ஸ்கொட்லாந்தின் பிரபலமான பூங்காவில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீ – மக்களை வெளியேற உத்தரவு
ஸ்கொட்லாந்தின் கெய்ர்ன்கார்ம்ஸ் (Cairngorms) தேசியப் பூங்காவில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருகின்ற நிலையில், அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பத்து நாட்களுக்கு முன்பு ஆரம்பித்த இந்த தீ, ஹைலேண்ட் பூங்காவின் சுமார் 600 ஹெக்டேர் பரப்பளவிலான பகுதியை ஆக்கிரமித்துள்ளது.
இதனை ஸ்காட்லாந்து காவல்துறை பெரும் தீவிபத்து சம்பவமாக வகைப்படுத்தியுள்ளது. தீயை அணைக்க சுமார் 500 தீயணைப்பு வீரர்களும், ஹெலிகாப்டர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சர் ஜான் ஸ்வினி (John Swinney) , தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை “ஒரு சிக்கலான மற்றும் கடினமான சூழ்நிலை” என்று குறிப்பிட்டார்.
இருப்பினும் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில், நேற்றிரவு காற்றின் திசையில் ஏற்பட்ட வரவேற்கத்தக்க மாற்றம், நெத்தி பிரிட்ஜ் என்ற ஹைலேண்ட் ( Highland village of Nethy Bridge) கிராமத்திற்கு உடனடி அச்சுறுத்தலைக் குறைத்துள்ளது” என்றும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து “முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக”, நெத்தி பிரிட்ஜில் (Nethy Bridge) வசிக்கும் சுமார் 650 பேரை வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.




