ஐரோப்பா

உக்ரைனில்  போரை தொடர முடியாத சூழ்நிலையில் ரஷ்யா!!

  • June 2, 2026
  • 0 Comments

உக்ரைனில்  போரை தொடர முடியாத சூழ்நிலையில் ரஷ்யா இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இந்நிலையில் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் பாதுகாப்புச் செலவினங்களைக் குறைக்குமாறு நிதி அதிகாரிகள் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ரஷ்யாவின் நிதி அமைச்சகம் கணிசமான நிதி பற்றாக்குறையை  எதிர்பார்க்கிறது. இந்த ஆண்டு குறைந்தபட்சம் 28 பில்லியன் டொலர் அளவுக்கு நிதி வரம்பு மீறப்படும் என்றும், வரும் ஆண்டுகளிலும் மேலும் செலவு அதிகரிக்கும் என்றும் நிதி அமைச்சர் அன்டன் சிலுவானோவ், (Anton Siluanov) கணித்துள்ளார். போர் […]

ஐரோப்பா

ரஷ்யாவில் தலைத்தூக்கியுள்ள பட்ஜெட் பிரச்சினை!! போர் செலவீனத்தை முடக்க அறிவுரை!

  • June 2, 2026
  • 0 Comments

உக்ரைனில் நேற்று இரவு ரஷ்யா ட்ரோன் தாக்குதல்களை முன்னெடுத்திருந்த நிலையில் மக்கள் பலர்  குண்டுவெடிப்புத் தடுப்பு முகாம்களிலும், நிலத்தடி மெட்ரோ நிலையங்களிலும் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன்,  நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக கீவ் நகரில் பெரிய வெடிப்புகளும், புகை மண்டலங்களும் ஏற்பட்டதாகவும், இதில் நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும், குழந்தைகள் உட்பட 58 பேர் காயமடைந்ததாகவும் மேயர் விட்டாலி கிளிட்ச்கோ  (Vitali Klitschko) தெரிவித்தார். இதற்கிடையே போரை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு போதுமான […]

ஐரோப்பா

உக்ரைனுக்கு ஆதரவாக போரிட்ட பிரித்தானிய பிரஜை உயிரிழப்பு!

  • May 25, 2026
  • 0 Comments

உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் இடம்பெற்று வரும் போரில் பிரித்தானிய பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 23 வயதான அய்ர்டன் ரெட்ஃபியர்ன் (Ayrton Redfearn) என அடையாளம் காணப்பட்டுள்ளார். ரெட்ஃபியர்ன், இதற்கு முன்னர் டார்குவே விமானப் படை மாணவராகவும், ராயல் ஏர் ஃபோர்ஸிலும் (RAF) பணியாற்றியுள்ளார். அவர் 2025 ஆம் ஆண்டில்  உக்ரைனிய இராணுவத்திற்கு ஆதரவளிக்கும் ஒரு சிறப்புப் பிரிவில் இணைந்திருந்தார். இதேவேளை அவரின் மரணத்தை வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளதுடன், இரங்கல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா செய்தி

ரஷ்யாவின் மிகப்பெரிய ஏவுகணை தாக்குதல் – கீவ் உட்பட பல பகுதிகள் கடும் சேதம்

  • May 24, 2026
  • 0 Comments

ரஷ்யா, உக்ரைன் மீது நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் பல ஏவுகணைகளை ஏவி பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியுள்ளது. தலைநகர் கீவ் முக்கிய இலக்காக இருந்ததாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நான்கு பேர் உயிரிழந்ததுடன், சுமார் 83 பேர் காயமடைந்துள்ளனர். குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் பாடசாலைகளும் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதல்கள், உக்ரைன் பொதுமக்கள் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக மேற்கொள்ளப்பட்டதாக ரஷ்ய […]

ஐரோப்பா

உக்ரைனில் ஏவுகணைத் தாக்குதல் – பலர் பலி!

  • May 19, 2026
  • 0 Comments

உக்ரைனின் வடக்குப் பகுதியான செர்னிஹிவ் மற்றும் சுமி பிராந்தியங்களில் ரஷ்யா ஏவுகணை மற்றும் ஆளில்லா ட்ரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நால்வர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்ததாக உக்ரைனிய அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். அதேநேரம் செர்னிஹிவ் (Chernihiv) பிராந்தியத்தில் உள்ள ப்ரைலுகி (Pryluky) நகரின் மையத்தில் நடத்தப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும், 14 வயது சிறுவன் உட்பட குறைந்தது 17 பேர் காயமடைந்ததாகவும் பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பா

மொஸ்கோ மீது தீவிர ட்ரோன் தாக்குதல்களை முன்னெடுத்த உக்ரைன் – நால்வர் பலி!

  • May 17, 2026
  • 0 Comments

ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் நடத்திய மிகப்பெரிய தாக்குதலில் நால்வர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் மொஸ்கோவில் 03 பேரும் நான்காவது நபர்   உக்ரைனை ஒட்டியுள்ள பெல்கோரோட் பிராந்தியத்திலும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைனின் வான்பரப்பில் 1,000-க்கும் மேற்பட்ட உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.  

ஐரோப்பா

உக்ரைனால் வந்த வினை – லாட்வியப் பிரதமர் எவிகா சிலினா பதவி விலகினார்!

  • May 14, 2026
  • 0 Comments

லாட்வியப் பிரதமர் எவிகா சிலினா (Evika Silina) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ரஷ்யாவை நோக்கிச் சென்ற உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் லாட்விய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து, அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில்  அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர்  ஆண்ட்ரிஸ் ஸ்ப்ரூட்ஸை ( Andris Spruds) சிலினா பதவிநீக்கம் செய்திருந்தார். சிலினாவின் இந்த நடவடிக்கைக்கு ஸ்ப்ரூட்ஸின் முற்போக்குக் கட்சி அதிருப்தி தெரிவித்ததோடு, ஆளும் கட்சிக்கு அளித்துவந்த ஆதரவையும் திரும்பப் […]

ஐரோப்பா

முடிவுக்கு வரும் உக்ரைன் போர் – புட்டின் வெளியிட்ட செய்தி!

  • May 10, 2026
  • 0 Comments

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர தான் எண்ணுவதாக ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார். மொஸ்கோவில்  மிக எளிமையாக நடைபெற்ற வெற்றி தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டப்பின் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார். மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  ஐரோப்பாவிற்கான புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும், தனது விருப்பமான பேச்சுவார்த்தைப் பங்காளியாக ஜெர்மனியின் முன்னாள் அதிபர் கெர்ஹார்ட் ஷரோடர் (Gerhard Schroeder) இருப்பார் என்றும் அவர் கூறினார். இதற்கிடையே அமெரிக்க அதிபர் […]

உலகம்

உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 26 பேர் பலி

  • May 6, 2026
  • 0 Comments

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் இந்த தாக்குதலில் 80ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

தந்திரோபாய அணு ஆயுதங்களை ஏவத் தயாராகும் ரஷ்யா!

  • May 3, 2026
  • 0 Comments

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தந்திரோபாய அணு ஆயுதங்களை ஏவத் தயாராக இருப்பதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனிய இராணுவத் தளபதி ரோமன் கோஸ்டென்கோ (Roman Kostenko) இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார். இந்த மோதலில் ரஷ்யா தோல்வியை சந்திப்பதாக உணர்ந்தால், அது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். பல கிலோடன்கள் முதல் பல பத்து கிலோடன்கள் வரையிலான ஆற்றல் கொண்ட தந்திரோபாய அணு ஆயுதங்களை ரஷ்யா ஏவக்கூடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். […]