உலகம் செய்தி

குளோபல் சுமுத் கப்பல் இடைமறிப்பு: இஸ்ரேலுக்கு இத்தாலி கண்டனம் – குடிமக்களை உடனே விடுவிக்க கோரிக்கை

  • April 30, 2026
  • 0 Comments

சர்வதேச கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த குளோபல் சுமுத் கப்பல் குழுவை  இஸ்ரேல் இடைமறித்ததை இத்தாலி கடுமையாக கண்டித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசாங்க அறிக்கையில், குளோபல் சுமுத் கப்பல் குழுவின் கப்பல்கள் கைப்பற்றப்பட்டதை இத்தாலி கண்டிப்பதாகவும், சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து இத்தாலியர்களையும் உடனடியாக விடுவிக்குமாறு இஸ்ரேலை கேட்டுக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்பாட்டாளர்களுக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி, 24 இத்தாலியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இத்தாலி செய்தி நிறுவனம் ஏஎன்எஸ்ஏ தெரிவித்துள்ளது. மேலும், சர்வதேச சட்டம் முழுமையாக மதிக்கப்பட […]

இந்தியா செய்தி

தேர்தல் முடிவுகள் வந்த பின் எப்படி செயற்பட வேண்டும் – விஜய் இட்ட கட்டளை

  • April 30, 2026
  • 0 Comments

தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் செயற்பட வேண்டிய விடயம் தொடர்பில் நடிகர் விஜய் வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 02 சட்டமன்ற தொகுதிகளில் களமிறங்கியுள்ளார். தவெக தமிழ்நாட்டின் எடப்பாடி தொகுதியை தவிர்த்து 233 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட்டது. எடப்பாடி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு சுயேட்சை வேட்பாளருக்கு தவெக தலைவர் விஜய் ஆதரவு தெரிவித்தார். மே 4 ஆம் திகதி […]

ஐரோப்பா செய்தி

கோல்டர்ஸ் கிரீன் தாக்குதல்: விரைவாகவும் வெளிப்படையாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரதமர்

  • April 30, 2026
  • 0 Comments

கோல்டர்ஸ் கிரீனில் நேற்று இடம்பெற்ற தாக்குதலுக்கு குற்றவியல் நீதி அமைப்பு விரைவாகவும் வெளிப்படையான முறையிலும் பதிலளிக்க வேண்டும் என பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். டவுனிங் தெருவில் குற்றவியல் நீதி அமைப்புகளுடன் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் அவர் இதனை வலியுறுத்தினார். அதிர்ச்சியூட்டும் இத்தகைய தாக்குதல்களுக்கு துரிதமான பதில் அளிப்பது அதிகாரிகளின் கடமை என்றும் அவர் கூறினார். இந்தச் சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீதான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். நடவடிக்கைகள் வேகமாகவும் […]

செய்தி

பதவியிலிருந்து விலக ஷம்மி சில்வா தீர்மானம்

  • April 28, 2026
  • 0 Comments

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தனது பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார். இன்று (28) பிற்பகல் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தின் போது அவர் இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைவராகப் பணியாற்றி வரும் ஷம்மி சில்வா, பொறுப்புவாய்ந்த தரப்பினரால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு இணங்கவே இந்தப் பதவியை விட்டு விலகவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த காலங்களில் ஷம்மி சில்வா தலைமையிலான கிரிக்கெட் நிர்வாகம் குறித்து கிரிக்கெட் இரசிகர்கள் […]

செய்தி

ரஷ்ய பயணத்தின் மூலம் உலகுக்கு செய்தி சொன்ன ஈரான்

  • April 28, 2026
  • 0 Comments

ஈரான் வெளியுறவு அமைச்சர் ஆரக்சியின் (Araghchi) ரஷ்யப் பயணம், அமெரிக்கா கூறுவது போல ஈரான் தனிமைப்படுத்தப்படவில்லை என்பதை உலகிற்கு காட்டும் முயற்சியென அரசியல் ஆய்வாளர் முகமது எல்மாஸ்ரி (Mohamed Elmasry) தெரிவித்துள்ளார். இந்தப் பயணம் வெறும் அடையாளப்பூர்வமான ராஜதந்திர நடவடிக்கை மட்டுமல்ல என கூறிய அவர் அதற்கு அப்பாற்பட்ட முக்கிய பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றிருக்கலாம் என்று அவர் கூறினார். குறிப்பாக, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கான மாற்று தரைவழிப் பாதைகள், எண்ணெய் சேமிப்பு நெருக்கடி, எதிர்கால பேச்சுவார்த்தை நிபந்தனைகள் மற்றும் […]

செய்தி

மண்டேல்சன் விவகாரத்தில் முரண்பாடு காணப்படுவதாக கன்சர்வேடிவ் குற்றச்சாட்டு

  • April 27, 2026
  • 0 Comments

மண்டேல்சன் (Mandelson) தகுதி சரிபார்ப்பில் முரண்பாடுகள் காணப்படுவதாக கன்சர்வேடிவ் கட்சி (Conservative Party)  தலைவர் கெமி படேனொக் (Kemi Badenoch) தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் பிரதமர் ஸ்டார்மர் (Keir Starmer) நாடாளுமன்றத்தை பலமுறை தவறாக வழிநடத்தியுள்ளார் என்றும், தற்போது தன்னை காப்பாற்றிக்கொள்வதற்கான பல்வேறு கதைகளை கூறி வருகிறார் என்றும் அவர் குற்றம் சுமத்தினார் ஸ்டார்மரை சிறப்புரிமை குழு (Privileges Committee) விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு  ஆதரவாக வாக்களிக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர் வலியுறுத்தினார். மேலும், […]

செய்தி

போதைப்பொருட்களை சட்டபூர்வமாக்க வேண்டும் என்பது அருவருப்பானது – பிரதமர்

  • April 27, 2026
  • 0 Comments

போதைப்பொருட்களை முழுமையாக தடை செய்வதை விட அவற்றை சட்டபூர்வமாக்கி அரசின் கட்டுப்பாட்டில் ஒழுங்குபடுத்த வேண்டும் என பசுமைக் கட்சி தலைவர் சாக் போலான்ஸ்கி (Zack Polanski)தெரிவித்துள்ளார். போதைப்பொருளால் ஐரோப்பாவிலேயே பிரித்தானியாவில் அதிக இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார். ஆகவே ஒழுங்குபடுத்தல் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். தற்போதைய தடுப்பு கொள்கை தோல்வியடைந்துள்ளதாக கூறிய அவர் கடுமையான போதைப்பொருட்கள் மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்பில் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கஞ்சா போன்றவை கட்டுப்படுத்தப்பட்ட இடங்களில் மட்டும் அனுமதிக்கப்படலாம் […]

செய்தி

தையிட்டியில் தனியார் காணிகளை அளவீடு செய்யும் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு கஜேந்திரகுமார் அவசர கடிதம்

  • April 27, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை அளவீடு செய்யும் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ். மாவட்ட செயலாளரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளார். இந்தக் காணிகளை நாளைய தினம் அளவீடு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், மாவட்ட செயலாளருக்கு அவர் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். கடந்த 17 வருடங்களாக தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் போராடி வரும் நிலையில், காணி உரித்து நிர்ணய திணைக்களத்தின் […]

இலங்கை செய்தி

போதைப்பொருளுடன் கைதான பிக்குகள் : சட்டத்தின் முன் அனைவரும் சமம் – பாதுகாப்பு அமைச்சர்

  • April 27, 2026
  • 0 Comments

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் போதைப்பொருட்களுடன் கைதான பிக்குகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் இன்று கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள் என கூறிய அவர் பலவீனமானவர்களுக்கு ஒரு சட்டமும் பலமானவர்களுக்கு ஒரு சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்றும் கூறினார். இச்சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கையிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இது தொடர்பாக மேலதிக ந டவடிக்கைகளை எடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் […]

இலங்கை செய்தி

கிளிநொச்சியில் 02 வயது சிறுமியை பணத்திற்கு விற்ற தாயும், கள்ளக்காதலனும் கைது

  • April 26, 2026
  • 0 Comments

கிளிநொச்சியில் இரண்டு வயதுடைய பெண் குழந்தையை 40,000 ரூபாவிற்கு விற்பனை செய்து, அந்தப் பணத்தில் 15,000 ரூபாய் பெறுமதியான கைப்பேசி ஒன்றை கொள்வனவு செய்த தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகியோரை தர்மபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன், அந்தச் சிறுமியை விலைக்கு வாங்கிய பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி ஒருவரை அவரது தாயும் கள்ளக்காதலனும் இணைந்து கொழும்பைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளதாக தர்மபுரம் கிராம உத்தியோகத்தர் வழங்கிய தகவலுக்கமைய இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. […]

error: Content is protected !!