பெட்ரோல் விலை அதிகரிப்பு – எண்ணெய் நிறுவனங்களை சாடிய ட்ரம்ப்
எண்ணெய் நிறுவனங்கள் விலைகளை அதிகரிப்பதன் மூலம் அதிகளவு பணம் சம்பாதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
எக்ஸான்மொபில் (ExxonMobilஷ) மற்றும் செவ்ரான் (Chevron) ஆகிய முக்கிய எண்ணெய் நிறுவனங்கள் மீதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அந்நிறுவனங்கள் நுகர்வோர் செலவுகளைக் குறைப்பதன் மூலம் “அதில் ஒரு பகுதியை பொதுமக்களுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.
ஈரானில் நடந்து வரும் மோதலே இதற்குக் காரணம் என்று ட்ரம்ப் சாடியுள்ளார்.
இந்நிலையில் ட்ரம்பின் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள பெட்ரோலிய நிறுவனம், உயர்ந்த விலைகள் தனிப்பட்ட நிறுவனங்களால் அல்ல, மாறாக உலகளாவிய வழங்கல், தேவை மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகளால் ஏற்படுகின்றன என்று விளக்கியுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதிலிருந்து, அமெரிக்காவில் பெட்ரோலின் விலையானது 4.10 டொலராக அதிகரித்துள்ளது.




