ICC நீதிமன்றத்தை கலைக்க ட்ரம்ப் போராடுவது நெதன்யாகுவை காப்பதற்காகவா?
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தைக் கலைப்பதற்கான அமெரிக்காவின் நடவடிக்கை, தன்னைக் காப்பதற்காக அல்ல, மாறாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பிறரை வழக்கு விசாரணையிலிருந்து பாதுகாப்பதற்காகவே என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று தெரிவித்தார்.
இந்த அமைப்பிற்கு எதிராக அமெரிக்கா கருத்து வெளியிட்டதைத் தொடர்ந்து ஐந்து உறுப்புநாடுகள் அதில் இருந்து விலகுவது தொடர்பில் அறிவித்துள்ளதாக வெளியுறவுத்துறைச் செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்ததைத் தொடர்ந்து ட்ரம்ப் இவ்வாறு அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ரூபியோ, மிகப்பெரிய ஆபத்தில் இருப்பவர்கள் அமெரிக்கப் படை வீரர்கள் என்றும், போரில் அவர்கள் ஆற்றிய செயல்களுக்காகப் பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் மீது வழக்குத் தொடரப்படலாம் என்றும் தெரிவித்தார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) 2002-ல் சர்வதேச சமூகத்தால் போர்க்குற்றங்கள், இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்காக நிறுவப்பட்டது.
ஒரு உறுப்பு நாடு அட்டூழியங்களைத் தானே விசாரிக்க இயலாத நிலையில் அல்லது விரும்பாத நிலையில் மட்டுமே அது தனது அதிகார வரம்பை நிலைநாட்டுகிறது.




