ஐரோப்பா

பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத்தீ – இரவோடு இரவாக மக்கள் வெளியேற்றம்

  • July 23, 2026
  • 0 Comments

பிரான்சின் போர்டோ நகருக்கு மேற்கே காட்டுத்தீ கடுமையாகப் பரவியதைத் தொடர்ந்து, இரவோடு இரவாக 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். இந்தத் தீ சுமார் 2,000 ஹெக்டேர் நிலத்தை எரித்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தீயைக் கட்டுப்படுத்த சுமார் 500 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தீயின் தீவிரம் அதிகமாக இருந்தபோதிலும், இதுவரை யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஐரோப்பா

ஸ்பெயின் மற்றும் பிரான்ஸில் காட்டுத்தீ அபாயம் – போராடும் தீயணைப்பு வீரர்கள்

  • July 22, 2026
  • 0 Comments

ஸ்பெயின் மற்றும் பிரான்சில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. தீயணைப்பு வீரர்கள் இன்றை தினம் சில பகுதிகளில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ளனர். இருப்பினும் பெரும்பாலான பகுதிகளில் தீவிபத்து அபாயம் அதிகமாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிரான்சின் தென்மேற்குப் பகுதியான ஜிரோண்டேவில் (Gironde) தீயணைப்பு வாகனம் தீப்பிடித்து எரிந்ததில், இரண்டு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் பார்பிக்யூக்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் மக்களை வலியுறுத்தினர். மேலும், பத்தில் ஒன்பது காட்டுத்தீகள், தற்செயலாகவோ அல்லது திட்டமிட்டோ, […]

ஐரோப்பா

பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆழப்படுத்த விரும்பும் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி – சீனா மீது பாய்ச்சல்

  • July 18, 2026
  • 0 Comments

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனிக்கு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆழப்படுத்த இருநாட்டு தலைவர்களும் உறுதிப்பூண்டுள்ளனர். ஜெர்மன் அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் மற்றும் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் கூட்டு அமைச்சரவை கூட்டங்களின் ஒரு பகுதியாக நேற்றைய தினம் சந்தித்துக்கொண்டனர். இதன்போது நாட்டின் பாதுகாப்பு, மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்தாலோசித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த இருவரும்,  பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும், சீனாவின் கடுமையான பொருளாதாரப் போட்டியை எதிர்கொள்ளவும் இருநாடுகளும் தயாராக இருப்பதாக […]

ஐரோப்பா

கடும் வெப்ப அலையை தொடர்ந்து கொட்டித் தீர்த்த மழை – பிரான்ஸில் இருவர் பலி

  • July 17, 2026
  • 0 Comments

நீண்டகால வெப்ப அலையைத் தொடர்ந்து, பிரான்சில் நேற்றிரவு கடும் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இதில் இருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செயின்ட்-விக்டர்னியனில் ( Saint-Victurnien) மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், டோலோமியூவில் (Dolomieu) மின்னல் தாக்கியதில் மற்றொருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி திடீர் மழை காரணமாக 53,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தென்கிழக்கு பிரான்சில்  முன்னர் பாதிக்கப்பட்ட அனைத்து மாகாணங்களிலும் இடியுடன் கூடிய மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை மெட்டியோ-பிரான்ஸ் நீக்கியுள்ளது.

உலகம்

பிரான்ஸை வாட்டி வதைக்கும் வெப்பம் – அணு உலைகளை நிறுத்த தீர்மானம்

  • July 12, 2026
  • 0 Comments

பிரான்ஸை வாட்டி வதைக்கும் வெப்ப அலை காரணமாக, மூன்று அணு உலைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  மேலும் எட்டு உலைகள் குறைந்த திறனில் இயங்கி வருவதாகவும் பிரான்சின் முக்கிய எரிசக்தி வழங்குநர் இன்று அறிவித்துள்ளது. வானிலை நிலவரங்கள் காரணமாகவும், சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நோக்குடனும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப அலையால் ஏற்கனவே வெப்பமடைந்து வரும் ஆறுகளில் அதிகப்படியான சூடான நீரை வெளியேற்றுவதைத் தவிர்ப்பதற்காக மேற்படி முடிவெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டின் மின்சார உற்பத்திக்கு […]

ஐரோப்பா

சிவப்பு எச்சரிக்கையின் கீழ் பிரான்ஸ் – சுற்றுலாத் தலங்களை மூட தீர்மானம்

  • July 11, 2026
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளை மற்றுமொரு வெப்ப அலை தாக்கியுள்ளமையால் பாரிஸின் ஈபிள் கோபுரம் மற்றும் லூவர் அருங்காட்சியகம் ஆகியவை இந்த வார இறுதியில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸில் வெப்பநிலை உச்சம் தொடும் என கணிக்கப்பட்டுள்ளமையால் ஈபிள் கோபுரம் 04.00 மணிக்கு முன்னதாகவே மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், லூவர் அருங்காட்சியகமும் முன்கூட்டியே மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மியூசி டி’ஓர்சே கலைக்கூடமும் (Musée d’Orsay) இன்று முதல் வரும் புதன்கிழமை வரை மாலை 5 மணி முதல் மூடப்படும் […]

ஐரோப்பா

பிரான்ஸில் 09 மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

  • July 11, 2026
  • 0 Comments

பிரான்ஸில் அடுத்த வாரம் கடுமையான வெப்ப அலை நீடிக்கும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசாங்கம் “ஓர்செக் தீவிர வெப்பத் திட்டத்தை” செயல்படுத்தும் என நேற்று அறிவித்துள்ளது. குறிப்பாக சிவப்பு எச்சரிக்கையின் கீழ் உள்ள மாகாணங்களுக்கு இந்த வெப்பத் திட்டம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சின் மேற்குப் பகுதியில் உள்ள ஒன்பது மாகாணங்கள் தீவர வெப்பநிலைக்குரிய சிவப்பு எச்சரிக்கையின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 72 மாகாணங்கள் ஆரஞ்சு எச்சரிக்கையின் கீழ் உள்ளன என்று தேசிய வானிலை முன்னறிவிப்பாளரான […]

ஐரோப்பா

பிறப்பு விகித சரிவை சமாளிக்க பிரான்ஸ் வகுத்துள்ள புதிய திட்டம் – பெற்றோருக்கு விசேட விடுமுறை

  • July 3, 2026
  • 0 Comments

பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் பிரான்ஸில் பெற்றோர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனால் நேற்று முன்தினம் பூர்வாங்கமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறைந்து வரும் பிறப்பு விகிதம் மற்றும் மகப் பேறின்மை என்பவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான திட்டத்தை ஜனாதிபதி மக்ரோன் 2024 இல் வெளியிட்டார். இதற்கமைய தாய்மாரும் தந்தையரும் தங்களுக்கு ஏற்கனவே கிடைக்கப்பெற்றுள்ள உரிமைகளுக்கு மேலாக ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் மேலதிகமாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. […]

ஐரோப்பா

வெப்ப அலை – பிரான்ஸின் இருவேறு பகுதிகளில் காட்டுத்தீ

  • July 2, 2026
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளை வெப்ப அலை உலுக்கி வரும் நிலையில், பிரான்ஸின் ஆட் (Aude) பகுதியில் இன்று காட்டுத்தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் எல்லையருகே உள்ள ஆட் பகுதியின் பெரும் பகுதியை காட்டுத்தீ ஆக்கிரமித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் பலத்த காற்று வீசுவதால் தீ வேகமாக மற்ற இடங்களுக்கு பரவும் அபாயம் உள்ளதாகவும், அதனை கட்டுப்படுத்துவதற்கான  சாதகமான சூழ்நிலை இல்லை எனவும் கூறப்படுகிறது. எவ்வாறாயினும் தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

பிரான்ஸில் விமான விபத்து – 11 பேர் உயிரிழப்பு

  • June 28, 2026
  • 0 Comments

பிரான்சின் டோம்ப்லைன் (Tomblaine) நகரில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 11 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து இன்று காலை 11 மணியளவில் நான்சி நகருக்கு அருகே இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் விமானி உள்பட 10 ஸ்கைடைவர்கள் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதுடன், தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதிகாரிகள் விபத்து குறித்த சாட்சியங்களை சேகரித்து வருகின்றனர். அத்துடன் விபத்து நடந்த பகுதியூடான போக்குவரத்தை தவிர்க்குமாறும் […]