ருமேனியாவை ஊடுருவிய மற்றொரு ட்ரோன் விமானம் – சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு
உக்ரைன் எல்லையருகே, மக்கள் தொகை குறைவாக உள்ள பகுதியில், தேசிய வான்வெளியை மீறிப் பறந்த இரண்டாவது ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ருமேனியா இன்று அறிவித்துள்ளது.
முதலில் விழுந்த ஆளில்லா விமானம் ரஷ்யாவினுடையதாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டாவது ஆளில்லா விமானம், டானூப் டெல்டாவில் (Danube Delta) உள்ள ஸ்ஃபான்டு ஜார்ஜேவிற்கு மேற்கே 10 கி.மீ (6 மைல்) தொலைவில், இன்று காலை 08.30 மணியளவில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
காலை 8:22 மணிக்கு ரேடார் மூலம் இந்த வான்வெளி மீறல் கண்டறியப்பட்டதாகவும், இரண்டு F-16 ரக போர் விமானங்கள் விரைந்து அனுப்பப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைனுடன் 650 கி.மீ (400 மைல்) நில எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ருமேனியா, 2022-ல் உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு, அடிக்கடி ட்ரோன் ஊடுருவல்களை எதிர்கொண்டு வருகிறது.





