஐ.நா.வின் […]

பிரித்தானியாவின் தீவிர வலதுசாரி Reform UK கட்சியின் தலைவரான நைஜல் பராக்கின் (Nigel Farage) இரு மூத்த உதவியாளர்கள் வெள்ளிக்கிழமை தமது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். ஐரோப்பா செய்தி

Reform UK கட்சிக்கு நெருக்கடி: முக்கிய இரு பிரமுகர்கள் ராஜினாமா

  • September 4, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் தீவிர வலதுசாரி Reform UK கட்சியின் தலைவரான நைஜல் பராக்கின் (Nigel Farage) இரு மூத்த உதவியாளர்கள் வெள்ளிக்கிழமை தமது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். வெளிநாட்டு நன்கொடையாளர் ஒருவர் மூலம் அரசியல் கருத்துக்கணிப்புக்கான நிதியைப் பெற வழிவகை செய்து, நாட்டின் தேர்தல் சட்டத்தை இக்கட்சி மீறியுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட இரகசிய விசாரணையில் குற்றம் சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், கட்சி எந்தவொரு தவறும் செய்யவில்லை என மறுத்துள்ளதோடு, காலநிலை மாற்ற ஆர்வலர்களால் முன்னெடுக்கப்பட்ட சதித்திட்டத்திற்கே (Hoax) […]

கச்சத்தீவு இலங்கைக்கே உரித்தானது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். செய்தி

கச்சத்தீவு இலங்கையின் சொத்து: தமிழக அரசியல்வாதிகளுக்கு அமைச்சர் பதிலடி

  • September 4, 2026
  • 0 Comments

கச்சத்தீவு இலங்கைக்கே உரித்தானது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (04) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கை அதிகாரிகள் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர். இந்தப் பயணம் கச்சத்தீவு தொடர்பில் விவாதிப்பதற்கானதல்ல. மாறாக, இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வரும் மீனவர் பிரச்சினைகள் உள்ளிட்ட நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் […]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

நாமல் ராஜபக்சவுக்கு விளக்கமறியல் உத்தரவு

  • September 4, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். போதரகம இந்த விளக்கமறியல் உத்தரவை வழங்கினார். லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டாரவின் சமர்ப்பணங்கள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை […]