செய்தி

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு மஹிந்தவுக்கு அழைப்பு  

  • May 3, 2026
  • 0 Comments

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளுக்காக அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது இதன்படி,மே மாதம் 12 ஆம் திகதி வாக்குமூலம் அளிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் விமான சேவைக்காக விமானங்களை கொள்வனவு செய்தபோது, 02 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாக […]

இலங்கை செய்தி

3,000 பேரை சிக்கவைத்த இணைய மோசடி வலை – பொலிஸார் அவசர எச்சரிக்கை

  • May 3, 2026
  • 0 Comments

இலங்கையில் அண்மைக்காலமாக கணினி மற்றும் கையடக்கத் தொலைபேசி மூலம் இடம்பெறும் மோசடிகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அரசியல்வாதிகள், வர்த்தகர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் உட்பட 3,000 க்கும் மேற்பட்டோர் இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கணினி மற்றும் தொழில்நுட்ப அறிவு குறைவாக உள்ளவர்களே இந்த மோசடியாளர்களின் முக்கிய இலக்கு பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவ்வாறானா மோசடிகளில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றவர்கள் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் […]

செய்தி தமிழ்நாடு

தமிழக சட்டமன்றத் தேர்தல் – வாக்கு எண்ணும் பணிகளுக்காக குவிக்கப்பட்ட ஒரு இலட்சம் பொலிஸார்

  • May 3, 2026
  • 0 Comments

சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகளுக்காக தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த23 ஆம் திகதி நிறைவடைந்த நிலையில்,  வாக்கு எண்ணும் பணிகள் நாளை காலை ஆரம்பமாகவுள்ளன. இதன்படி, 234 தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தமிழகம் முழுவதும் 62 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணும் பணிகள் காலை […]

ஐரோப்பா செய்தி

உள்ளாட்சித் தேர்தலில் தொழிற்கட்சிக்கு பெரும் பின்னடைவு – கருத்து கணிப்பில் தகவல்

  • May 3, 2026
  • 0 Comments

  எதிர்வரும்வரும் வியாழக்கிழமை பிரித்தானியாவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில், தொழிற்கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படலாம் என கருத்து கணிப்புகள்  தெரிவிக்கின்றன. பிரதமர் தலைமையிலான கட்சி, தற்போது வைத்திருக்கும் சுமார் 2,500 உள்ளாட்சி மன்ற இடங்களில் 2,000 வரை இழக்கும் அபாயம் காணப்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தேர்தலில் சுமார் 5,000 கவுன்சிலர் பதவிகளுக்கு 25,000 க்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனால், வாக்காளர்களுக்கு இதுவரை இல்லாத அளவிலான தெரிவு வாய்ப்பு உருவாகியுள்ளது. இரண்டு முக்கிய கட்சிகளுக்கான […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் எரிபொருள் நெருக்கடி- பயணிகளை ஒரே விமானத்தில் இணைக்க விமான நிறுவனங்களுக்கு அனுமதி

  • May 3, 2026
  • 0 Comments

இந்த கோடை காலத்தில் எரிபொருள் நெருக்கடி ஏற்படும் அபாயம் காணப்படுவதால், ஒரே இடத்திற்குச் செல்லும் பல விமான சேவைகளில் உள்ள பயணிகளை ஒன்றாக இணைத்து குறைவான விமானங்களை இயக்க விமான நிறுவனங்களுக்கு பிரித்தானிய அரசு தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது. ஒரே நாளில் ஒரே இலக்கை நோக்கி செல்லும் பல சேவைகள் உள்ள வழித்தடங்களில்,பயணிகளின்றி செல்லும் விமானங்களை குறைத்து எரிபொருள் சேமிப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இதற்கமைய சில பயணிகள் தங்களின் முன்பதிவு செய்யப்பட்ட […]

ஐரோப்பா செய்தி

ஆங்கிலக் கால்வாய் கடக்க முயன்ற சிறுபடகு விபத்து – இரண்டு பெண்கள் உயிரிழப்பு

  • May 3, 2026
  • 0 Comments

பிரான்ஸ் நாட்டிலிருந்து சிறிய படகில் ஆங்கிலக் கால்வாயை கடந்து செல்ல முயன்றபோது, இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடக்கு பிரான்சின் கடற்கரை பகுதியில் இருந்து புறப்பட்ட அந்தப் படகில் சுமார் 82 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்த இரண்டு பெண்களும் 20 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் சூடான் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மூன்று பயணிகள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படகின் இயந்திரம் செயலிழந்ததால் அது கட்டுப்பாட்டை […]

இலங்கை செய்தி

பாரியளவான சட்டவிரோத நிதி மோசடி – 120 வெளிநாட்டவர்கள் கைது

  • May 3, 2026
  • 0 Comments

ராஜகிரிய, மெத வெலிக்கடை வீதியில் உள்ள இடமொன்றில் சட்டவிரோத நிதி மோசடிகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சுமார் 120 வெளிநாட்டவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சீனா, வியட்நாம், மலேசியா, மடகாஸ்கர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் கம்போடியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களிடமிருந்து ஏராளமான கணினிகள் மற்றும் கையடக்கத்தொலைபேசிகளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். மெத வெலிக்கடை வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றின் பல மாடிகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து, இவர்கள் […]

இந்தியா செய்தி

எரிவாயு விலை உயர்வு – மே 07 இல் தமிழகம் முழுவதும் கண்டன போராட்டம்

  • May 3, 2026
  • 0 Comments

வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் ரயில்வேயில் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் குறைக்கப்படுவதை கண்டித்து,  எதிர்வரும் 07 ஆம் திகதி தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் சிபிஐ (எம்.எல்) லிபரேசன் உள்ளிட்ட கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. கட்சிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை கடந்த […]

உலகம் செய்தி

மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ விமான நகர்வு அதிகரிப்பு

  • May 3, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமெரிக்கா இராணுவ விமானங்களின் செயல்பாடு திடீரென அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க இராணுவத்தின் விமானப் போக்குவரத்தில் கணிசமான உயர்வு காணப்படுவதுடன், இதில் பெரும்பாலும் போக்குவரத்து விமானங்கள் மற்றும் வானில் எரிபொருள் நிரப்பும் விமானங்கள் இடம்பெற்றுள்ளன. விமானப் பயணங்களை கண்காணிக்கும் Flightradar24 செயலியின் தகவலின்படி, சனிக்கிழமையன்று ஐரோப்பா விலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் புறப்படும் அமெரிக்க இராணுவ விமானங்களின் எண்ணிக்கையில் அசாதாரணமான உயர்வு பதிவாகியுள்ளது. அனுப்பப்பட்ட விமானங்களில் பெரும்பாலானவை C-17A Globemaster III ரக […]

உலகம் செய்தி

அணு ஒப்பந்தம் குறித்த அமெரிக்கா–ஈரான் பதற்றம் மீண்டும் அதிகரிப்பு

  • May 3, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இரான் இடையிலான அணு ஒப்பந்த விவகாரம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. போர் நிறுத்தம் அல்லது புதிய ஒப்பந்தம் எட்டப்பட்டால், ஈரான் யுரேனியம் செறிவூட்டலை முழுமையாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் அணு ஆயுதம் பெறக்கூடாது என்று தொடர்ந்து கூறி வருவதுடன், அதனைத் தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு பதிலாக, ஈரான் தங்கள் அணு திட்டம் முழுமையாக குடிமைப் பயன்பாட்டுக்காக மட்டுமே எனவும், மின்சாரம் […]

error: Content is protected !!