இங்கிலாந்து பல்பொருள் அங்காடிகளில் திருட்டை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள சிறப்பு நடவடிக்கை
இங்கிலாந்தில் உள்ள பெரிய பல்பொருள் அங்காடிகள், திருடும் நபர்களையும் வன்முறையாளர்களையும் தடுப்பதற்காக, முகத்தை அடையாளம் காணும் கேமராக்களை நிறுவ முடிவு செய்துள்ளன.
கடந்த காலத்தில் பலமுறை திருட்டில் ஈடுபட்ட அல்லது ஊழியர்களை அச்சுறுத்திய நபர்களை இந்தக் கேமராக்கள் அடையாளம் காட்டும்.
இந்த அமைப்பின் கீழ், ஒவ்வொரு பல்பொருள் அங்காடியும் தனக்கென ஒரு கண்காணிப்புப் பட்டியலை உருவாக்கும்.
கண்காணிப்புப் பட்டியலில் உள்ள ஒருவர் கடைக்குள் நுழைந்தவுடன், பாதுகாப்பு ஊழியர்களுக்கு உடனடியாகத் தெரிவிக்கப்படும்.
அதன் பிறகு, அவர்கள் உள்ளே நுழைவது தடுக்கப்படலாம் அல்லது தேவைப்பட்டால் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்படலாம்.
இந்தத் தொழில்நுட்பத்தை நியூசிலாந்து நிறுவனமான அரோர் வழங்கி வருகிறது.
அதே வேளையில் பிரித்தானியாவின் பல முக்கிய சில்லறை விற்பனைச் சங்கிலிகள் ஏற்கனவே இந்த அமைப்பைப் பயன்படுத்தி வருகின்றன.
நிறுவனத்தின் கூற்றுப்படி, குற்றங்களைத் தடுப்பதும், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுமே அதன் ஒரே நோக்கமாகும்.
மறுபுறம், முகத்தை அடையாளம் காணும் கேமராக்களின் பயன்பாடு குடிமக்களின் தனியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் குடிசார் உரிமைகள் அமைப்புகள் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





