அமெரிக்க ராஜாங்கச் செயலர் மார்கோ ரூபியோ Marco Rubio மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஆகியோருக்கிடையிலான சந்திப்பின்போது எடுக்கப்பட்ட படம். உலகம் செய்தி

அமீரகத்தின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா துணை நிற்கும்: Marco Rubio உறுதி

  • June 24, 2026
  • 0 Comments

அமெரிக்க ராஜாங்கச் செயலர் மார்கோ ரூபியோ Marco Rubio , ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை Sheikh Mohamed bin Zayed Al Nahyan நேரில் சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில், ஹார்முஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்வது மற்றும் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவது போன்ற முக்கிய விவகாரங்கள் தொடர்பில் ஆலோசிக்கப்பட்டன. ஈரானின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக அமீரகம் காட்டிய […]

ஆஸ்திரேலியா செய்தி

” புலம்பெயர் இலங்கையர்களின் நம்பிக்கையை சிதைக்கமாட்டோம்”

  • June 1, 2026
  • 0 Comments

  ஆஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், புலம்பெயர் இலங்கையர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். மெல்பேர்னில் வசிக்கும் இலங்கையர்களால் ஸ்பிரிங்வேல் நகர மண்டபத்தில் இதற்குரிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அமைச்சர் இதன்போது கேட்டறிந்து கொண்டார். தற்போதைய அரசாங்கத்தினால் அதற்காக எடுக்கப்பட்டுள்ள முற்போக்கான தீர்மானங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் விளக்கமளித்தார். புதிய அரசாங்கத்தின் மீது புலம்பெயர் இலங்கையர்கள் வைத்துள்ள தளராத நம்பிக்கைக்காக அமைச்சர் நன்றி […]

இலங்கை செய்தி

நீர்த் தடாகத்தில் மூழ்கி 16 வயது சிறுவன் பலி: யாழில் சோகம்!

  • May 18, 2026
  • 0 Comments

யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள நீர்த் தடாகத்தில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பருத்தித்துறை, புலோலி மேற்குப் பகுதியைச் சேர்ந்த திலீபன் சந்தோஷ் (வயது 16) என்ற சிறுவன், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தனது குடும்பத்தினருடன் வல்வெட்டித்துறையில் உள்ள நீர்த் தடாகத்துக்கு நீராடச் சென்றுள்ளார். இதன்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்குச் சென்ற சிறுவன், நீருக்குள் மூழ்கியுள்ளார். உயிரிழந்த சிறுவன் சிறு வயதிலேயே தனது […]

உலகம் செய்தி

தைவானை பாதுகாக்குமா அமெரிக்கா? ட்ரம்பிடம் நேரில் வினா தொடுத்த சீன ஜனாதிபதி!

  • May 15, 2026
  • 0 Comments

சீன ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது, தைவான் விவகாரம் குறித்து தான் எந்தவொரு உறுதிமொழியையும் வழங்கவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீன விஜயத்தை நிறைவு செய்து வாஷிங்டன் திரும்பும் வழியில் விமானத்தில் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தைவானுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அமெரிக்கா அதைப் பாதுகாக்குமா என்று சீன ஜனாதிபதி தன்னிடம் நேரடியாகக் கேட்டதாகவும், அதற்கு “நான் அதைப் பற்றிப் பேச விரும்பவில்லை” என்று பதிலளித்தாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். மேலும், […]

உலகம் செய்தி

ட்ரம்பின் விஜயத்தையடுத்து சீனாவில் களமிறங்குகிறார் புடின்!

  • May 15, 2026
  • 0 Comments

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் விரைவில் பெய்ஜிங்கில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக கிரெம்ளின் மாளிகை அறிவித்துள்ளது. இந்த உயர்மட்ட சந்திப்பின் போது அமெரிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின், சீனப் பயணம் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே முடிவடைந்துவிட்டதாக ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம் செய்த நிலையில், ரஷ்ய ஜனாதிபதியும் அங்கு […]

செய்தி

முதல்வராகிறார் விஜய்: தமிழக அமைச்சரவையும் பதவியேற்பு!

  • May 10, 2026
  • 0 Comments

தமிழக முதல்வராக விஜய் இன்று பதவியேற்கவுள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களை கைப்பற்;றியது. எனினும், விஜய் ஆட்சி அமைக்க காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு வழங்கின. அந்தவகையில் தவெக ஆட்சிக்கு 120 சட்;டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிட்டியுள்ளது. அரசியலமைப்பு சட்டப் பிரிவு 164-ன் கீழ் விஜய்யை முதல்வராக நியமனம் செய்து அதற்கான ஆணையை ஆளுநர் அர்லேகர் நேற்று […]

இலங்கை செய்தி

யாழிலும், வன்னியிலும் மே தினம் நடத்துகிறது NPP

  • April 29, 2026
  • 0 Comments

  சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தேசிய மக்கள் சக்தி , 21 மாவட்டங்களில் 21 மேதின கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் செயலாளர் ரில்வின் சில்வா மேற்படி தகவலை வெளியிட்டார். “மக்கள் ஆட்சிக்கு பலம்” எனும் தொனிப்பொருளின்கீழ் தேசிய மக்கள் சக்தியின் மே தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இது தொடர்பில் ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா கூறியவை வருமாறு, “கொழும்பில் இம்முறை பிரதான மேதின […]

உலகம் செய்தி

ஈரானின் முக்கிய இலக்குகள்மீது இஸ்ரேல் தாக்குதல்!

  • April 2, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய ராணுவம் ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தளங்கள் IRGC மீது பாரிய வான்வழித் தாக்குதல்களை இன்று (2) நடத்தியுள்ளது. கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பமான போர் இன்று 35 ஆவது நாளாக தொடர்கின்றது. இந்நிலையில் வான்வழி தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் மேற்படி தாக்குதலில் ஈரானியப் படையினரின் தரைப்படை முகாம்கள், உயர் தளபதிகள் தங்கியிருந்த நடமாடும் தலைமையகம் மற்றும் ballistic ஏவுகணை சேமிப்பு கிடங்குகள் ஆகியவை குறிவைக்கப்பட்டன. தற்போதைய […]

அரசியல் இலங்கை செய்தி

போர் சூழலில் தேசிய பாதுகாப்பு குறித்து சிந்தித்தே முடிவெடுக்க வேண்டும்: சஜித்!

  • March 7, 2026
  • 0 Comments

“உலகில் போர் நடந்து கொண்டிருக்கும் தருணத்தில், ஒரு நாடாக நாம் நாடு குறித்தும், தேசிய பாதுகாப்பு குறித்தும் சிந்தித்து சமநிலையுடன் நடந்து கொள்ள வேண்டும்.” இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (07) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். “ ஒரு நாடாக, இன்று நாம் பல சவால்களை எதிர்கொள்கிறோம். பல ஆபத்துகளும் சவால்களும் நம்மை நோக்கி வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், […]

உலகம்

ஈரான்மீதான போரில் ஆஸ்திரேலியா பங்கேற்கவில்லை!

  • March 2, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானில் நடத்திய தாக்குதலில் தமது நாடு பங்கேற்கவில்லை என்று ஆஸ்திரேலியா Australia தெரிவித்துள்ளது. மேற்படி தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே ஆஸ்திரேலியாவுக்கு தெரியப்படுத்தப்படவில்லை என்று ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் Penny Wong தெரிவித்தார். ஈரான் மக்களின் உரிமைகளைப் பறித்த அந்தத் தலைவரின் மறைவுக்காக ஆஸ்திரேலியப் பிரதமர் அனுதாபம் தெரிவிக்கப்போவதில்லை என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார். அதேவேளை, ஈரான்மீது ஆஸ்திரேலியா பல பொருளாதார தடைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.