உலகம்

மீண்டும் தாக்குல்களை தொடங்கிய அமெரிக்கா – பிடியை இறுக்கும் ஈரான்

  • September 2, 2026
  • 0 Comments

ஈரானின் தெற்குக் கடற்கரையோரம் உள்ள  ஈரானிய புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) இலக்குகள் மீது  அமெரிக்க இராணுவம் நேற்றைய தினம் தொடர் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. இதற்குப் பதிலடியாக, தெஹ்ரான் ஜோர்டான், பஹ்ரைன் மற்றும் குவைத் மீது ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியது. இது இரு தரப்பிலிருந்தும் புதிய பகைமைகளையும் அச்சுறுத்தல்களையும் தூண்டியுள்ளது. தெற்கு ஜோர்டானிய நகரமான அகாபாவின் Aqaba மீது வெடிப்புகள் நிகழ்ந்ததாகவும், மஃப்ராக்கில் Mafraq அபாய ஒலி எழுப்பப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜோர்டானின் […]

ஐரோப்பா

பாதுகாப்பற்றதாக மாறும் ரஷ்ய வான்வெளி – விமான நிறுவனங்களுக்கு ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

  • September 2, 2026
  • 0 Comments

கீவ்வில் ஆளில்லா விமான செயற்பாடுகள் அதிகரித்து வருவதானது ரஷ்ய வான்வெளியை பயன்படுத்தும் ஏனைய விமானங்களுக்கும் ஆபத்தாக அமையும் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஒருவாரக் காலமாக கீவ் மீது ரஷ்யா இடைவிடாத தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் ஆற்றிய உரையில் சர்வதேச விமான நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மொஸ்கோ தொடங்கிய போரின் விளைவுகள் இனி உக்ரேனிய எல்லைக்குள் மட்டும் […]

இலங்கையில் கடும் வறட்சி: 88 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு இலங்கை செய்தி

இலங்கையில் கடும் வறட்சி: 88 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு

  • September 2, 2026
  • 0 Comments

பதுளை, மொனறாகலை உட்பட நாட்டின் 6 மாவட்டங்களில் நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக 27,475 குடும்பங்களைச் சேர்ந்த 88,068 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் வறட்சி காரணமாக அம்பாறை மாவட்டத்தில் 8,847 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 28,523 பேரும், மொனராகலை மாவட்டத்தில் 37,890 பேரும், பொலன்னறுவை மாவட்டத்தில் 3,926 பதுளை மாவட்டத்தில் 8,383 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், குறித்த மாவட்டங்களில் உள்ள ஆறுகள், குளங்கள் […]

சீனாவுடன் இருதரப்பு புரிந்துணர்வு உடன்பாடு: அமைச்சரவை ஒப்புதல் இலங்கை செய்தி

சீனாவுடன் இருதரப்பு புரிந்துணர்வு உடன்பாடு: அமைச்சரவை ஒப்புதல்

  • September 2, 2026
  • 0 Comments

குடியேற்ற ஒழுங்குமுறை ஒத்துழைப்பு தொடர்பாக இலங்கையும் சீனாவும் இருதரப்பு புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கும், சீனாவின் தேசிய குடியேற்ற நிர்வாகத்திற்கும் இடையில் இந்த உடன்பாடு, கையெழுத்திடப்படும். வணிகம், முதலீடு, சுற்றுலா, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் குடிமக்களின் பயணத்தை இலகுபடுத்துவது உட்பட, நுழைவிசைவுகள், குடியேற்றம் மற்றும் குடியகல்வு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை இந்தப் புரிந்துணர்வு உடன்பாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், அதிகாரபூர்வ […]

ஐரோப்பா

ஹாரி மற்றும் மேகன் தம்பதியினருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்

  • September 1, 2026
  • 0 Comments

பிரித்தானிய இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதியினர் பிரித்தானியாவில் புதிய ஆபத்துக்களை எதிர்நோக்கக்கூடும் என சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சசெக்ஸ் கோமகனும் கோமகியும் குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளை முன்னிட்டு பிரித்தானியாவிற்கு இடம்பெயர்ந்துள்ளனர். அங்கு அரச குடும்பத்திற்கு வெளியே சாதாரண வாழ்க்கையை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய அரசு குடும்பத்தினருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு ஹாரி மற்றும் மேகன் தம்பதிகளுக்கு மறுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட ரீதியாக அவர்கள் கட்டணம் செலுத்துவதாக கூறியும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் […]

காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) இதுவரை பதிவான மிக மோசமான எபோலா (Ebola) நோய்த்தொற்று பரவலுக்கு மத்தியில், செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. உலகம் செய்தி

எபோலா பரவலுக்கு மத்தியில் காங்கோவில் பாடசாலைகள் மீண்டும் திறப்பு

  • September 1, 2026
  • 0 Comments

காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) இதுவரை பதிவான மிக மோசமான எபோலா (Ebola) நோய்த்தொற்று பரவலுக்கு மத்தியில், செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இது நோய்த் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட இத்துரி (Ituri) மாகாணத்தில் உள்ள பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தரவுகளின்படி, ஆகஸ்ட் 31 ஆம் திகதி நிலவரப்படி 6,041 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களும் 2,911 மரணங்களும் பதிவாகியுள்ளன. இது 2018 முதல் 2020 வரை பரவிய முந்தைய […]

அமெரிக்கா, ஈரான் போர் நீடிக்குமென சர்வதேச சமூகம் அச்சம் உலகம் செய்தி

அமெரிக்கா, ஈரான் போர் நீடிக்குமென சர்வதேச சமூகம் அச்சம்

  • September 1, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடன் நிலவும் மோதல்களை நிறுத்துவது தொடர்பாகக் கடந்த ஜூன் மாதம் எட்டப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றினால், ஈரானும் அதற்குரிய முறையில் பதிலளிக்கும் என ஈரான் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. இருப்பினும், ஈரானுக்கு எதிராக மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளதால் பதற்றம் தொடர்ந்து நீடிக்கிறது. ஜூலை மாத பிற்பகுதிக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே முதன்முறையாக நேரடித் தாக்குதல்கள் பரிமாறப்பட்டதாலும், உலகளாவிய எண்ணெய் விநியோகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையிலிருந்து வெளியேறிய […]

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் தொடங்கியது முதல் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை முதன்முறையாகச் சந்தித்துப் பேசிய ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், தங்கள் நாட்டிற்கு ரஷ்யா வழங்கி வரும் ஆதரவிற்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். உலகம் செய்தி

ஈரானுக்கு ரஷ்யா துணை நிற்கும்: புடின் உறுதி

  • September 1, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் தொடங்கியது முதல் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை முதன்முறையாகச் சந்தித்துப் பேசிய ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், தங்கள் நாட்டிற்கு ரஷ்யா வழங்கி வரும் ஆதரவிற்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். கிர்கிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டின் இடையே இடம்பெற்ற இச்சந்திப்பின் போது உரையாற்றிய பெசெஷ்கியான், “போர் மற்றும் தாக்குதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியிலும், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச அரங்குகளில் அமெரிக்கா எம்மீது தடைகளை விதித்த […]

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங், ஜேவிபியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இலங்கை செய்தி

இலங்கைவந்த கையோடு ஜே.வி.பி. செயலரை சந்தித்தார் சீனத் தூதுவர்

  • September 1, 2026
  • 0 Comments

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங், ஜேவிபியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். பெலவத்தையில் உள்ள ஜேவிபி தலைமையகத்தில் நடந்த சந்திப்பின்போது, ​​இலங்கை-சீனா இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவது, அதிக சீன முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் வறுமை ஒழிப்பில் ஒத்துழைப்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கையில் முதலீட்டை அதிகரிக்க சீன முதலீட்டாளர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும், வறுமை ஒழிப்பில் சீனாவின் அனுபவம் சிறிலங்காவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் சீனத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கை […]

ஐரோப்பா

நோர்வேயின் அரச குடும்ப வாரிசான ஹோய்பி வீட்டுக் காவலில் இருந்து வெளியேற அனுமதி

  • September 1, 2026
  • 0 Comments

நோர்வேயின் ராணி மெட்டே-மாரிட்டின் மூத்த மகனான மரியஸ் போர்க் ஹோய்பி Borg Høiby, வீட்டுக் காவலில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளார். மன்னர் ஹரால்டின் இறுதிச் சடங்கிற்கு முந்தைய நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக அவருக்கு இந்த தற்காலிக விடுதலை வழங்கப்பட்டுள்ளது. ஓஸ்லோவில் உள்ள அரச அரண்மனையில், இருந்து மன்னர் ஹரால்டின் உடலம் அரண்மை தேவாலயத்திற்கு இன்று கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. இதற்காக அரச குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுக்கூடினர். இந்நிலையில் அவர்களுடன் ஒன்றிணைய மரியஸ் போர்க் ஹோய்பிக்கு வீட்டுக் காவலில் இருந்து வெளியேற அனுமதி […]