உலகம்

”பயங்கரவாதத்தின் மீள் எழுச்சி” : 60 நாடுகளுக்கு அமெரிக்கா அழைப்பாணை

  • July 10, 2026
  • 0 Comments

பயங்கரவாதத்தின் மீள் எழுச்சி குறித்து கலந்துரையாட 60 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டம் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாக ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையின் அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த அழைப்புப் பட்டியலில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள், இலத்தீன் அமெரிக்க நாடுகள், இந்தியா, இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட முக்கிய ஆசிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதன்போது பயங்கரவாதத்தின் மீள் எழுச்சி தொடர்பிலும், உளவுத்துறை தகவல்களை பகிர்ந்துகொள்வது தொடர்பிலும் விசேடமாக கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் […]

உலகம்

“KILL TRUMP” : ஈரானில் ட்ரம்புக்கு எதிராக முழக்கம்

  • July 9, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்யுமாறு வலியுறுத்தும் பதாதைகள் ஈரானில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இன்று காலை மஷ்ஹத் நகரில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் KILL TRUMP என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. முன்னதாக கமேனியின் இறுதி அஞ்சலியின்போது ஒன்றுக்கூடிய மக்கள் ட்ரம்பின் மரணத்தை வேண்டி கோஷமிட்டிருந்தனர். இதற்கிடையே நேட்டோ உச்சிமாநாட்டில் பேசிய ட்ரம்ப் தனக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதை ஒப்புக்கொண்டார். அத்துடன் ஈரானின் கொலை பட்டியலில் தான் முதலிடத்தில் இருப்பதாகவும் கூறினார். மேலும் தம்மைக் குறிவைத்து ஒரு படுகொலையை அரங்கேற்றுவதற்கு […]

உலகம்

ஈரான் ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது : 90 இலக்குகளை அழித்த பிறகு ட்ரம்ப் கருத்து

  • July 9, 2026
  • 0 Comments

ஈரான் உண்மையில் ஒப்பந்தம் செய்ய விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார் நேட்டோ உச்சிமாநாட்டை முடித்துக்கொண்டு அமெரிக்கா செல்ல தயாரான அவர், ஏர் ஃபோர்ஸ் வன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  “அவர்கள் சற்று முன்பு அழைத்தார்கள். அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்ய மிகவும் விரும்புகிறார்கள்,” என்று அவர் கூறினார். நேற்று இரவு ஈரானில் 90-க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து ட்ரம்பின் […]

உலகம்

கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல – ட்ரம்பிற்கு நினைவூட்டல்

  • July 8, 2026
  • 0 Comments

நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட ட்ரம்ப், கிரீன்லாந்து வொஷிங்டனின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் எனக் கூறியமைக்கு டென்மார்க் பதிலளித்துள்ளது. கிரீன்லாந்து “விற்பனைக்கு அல்ல” என்று டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் மீண்டும் ஒருமுறை உறுதிப்பட தெரிவித்துள்ளார். துருக்கியில் நடைபெறவுள்ள  நேட்டோ உச்சி மாநாட்டிற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஃபிரடெரிக்சன், அமெரிக்காவின் நிலைப்பாடு மேலும் மேலும் வெளிப்படையாகி வருவதாக தெரிவித்தார். “நேற்று அமெரிக்க அதிபர் பேசியதைக் கேட்டேன், துரதிர்ஷ்டவசமாக இந்த விஷயத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது […]

ஐரோப்பா

ஸ்பெயினுடனான அனைத்து வர்த்தகத்தையும் துண்டிக்குமாறு ட்ரம்ப் உத்தரவு

  • July 8, 2026
  • 0 Comments

அங்காராவில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டிற்கு வந்தடைந்த டொனால்ட் ட்ரம்ப், ஸ்பெயின் மீதான தனது அழுத்தத்தை மீண்டும் அதிகரித்துள்ளார். அட்லாண்டிக் கூட்டணியில் ஸ்பெயினை ஒரு “மோசமான” கூட்டாளி என்று வர்ணித்த ட்ரம்ப், ஸ்பெயினுடனான “அனைத்து வர்த்தகத்தையும் துண்டிக்குமாறு” கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட்டிற்கு அறிவுறுத்தியுள்ளார். “ஸ்பெயின் ஒரு பயனற்ற முயற்சி. நாங்கள் இனி ஸ்பெயினுடன் எந்த வர்த்தகமும் செய்ய விரும்பவில்லை,” என்று ட்ரம்ப் கூறியுள்ளார். நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டேவுடன் இணைந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது அவர் இந்த […]

உலகம்

நேட்டோ உச்சிமாநாட்டில் சர்ச்சையை ஏற்படுத்திய ட்ரம்ப் – மீண்டும் தலைத்தூக்கியது கிரீன்லாந்து விவகாரம்

  • July 7, 2026
  • 0 Comments

கிரீன்லாந்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் டென்மார்கிற்கு அல்ல. மாறாக  அமெரிக்காவின் வசமே இருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள துருக்கி சென்றுள்ள ட்ரம்ப், அங்கு செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடுகையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், கிரீன்லாந்தின் மீதான கட்டுப்பாட்டுப் பிரச்சினை, நேட்டோவுடனான அமெரிக்காவின் உறவுகளைப் பாதித்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். அத்துடன் கிரீன்லாந்து டென்மார்க்கிற்கு உதவுவதில்லை என்றும், டென்மார்க் கிரீன்லாந்துக்கு உண்மையாக உதவ பணம் செலவழிப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் […]

ஐரோப்பா

புட்டின் – ட்ரம்பிடையே ஒரு மணிநேரம் தொலைபேசி உரையாடல்

  • July 5, 2026
  • 0 Comments

உக்ரைனில் நடைபெற்று வரும் போர் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்னிடம் சுமார் ஒரு மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது உக்ரைன் போர்க்களத்தின் உண்மையான நிலவரத்தை புட்டின் விவரித்ததாக தெரியவருகிறது. அத்துடன் நேட்டோ (NATO) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்கான அமெரிக்க அதிபரின் திட்டங்களின் பின்னணி உட்பட, உக்ரைன் விவகாரம் குறித்து  விவாதித்தாக கூறப்படுகிறது. உக்ரைனில் அரசியல் மற்றும் ராஜதந்திர ரீதியிலான தீர்வுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதையும் புட்டின் இதன்போது எடுத்துரைத்துள்ளார். ஆனால் அது ரஷ்யாவின் […]

உலகம்

நான் மூன்றாவது முறையாக பதவியேற்க மாட்டேன் – ட்ரம்ப்‘

  • July 5, 2026
  • 0 Comments

​​அமெரிக்க மக்கள் தங்கள் சுதந்திரத்தை யாரும் பறிக்க அனுமதிக்க மாட்டார்கள் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 250வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், அமெரிக்கர்கள் உலகின் மிகவும் தைரியமான மற்றும் சிறந்த மக்கள். அமெரிக்காவில் உள்ள அனைவருக்கும் முழுமையான மத சுதந்திரம் உள்ளது என்றும், அமெரிக்கா உலகெங்கிலும் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது என்றும், அமெரிக்காவை ஒருபோதும் தோல்வியடைய விடமாட்டோம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். நான் […]

உலகம்

தெஹ்ரானில் கூடியுள்ள மக்களை ஒரே நேரத்தில் தீர்த்துக் கட்ட முடியும் – ட்ரம்ப் இறுமாப்பு

  • July 5, 2026
  • 0 Comments

கமெனியின் இறுதிச் சடங்கின் காட்சிகளுக்கு எதிர்வினையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் ஈரானிய உச்ச தலைவரின் இறுதிச் சடங்கில் திரண்டிருந்த பெருந்திரளான மக்களைக் கண்டு “அதிர்ச்சியடைந்ததாகக் கூறியுள்ளார். இது தொடர்பில் ஆக்சியோஸிடம் (Axios) பேசிய ட்ரம்ப், தான் அதிர்ச்சியடைந்ததாகவும், மக்கள் அவரை வெறுப்பதாக நினைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். பின்னர் அங்கு திரண்டிருந்த மக்கள் அழும் காட்சிகளை விவரித்த அவர் ஒருவேளை அது போலிக் கண்ணீராக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்த அவர் அங்கு ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். […]

உலகம்

கமேனியின் இறுதிச் சடங்கில் ட்ரம்பின் மரணத்திற்கு அழைப்பு

  • July 5, 2026
  • 0 Comments

ஈரானின் தலைநகரான தெஹ்ரானில்  மறைந்த தலைவர் அலி கமேனியின் இறுதி சடங்கு இன்று  இடம்பெற்று வருகிறது. இதில்  லட்சக்கணக்கான மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இதன்போது கூட்டத்தின் முன்பு பேசிய கலைஞர் ஒருவர் ட்ரம்பின் மரணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். கவிஞரான முகமது ரசூலி, “அமெரிக்காவுக்கு மரணம்!” மற்றும் “இஸ்ரேலுக்கு மரணம்!” என்ற கோஷங்களை எழுப்பினார். ட்ரம்பைக் குறிப்பிட்டு பேசிய அவர், “உலகிலேயே மிகவும் கேவலமான மனிதன் ஏன் இன்னும் உயிருடன் இருக்கிறான்?” என்று கேள்வி எழுப்பினார். […]