திருகோணமலையில் காட்டுத்தீ பரவல்
திருகோணமலை மொரவெவ நீதிமன்ற வளாகத்துக்கு பின்னால் உள்ள காட்டுப் பகுதிக்குள் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
இன்று (02) காலை இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளதாகவும் இராணுவத்தினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தீ பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
ஆனாலும் குறித்த பகுதிக்குள் மக்களின் நடமாட்டம் குறைவாக காணப்படுகின்ற போதிலும் தீ பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் தொடரில் விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




