உலகம் செய்தி

பாகிஸ்தான் – குவைட் வெளியுறவு அமைச்சர்கள் பிராந்திய பதற்றம் குறித்து ஆலோசனை

  • May 2, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் மற்றும் குவைட் வெளியுறவு அமைச்சர்கள், மாறிவரும் பிராந்திய சூழ்நிலை மற்றும்  அதன் பொருளாதார தாக்கங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர். பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் முகமது இஷாக் டார் (Mohammad Ishaq Dar), தனது குவைட் சகாவான ஷேக் ஜர்ரா ஜாபர் அல்-அஹ்மத் அல்-சபா உடன் இந்த விவாதத்தை மேற்கொண்டார். பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், “உம்மா” (Ummah) மற்றும் சர்வதேச  சமூகத்திற்கான நீடித்த அமைதி, பாதுகாப்பை மேம்படுத்தும் பாகிஸ்தானின் முயற்சிகளை […]

இலங்கை செய்தி

போதைப்பொருள் கடத்தல் சம்பவம் – 22 தேரர்களுக்கும் விளக்கமறியல்

  • May 2, 2026
  • 0 Comments

தாய்லாந்திலிருந்து ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ வகை போதைப்பொருட்களை நாட்டிற்கு கடத்தி வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 22 தேரர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் இன்று (02.05) ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து குறித்த 22 தேரர்களையும் வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி தாய்லாந்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த போது, 112 கிலோகிராம் போதைப்பொருளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டனர். ‘அமிதானந்த’ எனும் தேரர் […]

உலகம் செய்தி

மாறுபட்ட கோரிக்கைகள் காரணமாக அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தை முட்டுக்கட்டையில்

  • May 2, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை முன்னேற்றமின்றி தொடர்ந்து முட்டுக்கட்டையில் இருப்பதாக தோஹா (Doha) பட்டதாரி கல்வி நிறுவனத்தின் ஊடகவியல் பேராசிரியர் முகமது எல்மாஸ்ரி தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாக நிலைமையில் பெரிய மாற்றம் எதுவும் இல்லாததால் இரு தரப்பும் இன்னும் காத்திருப்பு நிலையில் உள்ளதாக அல் ஜசீரா ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார். ஈரான் 10 கோரிக்கைகள் கொண்ட பட்டியலை முன்வைத்துள்ளதாகவும், அமெரிக்கா 15 கோரிக்கைகள் கொண்ட பட்டியலை வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அந்த […]

உலகம் செய்தி

யேமன் கடற்கரையில் எண்ணெய் கப்பல் கைப்பற்றப்பட்டது – ஆயுதமேந்திய நபர்கள் தாக்குதல்

  • May 2, 2026
  • 0 Comments

யேமன் நாட்டின் ஷப்வா (Shabwa) மாகாணக் கடற்கரைக்கு அருகில், அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய நபர்கள் எம்/டி யுரேகா (MT Eureka) என்ற எண்ணெய் கப்பலைக் கைப்பற்றியுள்ளதாக யேமன் கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது. தாக்குதலாளர்கள் கப்பலில் ஏறி அதன் கட்டுப்பாட்டைப் பெற்ற பின்னர், அதை ஏடன் வளைகுடா  வழியாக சோமாலியா (Somalia) கடற்பகுதி நோக்கி செலுத்திச் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பாக, முக்கல்லா (Mukalla) துறைமுகத்திலிருந்து சுமார் 84 கடல் மைல்கள் தென்மேற்கே, ஒரு “பச்சை நிறப் […]

உலகம் செய்தி

விமானப் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது – ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு

  • May 2, 2026
  • 0 Comments

போர் பதற்றத்தைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட தற்காலிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நீக்கப்பட்டதையடுத்து, விமானப் போக்குவரத்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. செயல்பாட்டு மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைகளை முழுமையாக மதிப்பீடு செய்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், தொடர்புபட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், எமிரேட்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானப் போக்குவரத்தின் மிக உயர்ந்த பாதுகாப்பு தரத்தை உறுதி செய்வதற்காக, தொடர்ச்சியான நிகழ்நேர […]

உலகம் செய்தி

அணுசக்தி பேச்சுவார்த்தைக்கு முன் ஹோர்முஸ் திறப்பு – ஈரான் புதிய முன்மொழிவு

  • May 2, 2026
  • 0 Comments

அணுசக்தி பேச்சுவார்த்தைகளை பின்னர் நடத்தி, முதலில் ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தைத் திறப்பதற்கான முன்மொழிவை ஈரான் வைத்துள்ளதாக மூத்த ஈரானிய அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். ரொய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனத்துக்கு பெயர் குறிப்பிடாமல் கருத்து தெரிவித்த அந்த அதிகாரி, அமெரிக்கா ஈரான் மீதான முற்றுகை மற்றும் தடைகளை தளர்த்த வேண்டும் என்பதும், அதே நேரத்தில் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகள் பின்னர் நடைபெற வேண்டும் என்பதும் இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என அவர் தெரிவித்தார். […]

இலங்கை செய்தி

இலங்கையில் பாரியளவான இணையவழி மோசடி- 37 சீனர்கள் கைது

  • May 2, 2026
  • 0 Comments

இணையதளத்தை பயன்படுத்தி சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் உட்பட 37 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வலான மத்திய ஊழல் ஒழிப்புப் படைப்பிரிவு மற்றும் தலங்கம பொலிஸாரின் ஊழல் ஒழிப்புப் பிரிவு என்பன இணைந்து முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தலங்கம, கொஸ்வத்தை பகுதியில் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீடொன்றைச் சோதனையிட்ட போது அங்கு 35 கணினிகள், 37 டெப் கணினிகள், 147 கையடக்கத்தொலைபேசிகள், 100 சிம் அட்டைகள் […]

ஐரோப்பா செய்தி

அச்சுறுத்தல் நிலை உயர்வு – லண்டனில் அமெரிக்கத் தூதரகம் விடுத்த அவசர எச்சரிக்கை

  • May 2, 2026
  • 0 Comments

பிரித்தானிய அரசாங்கம் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் அளவை கடுமையான (Severe) நிலைக்கு உயர்த்தியதைத் தொடர்ந்து, லண்டனில் உள்ள அமெரிக்கத் தூதரகம் (US Embassy London), பிரித்தானியாவில் வசிக்கும் அமெரிக்கக் குடிமக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பொது இடங்களில் அதிக அவதானத்துடன் செயற்படுமாறும் , பாடசாலைகள், தேவாலயங்கள், சுற்றுலா தளங்கள் மற்றும் போக்குவரத்து மையங்கள் போன்ற கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் எச்சரிக்கையாக இருக்குமாறும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், பயணிக்கும் நேரங்களையும் வழித்தடங்களை மாற்றிக் கொள்ளவும், தங்களை எளிதில் […]

உலகம் செய்தி

ஐரோப்பிய கார்கள் மீது 25% சுங்கவரி- ட்ரம்ப் அறிவிப்பு, வர்த்தக பதற்றம் அதிகரிப்பு

  • May 1, 2026
  • 0 Comments

அமெரிக்கா–ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான வர்த்தக பதற்றம் மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மற்றும் டிரக்குகள் மீது சுங்க வரியை 25% ஆக உயர்த்துவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அவர் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் வெளியிட்டுள்ளார். “நாங்கள் முழுமையாக ஒப்புக்கொண்ட வர்த்தக ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியம் பின்பற்றவில்லை” என்று டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் அதற்கான குறிப்பான காரணங்களை அவர் விளக்கவில்லை. தற்போது நடைமுறையில் […]

உலகம் செய்தி

கருத்து கணிப்பைவிட மக்களின் தீர்ப்பே முக்கியம் – சுந்தர்.சி கருத்து 

  • May 1, 2026
  • 0 Comments

தேர்தல் கருத்து கணிப்பைவிட, மே 4 ஆம் திகதி வெளியாக உள்ள மக்களின் தீர்ப்பே முக்கியம் என நடிகரும் திரைப்பட இயக்குநருமான சுந்தர்.சி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நடிகரும் இயக்குநருமான சுந்தர்.சி, அவரது மனைவி குஷ்பு, மகள், நடிகர் ஜெயம் ரவியின் முன்னாள் மனைவி ஆர்த்தி மற்றும் அவரது தாயார் சுஜாதா ஆகியோர் இன்று பழநிக்கு சென்றனர். பழநி மலை அடிவாரத்தில் இருந்து மின் இழுவை ரயில் […]

error: Content is protected !!