ஈரானுக்கு அமெரிக்கா விடுத்த கடும் எச்சரிக்கை
வர்த்தகக் கப்பல்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்பட்டால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரானை அமெரிக்கா எச்சரித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை பகுதியில் வர்த்தகக் கப்பல்கள் இலக்கு வைக்கப்பட்டால், அமெரிக்கா “அளவற்ற ஆயுத பலத்தை” பயன்படுத்தி பதிலடி கொடுக்கும் என அமெரிக்க பாதுகாப்புத் தலைவர் பீட் ஹெக்ஸெத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய கடற்படை நடவடிக்கையான “ஆபரேஷன் ப்ராஜெக்ட் ஃப்ரீடம்” மூலம் இந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
“அமெரிக்காவிலிருந்து உலகிற்கு ஒரு பாதுகாப்பு உறுதி வழங்கப்பட்டுள்ளது” என்றும் கூறியுள்ளார்.
இந்த எச்சரிக்கை, ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதல்கள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் அதிகரித்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது





