உலகம் செய்தி

போர் நிறுத்த முயற்சிகள் – கட்டார் பிரதமருடன் ஈரானின் வெளியுறவு அமைச்சர் பேச்சு

  • April 26, 2026
  • 0 Comments

ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இராஜதந்திர முயற்சிகள் குறித்து கட்டார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி உடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இஸ்லாமாபாத்திற்கு திரும்புவதற்கு முன்னதாக நடைபெற்ற இந்த உரையாடலில், போர் நிறுத்த முன்னேற்றங்களும் அதை வலுப்படுத்துவதில் உள்ள சவால்களும் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பதற்றத்தை குறைத்து, போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ஈரான் மேற்கொண்டு வரும் இராஜதந்திர முயற்சிகள் குறித்தும் அராக்சி விளக்கியுள்ளார். இந்நிலையில், […]

உலகம் செய்தி

போரால் ஈரானின் பொருளாதாரம் சீர்குலைவு – மக்கள் வாழ்வாதாரம் கடும் பாதிப்பு

  • April 26, 2026
  • 0 Comments

வாரக்கணக்கில் நீடித்த போரின் தாக்கத்தால், ஈரானின் உட்கட்டமைப்பும் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போரால் 3,300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 125,000 க்கும் அதிகமான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. எஃகு மற்றும் பெட்ரோலிய வேதிப்பொருட்கள் உள்ளிட்ட முக்கிய தொழில்கள் பாதிக்கப்பட்டதால், பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. இதன் காரணமாக, இலட்சக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். நிலையற்ற போர்நிறுத்தம் அமுலில் இருந்தாலும், மக்கள் அன்றாட வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடி தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.

இலங்கை செய்தி

இலங்கையில் தென்படவுள்ள விண்கல் மழை – விண்வெளி ஆர்வலர்களுக்கு அரிய தருணம்

  • April 26, 2026
  • 0 Comments

வருடந்தோரும் விண்வெளி ஆர்வலர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ‘ஏட்டா அக்குவாரிட்ஸ்’ விண்கல் மழை, எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி அதன் உச்சத்தை எட்டும் என நவீன தொழில்நுட்பங்களுக்கான ஆர்தர் சி. கிளார்க் நிறுவனம் அறிவித்துள்ளது. புகழ்பெற்ற ‘ஹேலி வால்நட்சத்திரம்’ விண்வெளியில் விட்டுச் சென்ற துகள்கள் வழியாக பூமி கடந்து செல்லும் போது இந்த விண்கல் மழை ஏற்படுகிறது. இந்தத் துகள்கள் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும்போது உராய்வினால் எரிந்து, வானில் பிரகாசமான ஒளிக்கோடுகளாகத் தோன்றும். இந்த விண்கல் […]

உலகம் செய்தி

வெள்ளை மாளிகையில் பாதுகாப்பான மண்டபம் இருந்திருந்தால் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருக்காது

  • April 26, 2026
  • 0 Comments

வெள்ளை மாளிகையில் தற்போது கட்டப்பட்டு வரும் மிக உயர்தர பாதுகாப்பு வசதிகள் கொண்ட மண்டபம் இருந்திருந்தால், சமீபத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்திருக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். Truth Social தளத்தில் வெளியிட்ட பதிவில், கடந்த 150 ஆண்டுகளாக இராணுவமும் பல ஜனாதிபதிகளும், வெள்ளை மாளிகை வளாகத்திற்குள் பெரிய மற்றும் பாதுகாப்பான மண்டபம் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வந்ததாக அவர் கூறியுள்ளார். மேலும், தற்போது கட்டப்பட்டு வரும் அந்த மண்டபத்தில் உயர் […]

இலங்கை செய்தி

யாழில் தந்தை செல்வாவின் சமாதியில் மலர் தூவி அஞ்சலி 

  • April 26, 2026
  • 0 Comments

தந்தை செல்வாவின் 49 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வ இன்று ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தின் மத்தியில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவின் தலைவர் ஆயர் சு.ஜெபநேசன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. முதலில் சதுக்கத்தில் உள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன், அவரின் சமாதியிலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழர் […]

இலங்கை செய்தி

போதைப்பொருள் கடத்தல் – காவியை பயன்படுத்தியமைக்கு மகாநாயக்கர்கள் எதிர்ப்பு

  • April 26, 2026
  • 0 Comments

புத்தர் பெருமானின் புனிதமான காவி உடையைத் தவறாகப் பயன்படுத்தி, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட போலியான பிக்குகள் குழுவினரின் சாசன விரோத மற்றும் சட்டவிரோதச் செயலை வன்மையாகக் கண்டிப்பதாக மூன்று நிக்காயக்களின் மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூட்டாக இணைந்து வௌியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் 22 தேரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் நேற்று (25) […]

உலகம் செய்தி

போர் நிறுத்த அமுலிலும் இஸ்ரேலும் ஹெஸ்பொல்லாவும் பரஸ்பர தாக்குதல்

  • April 26, 2026
  • 0 Comments

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இஸ்ரேலும் ஹெஸ்பொல்லா அமைப்பும் பரஸ்பர தாக்குதல் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேல், தற்காப்பு நடவடிக்கைகளின் பெயரில் தாம் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருவதாக கூறியுள்ளது. இதற்கு பதிலடியாக ஹெஸ்பொல்லா ராக்கெட் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹெஸ்பொல்லா தாக்குதல்கள் தொடர்ந்தால் லெபனானின் உட்பகுதி வரை தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார். இதனால், போர் நிறுத்தம் நடைமுறையில் பலனின்றி, நிலைமை மேலும் பதற்றமாகி வருகிறது.

இலங்கை செய்தி

சைபர் தாக்குதலுக்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் – ஹர்ஷ குற்றச்சாட்டு

  • April 25, 2026
  • 0 Comments

திறைசேரியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி நுணுக்கமான இணையவழி தாக்குதல் அல்ல என்றும், அதிகாரிகளின் அடிப்படை அலட்சியத்தினால் ஏற்பட்ட விளைவு என்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா விமர்சித்துள்ளார். பாரியளவிலான நிதிப் பரிமாற்றங்களின் போது பின்பற்றப்பட வேண்டிய முறையான நிதித் தணிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் இங்கு புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மில்லியன் கணக்கான ரூபாய்களைப் பரிமாற்றம் செய்வதற்கு முன்னதாக, அந்த வங்கிக் கணக்கை உறுதிப்படுத்துவதற்காக ஒரு சிறிய தொகையை அனுப்பிச் சரிபார்க்கும் வழக்கமான நடைமுறை […]

இலங்கை செய்தி

அடுத்த மாதம் முதல் அறிமுகமாகிறது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டைகள்

  • April 25, 2026
  • 0 Comments

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டைகளை பயன்பாட்டிற்கு விடுவிக்கும் நடவடிக்கை அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு, இலங்கை காப்புறுதி சங்கம் மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து வாகன உரிமையாளர்களுக்கும் இலகுவான, காகிதமற்ற மற்றும் வினைத்திறனான அனுபவத்தை உறுதி செய்யும் நோக்கில், வாகன காப்புறுதி […]

இலங்கை செய்தி

குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற உணவகம் – 10 இலட்சம் ரூபா அபராதம்

  • April 25, 2026
  • 0 Comments

குடிநீர் போத்தலை அதன் அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றத்திற்காக, ஹப்புத்தளையில் உள்ள உணவகம் ஒன்றுக்கு 10 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பைத் தொடர்ந்து, பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி இந்த அபராதம் விதிக்கப்பட்டது. ஹப்புத்தளை, வெலிமடை வீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான உணவகம் ஒன்றிலேயே இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இதன்போது, அங்கீகரிக்கப்பட்ட […]

error: Content is protected !!