" போர் முடிவடைந்து விட்டது. இனியுமொரு போர் ஏற்படும் என நான் நம்பவில்லை. இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் மீண்டும் மக்களிடமே கையளிக்கப்படும் போது, தென்னிலங்கையில் சிலர் 'இராணுவத்தினரின் காணிகளை மக்களுக்கு வழங்குவதாக' இனவாத நோக்கில் குரல் எழுப்புகின்றனர். இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

இலங்கையில் மீண்டும் போர் ஏற்படாது: ஐரோப்பிய தூதுக்குழுவிடம் ஆளுநர் சுட்டிக்காட்டு

  • July 21, 2026
  • 0 Comments

” போர் முடிவடைந்து விட்டது. இனியுமொரு போர் ஏற்படும் என நான் நம்பவில்லை. இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் மீண்டும் மக்களிடமே கையளிக்கப்படும் போது, தென்னிலங்கையில் சிலர் ‘இராணுவத்தினரின் காணிகளை மக்களுக்கு வழங்குவதாக’ இனவாத நோக்கில் குரல் எழுப்புகின்றனர். ஆனால், இராணுவம் விடுவிப்பது அந்த மக்களின் சொந்தக் காணிகளையே தவிர இராணுவத்தினரின் காணிகளை அல்ல. இந்த அரசாங்கம் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கான செயன்முறைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்கும்.” என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் […]

உலகம்

ஐரோப்பா நோக்கிய ஆபத்தான பயணங்கள் அதிகரிப்பு -144 அகதிகள் மாயமானதாக அறிவிப்பு

  • July 21, 2026
  • 0 Comments

மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவின் அட்லாண்டிக் தீவுகளுக்குச் செல்லும் பாதையில், மௌரித்தானியாவின் (Mauritania)  கடற்கரைக்கு அப்பால் தொடர்ச்சியாக கப்பல்கள் அல்லது படகுகள் விபத்துக்குள்ளாகுவது அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறைந்தது 144 அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் இறந்ததாகவோ அல்லது காணாமல் போனதாகவோ அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அகதிகள் முகமை (UNHCR), ஜூலை 14 முதல் 18 வரையான காலப்பகுதியில் இந்த விபத்துகள் இடம்பெற்றதாக சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த காலப்பகுதியில் மூன்று மீட்பு நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டதாகவும், இதன் ஊடாக 387 பேர் […]

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்தும் ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கை செய்தி

யாழ். மயிலிட்டி மீன்பிடி துறைமுக அபிவிருத்தித் திட்டம் குறித்து ஆராய்வு

  • July 21, 2026
  • 0 Comments

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்தும் ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் கீழ் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் (DFAR), தேசிய நீர்வாழ் உயிரின […]

எல்லை தாண்டி நெடுந்தீவுக் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழையும் தமிழக மீனவர்களின் செயற்பாடுகளைத் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இலங்கை செய்தி

மோதல் வெடிப்பதற்குள் முடிவு கட்டுங்கள்: யாழ்.மீனவர்களிடமிருந்து முதல்வர் விஜய்க்கு பறந்த செய்தி

  • July 21, 2026
  • 0 Comments

எல்லை தாண்டி நெடுந்தீவுக் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழையும் தமிழக மீனவர்களின் செயற்பாடுகளைத் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அந்தச் சங்கத்தின் பிரதிநிதி செபமாலை அன்ரனி செபராசா மேலும் குறிப்பிடுகையில், “சில தினங்களுக்கு முன்னர் நெடுந்தீவுக் கடற்பகுதிக்குள், குறிப்பாகப் புங்குடுதீவு கடற்பகுதிக்குள் அடாவடியாக நுழைந்த தமிழக மீனவர்கள், எமது […]

உலகம்

பஹ்ரைன், ஜோர்டான் மற்றும் குவைத் மீது ஈரான் புதிய தாக்குதல்

  • July 21, 2026
  • 0 Comments

பஹ்ரைன், ஜோர்டான் மற்றும் குவைத் மீது ஈரான் புதிய தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. தெற்கு ஈரானைக் குறிவைத்து அமெரிக்கா நடத்திய தொடர் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஈரான் கூறுகிறது. மேலும், தாக்கப்பட்ட கப்பல்களில் இரண்டு, ஹோர்முஸ் ஜலசந்தியில் தீப்பிடித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியா மீது கடற்படை முற்றுகையை விதித்ததால், வளைகுடாப் பகுதியில் ஒரு புதிய போர்முனை உருவாகியுள்ளது.

இலங்கை

வல்வெட்டித்துறையில் குட்டிமணி , தங்கதுரைக்கு சிலை – நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ள பொலிஸார்

  • July 21, 2026
  • 0 Comments

வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸாரால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை ஏற்பாட்டு குழுவை சேர்ந்த வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உறுப்பினர் க. சதீஸ் மன்றில் முன்னிலையான நிலையில் , அவரை பிணையில் செல்ல அனுமதித்த மன்று , வழக்கினை எதிர்வரும் 22ஆம் திகதிக்கு திகதியிட்டுள்ளது. தமிழ் ஈழ விடுதலை […]

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினரிடம் சர்வதேச விசாரணைக்கு வழிவகை செய்யக் கோரி, நாளை புதன்கிழமை காலை கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கை செய்தி

சர்வதேச விசாரணைகோரி செம்மணியில் நாளை போராட்டம்

  • July 21, 2026
  • 0 Comments

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினரிடம் சர்வதேச விசாரணைக்கு வழிவகை செய்யக் கோரி, நாளை புதன்கிழமை காலை கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் செம்மணியில் இடம்பெறவுள்ள இந்தப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 454 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் நாளுக்கு நாள் இதனுடன் தொடர்புடைய உண்மைகள் வெளிவந்த வண்ணமுள்ளன. எனவே, இந்தப் […]

ஐரோப்பா

உளவு குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடியாக இத்தாலிய தூதர்களை நாடு கடத்தி ரஷ்யா!

  • July 21, 2026
  • 0 Comments

உளவு குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னதாக இரண்டு ரஷ்ய தூதர்களை வெளியேற்றிய இத்தாலிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ரஷ்யா இரண்டு இத்தாலிய தூதர்களை விரும்பத்தகாத நபர்களாக அறிவித்து அவர்களை வெளியேற்றியுள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி தூதர்களை வெளியேற்றுவதால், அவற்றுக்கிடையேயான இருதரப்பு பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜகாரோவா, இத்தாலிய பாதுகாப்புத் தூதர் ஒருவரும் அவரது உதவியாளரும் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவதாகத் தெரிவித்தார். பாதுகாப்புத் தூதர் டேவிட் டி’அப்ரில் மற்றும் உதவி […]

ஐரோப்பா கருத்து & பகுப்பாய்வு

பிரித்தானியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் வெளிப்படுத்திய ஆபத்தான ரகசியம்

  • July 21, 2026
  • 0 Comments

போரின் ஆரம்ப கட்டங்களில் உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்குமாறு தான் விடுத்த நேரடி தனிப்பட்ட கோரிக்கையை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கம் நிராகரித்ததாக பிரித்தானியாவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் பென் வாலஸ் வெளிப்படுத்தினார். மொஸ்கோவைக் கோபப்படுத்துவதையும் அதன் நலன்களுக்கு ஆபத்தை விளைவிப்பதையும் தவிர்ப்பதற்காகவே இது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபாக்லாந்து போருக்கு பிரிட்டனின் நிராகரிப்பும் எதிர்வினையும் ஃபாக்லாந்து தீவுகள் மீதான அர்ஜென்டினாவின் இறையாண்மையை இஸ்ரேல் அங்கீகரிக்க வேண்டும் என்று கல்வியாளர் யூஜின் கான்ட்ரோவிச் விடுத்த முன்மொழிவுக்குப் பதிலளிக்கும் […]

ஐரோப்பா

இங்கிலாந்து பல்பொருள் அங்காடிகளில் திருட்டை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள சிறப்பு நடவடிக்கை

  • July 21, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் உள்ள பெரிய பல்பொருள் அங்காடிகள், திருடும் நபர்களையும் வன்முறையாளர்களையும் தடுப்பதற்காக, முகத்தை அடையாளம் காணும் கேமராக்களை நிறுவ முடிவு செய்துள்ளன. கடந்த காலத்தில் பலமுறை திருட்டில் ஈடுபட்ட அல்லது ஊழியர்களை அச்சுறுத்திய நபர்களை இந்தக் கேமராக்கள் அடையாளம் காட்டும். இந்த அமைப்பின் கீழ், ஒவ்வொரு பல்பொருள் அங்காடியும் தனக்கென ஒரு கண்காணிப்புப் பட்டியலை உருவாக்கும். கண்காணிப்புப் பட்டியலில் உள்ள ஒருவர் கடைக்குள் நுழைந்தவுடன், பாதுகாப்பு ஊழியர்களுக்கு உடனடியாகத் தெரிவிக்கப்படும். அதன் பிறகு, அவர்கள் உள்ளே நுழைவது […]