அரசியல் இலங்கை செய்தி

ஐ.எம்.எப். ஒப்பந்தம் மறுசீரமைக்கப்பட வேண்டும்: சஜித் வலியுறுத்து!  

  • December 11, 2025
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் செயல்முறை அரசியல் மயப்படுத்தப்படக்கூடாது  என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று (11)  வலியுறுத்தினார். “ நிவாரணங்களை  பெறுவதற்கு  அரச அதிகாரிகள் மாத்திரமின்றி  “பிரஜா சக்தி” போன்ற சமூகக் குழுக்களின்  சான்றுபடுத்தலையும் கோருவது ஏற்புடையது அல்ல. இது  நிவாரண பணிகளை வேறொரு திசையை நோக்கி நகர்த்தும் நடவடிக்கையாகும். எனவே, தூய்மையான பொறுப்புணர்வுள்ள பொறிமுறையொன்றை செயல்படுத்த வலியுறுத்துகின்றோம்.” எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார். “    நாட்டின்  இடர் முகாமைத்துவ செயல்முறை […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கை மீண்டெழ சர்வதேச உதவி: எதிர்க்கட்சி தலைவரும் களத்தில்!

  • December 10, 2025
  • 0 Comments

  டித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு சர்வதேச உதவிகளைப் பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் இறங்கியுள்ளார். இதற்கமைய கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுடன் அவர் தொடர் சந்திப்புகளில் ஈடுபட்டுவருகின்றார். இதன் மற்றுமொரு அங்கமாக இலங்கைக்கான பங்களாதேஷ் தூதுவர், அந்தலிப் எலியாஸை (10) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து சஜித் சந்தித்தார். இலங்கை எதிர்கொண்ட சகல இக்கட்டான தருணங்களிலும் பங்களாதேஷ் இலங்கையுடன் நெருக்கமாக செயற்பட்டமைக்கு ஒட்டுமொத்த இலங்கையர்களின் சார்பாகவும் எதிர்க்கட்சித் […]

இலங்கை

இடர் முகாமைத்துவ பொறிமுறையை மாற்றுமாறு வலியுறுத்து! 

  • December 9, 2025
  • 0 Comments

பேரிடரில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இடர் முகாமைத்துவ பொறிமுறையை நாம் மாற்றியமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட நிலையில் அடைத்தங்கள் முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்தவேளையிலேயே சஜித் பிரேமதாச இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ காலநிலை மாற்றங்களால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. இதன் விளைவாக ஏற்படும் அனர்த்தங்கள் மற்றும் அபாயங்கள் குறித்து தெரிவிக்கும் முறையான முன்னெடுப்பு நடவடிக்கை […]

அரசியல் இலங்கை

இலங்கைக்காக ஆஸ்திரேலியாவிடம் உதவி கோருகிறார் எதிர்க்கட்சி தலைவர் 

  • December 8, 2025
  • 0 Comments

டித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் உட்கட்டமைப்பு வசதிகளை மீளமைத்து, மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு ஆஸ்திரேலியாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவரை இன்று சந்தித்தவேளையிலேயே இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவரை இன்று சந்தித்து பேச்சு நடத்தினார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இச்சந்திப்பு […]

அரசியல் இலங்கை

அரசு பொறுப்புகூற வேண்டும்: சஜித் வலியுறுத்து

  • December 5, 2025
  • 0 Comments

வளிமண்டலவியல் திணைக்கள் அதிகாரிகள் 15 நாட்களாக முன் அறிவிப்புச் செய்து கொண்டிருந்த வேளை, தூங்கிக் கொண்டிருந்த அரசாங்கம், அனர்த்தம் ஏற்பட்ட பின்பு வானிலை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஏற்புடையது அல்ல என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இன்று விசேட அறிவிப்பொன்றை விடுத்தே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் சஜித் பிரேமதாச மேலும் கூறியவை வருமாறு, ” நாட்டில் புயல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று சிலர் […]

அரசியல் இலங்கை

இனவாதத்துக்கு சமாதி கட்டுமாறு சஜித் வலியுறுத்து

  • November 26, 2025
  • 0 Comments

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மதவாதம மற்றும் இனவாத மோதல்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்காக உடனடியாக தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் , எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இந்த வலியுறுத்தலை மேற்கொண்டுள்ளனர். “ அரசியலமைப்பில் நமது நாடு ஜனநாயக நாடாக பலப்படுத்தப்பட்டுள்ளது. இதை நடைமுறையில் யதார்த்தமாக்குவது நம் அனைவரினதும் பொறுப்பாகும். இனங்கள், மதங்களுக்கு இடையில் ஒற்றுமையையையும் நல்லிணக்கத்தையும் பலப்படுத்த பழமைவாதக் கருத்துக்களுக்கு அப்பால் சென்ற தனித்துவமான பணி எம்முன்னால் […]

அரசியல் இலங்கை

ரணில், சஜித் அணிகள் இணைவு: காட்டப்பட்டது பச்சைக்கொடி !! 

  • November 24, 2025
  • 0 Comments

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒன்றிணைவதற்குரிய சாதக ழ்நிலை உருவாகியுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தெரிவித்தனர். ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்களுடனான விசேட சந்திப்பொன்று நேற்று நடைபெற்றது. இதன்போதே ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைவது தொடர்பான பொறுப்பை ஏற்பதற்கு தான் தயாராக இருப்பதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டார் என்று அக்கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். இதற்கமைய இரு தரப்பு இணைவு விரைவில் சாத்தியமாகும் என்று ஐக்கிய […]

அரசியல் இலங்கை

தற்போதைய நிலையி்ல் நாமலே எதிர்க்கட்சி தலைவர் – மனோ கணேசன்

  • November 22, 2025
  • 0 Comments

“எதிர்கட்சி தலைவரான சஜித், இப்படி ஒரு கூட்டத்தை, வெளியே கூட்டி காட்டும் வரை, நாட்டிலே நாமல் எதிர்க்கட்சி தலைவர்” என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். நுகேகொடையில் நேற்று நடைபெற்ற கூட்டம் தொடர்பில் அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அதிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். மனோவின் முகநூல் பதிவு வருமாறு, ” நிகழ்வு ஆரம்பிக்க, முன்-பிடித்த, பின்–பிடித்த, படங்களை, போட்டு, ஊடக(ர்) நிறுவனங்களின் விருப்பபடி, கூட்டம் பற்றி, செய்திகள் போடலாம். […]

இலங்கை

என்.பி.பி. ஆட்சியை விரட்ட சஜித்துக்கும் அழைப்பு!

  • November 21, 2025
  • 0 Comments

கூட்டு எதிரணியின் அடுத்த கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர், முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். நுகேகொடை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ 76 வருடகாலம் நாட்டை நாம் நாசமாக்கவில்லை. 1965 இல் ஜே.வி.பி. உதயமான பின்னரே நாடு வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. எல்லா திட்டங்களையும் அவர்கள் குழப்பினார்கள். எனவே, 76 வருடகால சாபம் நாம் அல்லர். ஜே.வி.பியினர் என்பதை புரிந்துகொள்ள […]

அரசியல் இலங்கை

மாகாணசபைத் தேர்தல்: சஜித் அணி எடுத்துள்ள முடிவு!

  • November 13, 2025
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலை பழைய முறைமையின்கீழ் நடத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் முகாமைத்துவக்குழு கூட்டம் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்றிரவு கூடியது. இதன்போது வரவு- செலவுத் திட்டம் உட்பட சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன. அவ்வேளையிலேயே அடுத்த வருடம் ஆரம்பத்தில் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தக்கு அழுத்தம் கொடுக்கும் அரசியல் சமரை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆளுகையின்கீழ் […]

error: Content is protected !!