ஐரோப்பா

ஸ்பெயினில் 05ஆவது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ – அணைக்க பெரும் போராட்டம்

  • July 19, 2026
  • 0 Comments

ஸ்பெயினின் அரகோன் மற்றும் காஸ்டில்லா-லா ஆகிய பகுதிகளில் காட்டுத்தீ இன்று 05 ஆவது நாளாக பற்றி எரிந்து வருகிறது. ஓரேஸில் சிறிய தீப்பொறியாக பரவிய தீ தற்போது பெருமளவிலான நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளது. சுமார் 15,400 ஹெக்டேர் எரிந்து நாசமாகியுள்ளதகாக தெரிவிக்கப்படுகிறது. தீயணைப்பு வீரர்கள் லூசியாவின் நுழைவாயில் பகுதியில் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர். இருப்பினும் எஞ்சிய பகுதிகளில் தீ வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. தீ வேகமாக பரவி வருவதன் காரணமாக அப்பகுதிகளில் வசித்து வந்த 529 குடியிருப்பாளர்கள் […]

ஐரோப்பா

ஸ்பெயினில் 12 பேரின் உயிரை பறித்த காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

  • July 12, 2026
  • 0 Comments

ஸ்பெயினின் அந்தலூசியாவில் பரவிய காட்டுத்தீ தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட 1,500 பேர் வீடு திரும்பலாம் என்று அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். குறைந்த காற்று மற்றும் அதிக ஈரப்பதம் உள்ளிட்ட அமைதியான வானிலை, தீயை கட்டுக்குள் கொண்டுவர உதவியதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். மேற்படி தீயினால் சுமார் 12 பேர் உயிரிழந்திருந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானர்கள் வெளிநாட்டினர் எனவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இந்தத் தீயானது அப்பகுதி முழுவதும் சுமார் 7,000 ஹெக்டேர் பரப்பளவை சேதப்படுத்தியதாக […]

ஐரோப்பா

ஸ்பெயினில் தீவிரமாகும் காட்டுத்தீ – தீயணைப்பு பணிகளில் சிக்கல்

  • July 11, 2026
  • 0 Comments

ஸ்பெயினின் தென்கிழக்கு அல்மேரியா மாகாணத்தில், பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள மேலும் பல கிராமங்கள் காலி செய்யப்பட்டு வருவதாக அவசரக்கால அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னதாக தீவிபத்தில் சிக்கி உயிரிழந்த 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும் மேலும் 23 பேர் காணாமல்போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பிரிட்டிஷ் மற்றும் பெல்ஜிய நாட்டவர்கள் என்றும், தற்போது  12 பேருக்கான பிரேத பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தலூசியா […]

ஐரோப்பா

ஸ்பெயின் காட்டுத்தீ – பிரித்தானியர்கள் நால்வர் உயிரிழப்பு

  • July 10, 2026
  • 0 Comments

ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி 04 பிரித்தானியர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளியுறவு அலுவலகம் ஸ்பெயின் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாக தெரிவித்துள்ளது. காட்டுத்தீயில் சிக்கி எரிந்துபோன கார் ஒன்றில் இருந்து நான்கு சடலங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நால்வர் பிரித்தானிய பிரஜைகள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்புடைய செய்தி ஸ்பெயினில் காட்டுத்தீயில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு

ஐரோப்பா

ஸ்பெயினில் கோலாகலமாக நடைபெற்ற காளை ஓட்டத் திருவிழா – 09 பேர் காயம்

  • July 10, 2026
  • 0 Comments

ஸ்பெயினில் காளை ஓட்டத் திருவிழா இன்று பம்ப்ளோனாவின் (Pamplona) தெருக்களில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான வீரர்கள் பங்கேற்ற நிலையில், 09 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை எட்டு மணிக்கு ஆரம்பித்த இந்த நிகழ்வு இரவு முழுவதும் தொடர்ந்தது. வாணவேடிக்கைகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் இடம்பெற்ற நிலையில் ஏராளமான மக்கள் ஒன்றுக்கூடி நகரமே களைக்கட்டியது. இந்நிலையில் இந்த ஓட்டத்தில் பங்கேற்ற வீரர்கள் 09 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் 05 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் நவாரா பல்கலைக்கழக மருத்துவமனை […]

ஐரோப்பா

ஸ்பெயினில் 112 ஆண்டுகளில் இல்லாத உச்சபட்ச வெப்பநிலை பதிவு

  • July 8, 2026
  • 0 Comments

ஸ்பெயினில் 112 ஆண்டுகளில் இல்லாத அளவில் உச்சபட்ச வெப்பநிலை இன்று பதிவாகியுள்ளது. குறிப்பாக பார்சிலோனாவில் அதிகபட்ச வெப்பநிலையாக 40.5°C வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடல் மட்டத்திற்கு மிக அருகில், மத்தியதரைக் கடலுக்கு அருகே அமைந்துள்ள பார்சிலோனாவின் எல் பிராட் விமான நிலையத்தில், வெப்பநிலைமானி 37.7°C ஐ எட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 1924 ஆம் ஆண்டு வரையிலான பதிவுகளில் மிக உயர்ந்த அளவாகும் என தேசிய வானிலை ஆய்வு நிறுவனமான AEMET தெரிவித்துள்ளது. ஸ்பெயினில் தற்போது நிலவி வரும் வெப்பநிலையானது […]

ஐரோப்பா

ஸ்பெயினுடனான அனைத்து வர்த்தகத்தையும் துண்டிக்குமாறு ட்ரம்ப் உத்தரவு

  • July 8, 2026
  • 0 Comments

அங்காராவில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டிற்கு வந்தடைந்த டொனால்ட் ட்ரம்ப், ஸ்பெயின் மீதான தனது அழுத்தத்தை மீண்டும் அதிகரித்துள்ளார். அட்லாண்டிக் கூட்டணியில் ஸ்பெயினை ஒரு “மோசமான” கூட்டாளி என்று வர்ணித்த ட்ரம்ப், ஸ்பெயினுடனான “அனைத்து வர்த்தகத்தையும் துண்டிக்குமாறு” கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட்டிற்கு அறிவுறுத்தியுள்ளார். “ஸ்பெயின் ஒரு பயனற்ற முயற்சி. நாங்கள் இனி ஸ்பெயினுடன் எந்த வர்த்தகமும் செய்ய விரும்பவில்லை,” என்று ட்ரம்ப் கூறியுள்ளார். நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டேவுடன் இணைந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது அவர் இந்த […]

ஐரோப்பா

ஸ்பெயினின் முன்னாள் போக்குவரத்து அமைச்சருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை

  • June 22, 2026
  • 0 Comments

ஸ்பெயினின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் ஜோஸ் லூயிஸ் அபாலோஸுக்கு ( José Luis Ábalos) அந்நாட்டின் உச்சநீதிமன்றம் 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றின் போது முகக்கவசம் வழங்குவதில்  ஊழல் செய்ததாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே அவர் சிறை தண்டனை பெற்றுள்ளார். மேலும், அவரது முன்னாள் உதவியாளர் கோல்டோ கார்சியாவுக்கு 19 ஆண்டுகளும், தொழிலதிபர் விக்டர் டி அல்டாமாவிற்கு (Víctor de Aldama) நான்கரை ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த […]

ஐரோப்பா

நீதி தவறிய நீதிமன்றம் : 36 ஆண்டுகள் சட்டப் போராட்டம்!! இழப்பீடு வழங்க உத்தரவு

  • June 20, 2026
  • 0 Comments

ஸ்பெயினில்  தான் செய்யாத குற்றத்திற்காக 15 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த நபருக்கு 2.5 மில்லியன் யூரோக்கள் (2.87 மில்லியன் டாலர்கள்) இழப்பீடு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 1991-ல் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்காக ஸ்பெயினுக்குக் குடிபெயர்ந்த, மொராக்கோவைச் சேர்ந்த அகமது டொம்மூஹி, என்ற நபருக்கே இவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கட்டலோனியாவில் நடந்த இரண்டு பாலியல் வன்கொடுமைகள் மற்றும் ஒரு கொள்ளை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். […]

ஐரோப்பா

ஸ்பெயினில் பரபரப்பு – தனது பெற்றோரை சுட்டுக் கொன்ற இளைஞர்!

  • May 19, 2026
  • 0 Comments

ஸ்பெயினின்  அல்மேரியா (Almeria) மாகாணத்தில் அமைந்துள்ள நகரம் ஒன்றில்  நேற்று இரவு துப்பாக்கிச்சூடு சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில்  இருவர் உயிரிழந்த நிலையில் மேலும் 04 பேர் காயமடைந்துள்ளனர். 25 வயதுடைய தாக்குதல்தாரி தனது பெற்றோரை சுட்டுக் கொன்றதுடன், தனது மகன் உட்பட நான்கு பேரை காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த நால்வரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறதுது. அதேநேரம்  குறித்த இளைஞர் தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் துப்பாக்கிச் […]