சிஜேபி கோரிக்கைகள் ஏற்பு: டெல்லி போராட்டம் நிறைவு
இந்தியா, டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது. மத்திய அமைச்சர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்து, சிஜேபியின் தலைமை செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ் , மேற்படி அறிவிப்பை வெளியிட்டார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது. […]













