ஐரோப்பா

பதற்றத்தை அதிகரிக்க உக்ரைன் சூளுரை : புட்டின் பிறப்பித்த உத்தரவு

  • July 4, 2026
  • 0 Comments

உக்ரைன் மீது  இரவு முழுவதும் ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் நான்கு பேர் கொல்லப்பட்டதுடன், பத்து பேர் காயமடைந்தனர். இதற்கு முன்னர், கீவ் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலில் குறைந்தது முப்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 91 பேர் காயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளும் பதற்றத்தை அதிகரிக்கப் போவதாக சூளுரைத்துள்ளன. உக்ரைனின் இராணுவ-தொழில்துறை வளாகத்திற்கு எதிரான “மிகப்பெரிய, ஒருங்கிணைந்த தாக்குதல்கள்” தொடர வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்  கட்டளையிட்டுள்ளார். டான்பாஸ் பகுதியில் உள்ள ஒரு முக்கிய […]

ஐரோப்பா

உக்ரைனில் துக்க தினம் அனுஷரிப்பு

  • July 3, 2026
  • 0 Comments

ரஷ்யா நேற்று முன்தினம் நடத்திய பாரிய தாக்குதலில் உக்ரைனில் 30 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து துக்க தினத்தை அனுஷரிக்கும் முகமாக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் போராடி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா நடத்திய மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது. இதற்கிடையே  வடக்கு சுமி பகுதியில் இன்று  ரஷ்யா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில்  பெண் ஒருவர் மற்றும் அவரது கைக் […]

ஐரோப்பா

ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் நிலையங்களை குறிவைத்து உக்ரைன் தாக்குதல்

  • June 29, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்து உக்ரைன் தொடர் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. அந்தவகையில் நேற்றைய தினம் இரு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக  உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ​ டெலிகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். ரஷ்யாவின் கிராஸ்னோடர் பகுதியில் உள்ள மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையத்தின் மீது உக்ரைன் தாக்கியுள்ளது. இத்தாக்குதலில் ஒருவர் பலியானார். அத்துடன் ஆண்டுக்கு 4 மில்லியன் டன் கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் இந்த ஆலையின் சேதத்தால், கருங்கடல் துறைமுகங்கள் வழியிலான ரஷ்யாவின் எரிபொருள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. […]

ஐரோப்பா

உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்த ரஷ்ய கடும்போக்காளர்கள் அழைப்பு

  • June 26, 2026
  • 0 Comments

உக்ரைனின் தொடர் தாக்குதல்கள் காரணமாக அதிருப்தி அடைந்துள்ள ரஷ்ய ஆதரவாளர்கள் இராஜதந்திர வழிகளை கைவிட்டு போரை தீவிரப்படுத்துமாறு புட்டினிடம் வலியுறுத்தியுள்ளனர். இவ்வாறான கோரிக்கைகள் புதியதல்ல என்றபோதும்   இந்த மாதம் உக்ரைன் மொஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மற்றும் கிரிமியாவை இலக்காகக் கொண்டு நடத்திய  தாக்குதல்களும், பயணிகள் பேருந்துகள் மீது நடத்தப்பட்டதாக ரஷ்யா கூறிய இரண்டு கொடிய தாக்குதல்களும், அந்தக் கோரிக்கைகளை மேலும் கூர்மையாக்கித் தீவிரப்படுத்தியுள்ளன. இந்த கோரிக்கைளில்  முழுமையான அணிதிரட்டல்,  கீவ்வின் அரசாங்கப் பகுதியை அழித்தல், ஜனாதிபதி வொலோடிமிர் […]

ஐரோப்பா

ரஷ்யா மீது கடுமையான தாக்குதல்களை நடத்திய உக்ரைன்

  • June 26, 2026
  • 0 Comments

போர்முனையிலிருந்து வெகு தொலைவில் உள்ள பகுதிகளைக் குறிவைத்து, ரஷ்யாவின் எரிசக்தித் துறையை இலக்காகக் கொண்ட புதிய தொடர் தொலைதூரத் தாக்குதல்களுக்கு உக்ரைன் பொறுப்பேற்றுள்ளது. கிராஸ்னோடார் பிராந்தியத்தில் உள்ள போல்டாவ்ஸ்கா எண்ணெய் கிடங்கும், உஃபா நகரில் உள்ள இரண்டு முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் இந்தத் தாக்குதல்களுக்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்கப்பட்ட உஃபா நகரில் உள்ள பாஷ்நெஃப்ட்-உஃபானெஃப்டெகிம் மற்றும் பாஷ்நெஃப்ட்-நோவோயில் சுத்திகரிப்பு நிலையங்கள், தற்போதைய போர் முன்னணியிலிருந்து சுமார் 1,500 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளன. ரஷ்யப் பிரதேசத்தின் ஆழமான […]

ஐரோப்பா

உக்ரைனின் தொடர் தாக்குதல்கள் – அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாரான புட்டின்

  • June 24, 2026
  • 0 Comments

உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ( Vladimir Putin) தெரிவித்துள்ளார். ரஷ்ய உள்கட்டமைப்புகள் மீது உக்ரைன் சமீபத்தில் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ரஷ்யா அமைதி பேச்சுவார்ததைக்கு தயாராகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய இஸ்தான்புல்லில் முன்னர் எட்டப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் எந்தவொரு பேச்சுவார்த்தையும் தொடர வேண்டும் என்றும், அந்த ஒப்பந்தங்களை உக்ரைனிய தூதுக்குழு ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்டதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார். உக்ரைனின் தொடர்சியான தாக்குதல்களால் ரஷ்யாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. […]

ஐரோப்பா

ரஷ்யாவை மூர்கமாக தாக்கிய உக்ரைன் – 555 ட்ரோனகள் ஊடுறுவல்

  • June 18, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையொன்றின் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியாக  கிரெம்ளின் குற்றம் சாட்டிள்ளது. நேற்று இரவு ரஷ்யாவின் பல பிராந்தியங்களில் 555 உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் ஊடுறுவியதாகவும், அவற்றை  தனது வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்ததாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளில்லா விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மாஸ்கோவின் முக்கிய விமான நிலையங்கள் விமானச் சேவைகளை நிறுத்தி வைத்த அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தாக்குதலுக்கு உள்ளான  எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு அருகில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் ரஷ்யாவின் தலைநகரைக் […]

ஐரோப்பா

சிறுவர்கள் பயணித்த பேருந்தின் மீது ட்ரோன் தாக்குதல் – உக்ரைன் மீது பழி

  • June 17, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பகுதியில் சிறுவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது  ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. பெலாரஸைச் சேர்ந்த சிறுவர் கால்பந்து அணியை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐந்து குழந்தைகள் உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளதாக ரஷ்யாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் தான் காரணம் என ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. பெலாரஸ் வெளியுறவு அமைச்சகம் இந்தத் தாக்குதலை “பொதுமக்களுக்கு எதிரான […]

ஐரோப்பா

உக்ரைனின் பாரம்பரிய மடாலயம் மீது தாக்குதல் – 04 பேர் பலி!

  • June 15, 2026
  • 0 Comments

உக்ரைனின் ஆன்மீக மற்றும் கலாச்சார பகுதியான பெச்செர்ஸ்க் லாவ்ரா மடாலயம் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 04 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் வசிக்கும் மக்களை அவசரமாக வெளியேறுமாறு  உக்ரைன் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த வாரம் பிரான்சில் நடைபெறவிருக்கும் ஜி7 மாநாட்டிற்கு முன்னதாக, இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 1051-ல் நிறுவப்பட்ட, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான, மத்திய கீவ் பெச்செர்ஸ்க் லாவ்ரா மடாலயம் நேரடித் தாக்குதலில் கடுமையாக சேதமடைந்தது என்று தலைநகரின் […]

ஐரோப்பா

ரஷ்யாவில் குவிந்த முதலீட்டாளர்கள் : செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மீது உக்ரைன் தாக்குதல்!

  • June 3, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்  ( St Petersburg) புறநகர்ப் பகுதிகளில் உக்ரைன் இன்று தாக்குதல் நடத்தியுள்ளது. நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு முக்கிய பொருளாதார மாநாடு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக 130 நாடுகளில் இருந்து விருந்தினர்கள் வருகை தந்திருந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு முதல் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், 59 ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் […]