ஐரோப்பா

ஸ்பெயினின் அண்டலூசியா பகுதியில் காட்டுத்தீ – களத்தில் இறங்கிய 275 வீரர்கள்

  • August 8, 2026
  • 0 Comments

ஸ்பெயினின் தெற்கு அண்டலூசியா பகுதியில் இன்று மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் 275 இற்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போது எந்தவொரு குடியிருப்புப் பகுதிக்கும் அச்சுறுத்தல் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செவில் மற்றும் போர்த்துகீசிய எல்லைக்கு இடையில் தீ பரவியதாகவும், இதனால் சுமார் 4,000 ஹெக்டேர் பரப்பளவு சேதமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரகாலப் பணிகளுக்கான இராணுவப் பிரிவைச் சேர்ந்த அறுபது வீரர்கள், 275 தீயணைப்பு வீரர்கள், 20 விமானங்கள் மற்றும் கனரக […]

ஐரோப்பா

இத்தாலிய பிரஜைகளுக்கான எல்லை சோதனையை கடுமையாக்கிய ஸ்பெயின்

  • August 8, 2026
  • 0 Comments

இத்தாலியில் இருந்து வரும் பயணிகளுக்கு தற்காலிக எல்லைச் சோதனைகளை அறிமுகப்படுத்தப் போவதாக ஸ்பெயின்  நேற்று அறிவித்தது. இந்தச் சோதனைகள், ஆகஸ்ட் 8 நள்ளிரவில் தொடங்கி செப்டம்பர் 7 வரை நீடிக்கும் என்று ஸ்பெயின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்தாலி தனது எல்லைச் சோதனைகளை உடனடியாக நீக்கவில்லை என்றால், பதிலடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஸ்பெயின் அச்சுறுத்தியது, இதற்கு பதலடி கொடுத்த இத்தாலி எக்காரணம் கொண்டும் ஸ்பெயின் நாட்டவர்களுக்கான எல்லை சோதனை நீக்கப்படாது எனக் குறிப்பிட்டது. இதனைத் தொடர்ந்தே […]

ஐரோப்பா

எல்லை கட்டுப்பாடுகள் தொடர்பில் இத்தாலிக்கு இறுதி எச்சரிக்கை – ஸ்பெயின் அறிவிப்பு

  • August 7, 2026
  • 0 Comments

ஸ்பெயினிலிருந்து வரும் பயணிகள் மீது விதிக்கப்பட்டுள்ள எல்லைக் கட்டுப்பாடுகளை வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு முன் நீக்க வேண்டும் என்று  இத்தாலிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் அரசாங்கம் இன்று இந்த எச்சரிக்கையை விடுத்தது. இந்த நடவடிக்கை “அநியாயமானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் நலன்களுக்கு எதிரானது மற்றும் ஸ்பானிய மக்களுக்கு எதிரான பாகுபாடு கொண்டது” என்று ஸ்பெயின் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தால், ஸ்பானிய குடிமக்களின் நலன்களைப் பாதுகாக்க “சமமான நடவடிக்கைகள்” எடுக்கப்படும் என்று பிரதமர் பெட்ரோ சான்செஸின் (Pedro Sánchez) […]

ஐரோப்பா

ஸ்பெயினுடனான எல்லையை மூடிய இத்தாலி – ஷெங்கன் தடையற்ற நடமாட்ட முறை நிறுத்தம்

  • August 1, 2026
  • 0 Comments

சட்டவிரோத குடியேறிகள் ஸ்பெயினை முற்றுகையிட்டுள்ள நிலையில்,  அந்நாட்டுடனான தனது கடல் மற்றும் வான்வழி எல்லைகளை மூடுமாறு இத்தாலியின் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இத்தாலியின் குடியேற்றப் பகுப்பாய்வு மற்றும் எல்லைப் பாதுகாப்புக் குழுவின் மதிப்பீடுகளின் அடிப்படையில், உள்துறை அமைச்சர் மத்தேயோ பியாண்டெடோசி  (Matteo Piantedosi) தலைமையில் நேற்று  காலை நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இரு நாடுகளுக்கும் இடையேயான ஷெங்கன் தடையற்ற நடமாட்ட முறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஸ்பெயினின் வட ஆப்பிரிக்கப் பகுதியான சியூட்டாவிற்கு […]

ஐரோப்பா

காலநிலை மாற்றம் குறித்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை உருவாக்க குழு நியமனம் – ஸ்பெயின் ஒப்புதல்

  • July 29, 2026
  • 0 Comments

காலநிலை மாற்றத்தின் காரணமாக ஸ்பெயினின் பெரும்பாலான பகுதிகளில் காடுத்தீ ஏற்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் விளக்கமளிக்கும் அல்லது வழிக்காட்டுதல் நெறிமுறைகளை  வழங்கும் குழுவை நியமிக்க அந்நாட்டின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தீர்மானம் நேற்றைய தினம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த குழுவிற்கான ஆள்சேர்ப்பு நடவடிக்கைகள் கோடைக்காலப்பகுதியில் ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்,  இந்தக் குழு இலையுதிர் காலத்தில் தனது பணியைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. “அரசாங்கத் துறைகளால் எழுப்பப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப, இந்தப் பணிக்குழு சுதந்திரமான, கடுமையான மற்றும் பல்துறை […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் காட்டுத்தீ – ஐரோப்பா முழுவதும் பரவியுள்ள புகை!

  • July 28, 2026
  • 0 Comments

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் பேரழிவை ஏற்படுத்திய பெரும் காட்டுத்தீயிலிருந்து ஐரோப்பா முழுவதும் புகை பரவுவதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. இது தொடர்பான புகைப்படத்தை  வானிலை ஆய்வு மையம் இணையத்தில் பகிர்ந்துள்ளது. குறித்த பதிவில், ஐரோப்பாவின் சில பகுதிகளில் பெரும் காட்டுத்தீ தொடர்கிறது. போர்ச்சுகல், ஸ்பெயின் மற்றும் போர்டோவிற்கு அருகில் பரவலான புகையை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. மழை நிவாரணம் கிடைப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு, மேலும் சில இடங்களில் வெப்பம் தீவிரமடையும், சில இடங்களில் வெப்பநிலை 40°C-க்கு […]

ஐரோப்பா

ஸ்பெயினில் பேரழிவை ஏற்படுத்தி வரும் காட்டுத்தீ – தேசிய அவசரநிலை பிறப்பிப்பு

  • July 24, 2026
  • 0 Comments

ஸ்பெயினில் நேற்று இரவு முதல் தேசிய அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாட்ரிட் மற்றும் அதன் அண்டை மாகாணமான அவிலாவிற்கு அருகில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகின்ற  நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினின் தேசிய குடிமக்கள் பாதுகாப்பு அமைப்புச் சட்டத்தின் கீழ், இந்த அவசரநிலை பிரகடனமானது, மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் பொறுப்புடைய உள்துறை அமைச்சரின் நேரடி அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்படுகிறது. ஒரே நேரத்தில் பல தீ விபத்துகள், மோசமான வானிலை, மற்றும் பல்வேறு பொது நிர்வாகங்களிடமிருந்து விரிவான […]

ஐரோப்பா

ஸ்பெயின் மற்றும் பிரான்ஸில் காட்டுத்தீ அபாயம் – போராடும் தீயணைப்பு வீரர்கள்

  • July 22, 2026
  • 0 Comments

ஸ்பெயின் மற்றும் பிரான்சில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. தீயணைப்பு வீரர்கள் இன்றை தினம் சில பகுதிகளில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ளனர். இருப்பினும் பெரும்பாலான பகுதிகளில் தீவிபத்து அபாயம் அதிகமாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிரான்சின் தென்மேற்குப் பகுதியான ஜிரோண்டேவில் (Gironde) தீயணைப்பு வாகனம் தீப்பிடித்து எரிந்ததில், இரண்டு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் பார்பிக்யூக்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் மக்களை வலியுறுத்தினர். மேலும், பத்தில் ஒன்பது காட்டுத்தீகள், தற்செயலாகவோ அல்லது திட்டமிட்டோ, […]

ஐரோப்பா

ஸ்பெயினில் விடுமுறையை கழிக்க சென்றவர்களுக்கு நேர்ந்த துயரம் – 60 பேர் மருத்துவமனையில்

  • July 21, 2026
  • 0 Comments

ஸ்பெயினின் கோஸ்டா டெல் சோல் (Costa del Sol) பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் குளித்த 60 பேர் அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. பெயர் குறிப்பிடப்படாத அந்த ஹோட்டலில், நீச்சல் குளத்தில் நீந்திய பிறகே குறைந்தது 60 பேர் சுகவீனம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் சிலர் கோஸ்டா டெல் சோல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், மற்றவர்களுக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. குளோரின் மற்றும் அமிலத்தைச் செலுத்தும் அழுத்தக் […]

ஐரோப்பா

ஸ்பெயினில் கால்பந்து வீரர்களுக்கு அமோக வரவேற்ப்பு – தெருக்களில் குவிந்த மில்லியன் கணக்கான மக்கள்

  • July 21, 2026
  • 0 Comments

FIFA கால்பந்து உலகக் கோப்பையை ஸ்பெயின் அணி கைப்பற்றிய பிறகு  மாட்ரிட் தெருக்களில் பெருமளவிலானோர் ஒன்றுக்கூடி பெறும் வரவேற்பை அளித்தனர். சுமார் ஒரு மில்லியன் மக்கள் தெருக்களில் ஒன்றுக்கூடி ஆரவாரம் செய்தனர். வெற்றி அணிவகுப்பு ஸ்பெயின் தலைநகர் வழியாக சென்றதுடன், அங்கு குழுமியிருந்த மக்கள் “எஸ்பானா, எஸ்பானா” எனக் கோஷமிட்டனர். இந்நிலையில் கூட்டத்தின் மத்தியில் பயணித்த பேருந்தில் இருந்த வீரர்கள் உலகக் கோப்பை வெற்றிக் கிண்ணத்தை உயர்த்தி பிடித்து ஆரவாரம் செய்தமை குறிப்பிடத்தக்கது.