“மேகே​தாட்டு அணை கர்​நாடகா​வுக்​காக அல்ல, தமி​ழ​கம் மற்​றும் புதுச்​சேரி​யின் பயன்​பாட்​டுக்​காகவே கட்​டப்​பட​வுள்​ளது” என கர்​நாடக முதல்​வர் டி.கே சிவக்​கு​மார் தெரி​வித்​துள்​ளார். இந்தியா செய்தி

தமிழகத்துக்காகவே மேகேதாட்டு அணை கட்டுகிறோம்: கர்​நாடக முதல்​வர்

  • August 21, 2026
  • 0 Comments

“மேகே​தாட்டு அணை கர்​நாடகா​வுக்​காக அல்ல, தமி​ழ​கம் மற்​றும் புதுச்​சேரி​யின் பயன்​பாட்​டுக்​காகவே கட்​டப்​பட​வுள்​ளது” என கர்​நாடக முதல்​வர் டி.கே சிவக்​கு​மார் தெரி​வித்​துள்​ளார். கோவளத்​தில் நேற்று நடை​பெற்ற தென்​மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்​கேற்று உரையாற்று கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ” இந்​தி​யா​வின் மொத்த உள்​நாட்டு உற்​பத்​தி​யில் 33 சதவீதத்​துக்​கும் அதி​க​மாக தென்மாநிலங்கள் பங்​களிக்​கின்​றன. இதில் கர்​நாட​கா, நாட்​டின் மென்​பொருள் ஏற்​றும​தி​யில் 42 சதவீதத்​தை​யும், விமானத் துறை​யில் 60 சதவீதத்​தை​யும் அளிக்​கிறது. இருப்​பினும், 15-வது நிதி​யமைப்​பில் கர்​நாடகா​வுக்​கான நிதிப் பகிர்வு […]

உலகம்

இம்ரான் கான் சிறையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றம்

  • August 21, 2026
  • 0 Comments

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மருத்துவ சிகிச்சைக்காக அடியாலா சிறையிலிருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிஃபா சர்வதேச மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவமனையைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன, மேலும் இஸ்லாமாபாத் இன்ஸ்பெக்டர் ஜெனரல் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகளும் வைத்தியசாலையில் குழுமியுள்ளதாக கூறப்படுகிறது. டாக்டர் ஃபைசல் மற்றும் டாக்டர் உஸ்மா ஆகியோரும் அடியாலா சிறைக்கு வந்தடைந்தனர். மருத்துவமனைக்கு கான் மாற்றப்படும்போது, ​​இந்த இரண்டு மருத்துவர்களும் அவருடன் செல்ல வேண்டும் என்று பாகிஸ்தான் உச்ச […]

இலங்கை ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகையைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் விண்ணப்பிக்க வேண்டும் இலங்கை செய்தி

GSP+ வரிச்சலுகையை தக்கவைக்க 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தடையாக அமையுமா?

  • August 21, 2026
  • 0 Comments

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்திலுள்ள 13 நீதியரசர்களையும் உள்ளடக்கிய முழுமையான நீதியரசர்கள் அமர்வு (Full Bench) முன்னிலையிலேயே விசாரணைகள் இடம்பெற வேண்டும் என சட்டத்துறைப் பேராசிரியரும் முன்னாள் நீதி அமைச்சருமான ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்: “அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதிலிருந்து முதல் 24 மணிநேரத்திற்குள், அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் 38 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. […]

ஆஸ்திரேலியா , சிட்னி விமான நிலையத்தில் தரைப்பகுதியில் (Tarmac) விமானங்களின் போக்குவரத்தில் ஏற்பட்ட மேலும் ஒரு குழப்பம் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

சிட்னி விமான நிலைய பாதுகாப்பு கேள்விக்குறி? 3 வாரங்களுக்குள் 4ஆவது அசம்பாவிதம்

  • August 21, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா , சிட்னி விமான நிலையத்தில் தரைப்பகுதியில் (Tarmac) விமானங்களின் போக்குவரத்தில் ஏற்பட்ட மேலும் ஒரு குழப்பம் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த மூன்று வாரங்களுக்குள் இடம்பெறும் நான்காவது சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு மேல், கோல்ட் கோஸ்ட்டிலிருந்து வந்த குவாண்டாஸ் (Qantas QF589) விமானம் ‘லிமா’ டாக்ஸிவே வழியே சென்று கொண்டிருந்தது. அதே நேரத்தில், மெல்போர்ன் செல்லவிருந்த மற்றொரு குவாண்டாஸ் (QF405) விமானத்திற்கும் அதே டாக்ஸிவேயில் நுழைய விமான […]

உலகம்

பொருளாதார பயங்கரவாதத்தை மேற்கொள்ளும் அமெரிக்கா – ஈரான் கண்டனம்

  • August 21, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிராக “வரலாற்றிலேயே மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை” அமெரிக்கா தயாரித்து வருவதாக அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் Scott Bessent  தெரிவித்துள்ளார். பொருளாதார நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது, ஈரானுக்கு எதிரான மேலும் பெரிய இராணுவ நடவடிக்கைகளின் தேவையைக் குறைக்கக்கூடும் என்று பெசென்ட் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் “பொருளாதாரப் போர்” தொடுப்பதாக அச்சுறுத்தி, தெஹ்ரானுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத பொருளாதாரத் தனிமைப்படுத்தலை உறுதியளித்ததைத் தொடர்ந்து அவரின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன. அமெரிக்காவின் அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து எண்ணெய் […]

ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் (AFP), ரஷ்ய -ஆஸ்திரேலிய நபர் ஒருவர் மீது வெளிநாட்டுத் தலையீடு (Foreign interference) குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் ரஷ்ய உளவாளி கைது: விசாரணை தீவிரம்

  • August 21, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் (AFP), ரஷ்ய -ஆஸ்திரேலிய நபர் ஒருவர் மீது வெளிநாட்டுத் தலையீடு (Foreign interference) குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளனர். 27 வயதான அந்நபர் நேற்று பிரிஸ்பேனின் மேல்பகுதியில் உள்ள சம்னர் (Sumner) பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். எனினும், அவர் விக்டோரியா மாநிலத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். திட்டமிட்டு வெளிநாட்டுத் தலையீட்டில் ஈடுபட முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அவர் இன்று பிரிஸ்பேன் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இது தொடர்பான மேலதிக […]

பளையில் புலிகளின் முகாம் இல்லை: விசாரணையில் உறுதி என்கிறார் அமைச்சர் இலங்கை செய்தி

பளை காட்டில் புலிகளின் பயிற்சி முகாம்: வதந்தி பரப்பிய நபரின் மறுமுகம் அம்பலம்

  • August 21, 2026
  • 0 Comments

கிளிநொச்சி- பளை வனப்பகுதியில் புலிகள் அமைப்பின் பயிற்சி முகாமோ அல்லது குண்டு தயாரிப்பு நிலையமோ இயங்கவில்லை என்பது பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் விசாரணைகளில் உறுதியாகியுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே திட்டமிட்ட அடிப்படையில் இந்த வதந்தி பரப்பப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கவோ அல்லது இனவாதம், மதவாதத்தைப் பரப்புவதற்கோ அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என உறுதியளித்த அமைச்சர், நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு, ” […]

ஈரான்மீது வரலாற்றிலேயே மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதிக்கவுள்ளதாக அந்நாட்டின் திறைசேரிச் செயலாளர் (Treasury Chief) ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) தெரிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரான்மீது பொருளாதாரத் தடை எச்சரிக்கை: கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

  • August 21, 2026
  • 0 Comments

ஈரான்மீது வரலாற்றிலேயே மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதிக்கவுள்ளதாக அந்நாட்டின் திறைசேரிச் செயலாளர் (Treasury Chief) ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) தெரிவித்துள்ளார். இந் நடவடிக்கை புதிய பாரிய இராணுவ நடவடிக்கைகளின் தேவையைக் குறைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஈரானுக்கு “எந்தவொரு வழியிலாவது உயிர்நாடியாகச் செயல்படும்” நாடுகளுக்கு எதிராகப் பொருளாதார நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், “பொருளாதாரப் போர்” முன்னெடுக்கப்படும் என்றும் அமெரிக்க அஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, வியாழக்கிழமை ஸ்காட் பெசென்ட் இந்த […]

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை (22) சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கை செய்தி

நாளை யாழ். செல்கிறார் பிரதமர்: நல்லூர் கோவிலில் வழிபாடு

  • August 21, 2026
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை (22) சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். பல்கலைக்கழகத்தின் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு உள்ளிட்ட பல நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கிலேயே அவர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தருகின்றார். இந்நிகழ்வு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் (கச்சேரி) நடைபெறவுள்ளது. அதேவேளை, நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த மஹோற்சவம் இடம்பெற்று வரும் நிலையில், பிரதமர் ஆலயத்திற்கு வருகை தந்து வழிபாடு செய்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

உலகம்

பெருவின் ஆண்டிஸ் மலைத்தொடரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

  • August 21, 2026
  • 0 Comments

பெருவின் தெற்கு ஆண்டிஸ் மலைத்தொடரில் நேற்று 6.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதவிவாகியுள்ளது. அயாகுச்சோ Ayacucho  பிராந்தியத்தின் பரினகோச்சாஸ்  Parinacochas  மாகாணத்தில் உள்ள உபஹுவாச்சோவிலிருந்து Upahuacho 38 கிலோமீட்டர் (24 மைல்கள்) வடமேற்கே, 66.7 கிலோமீட்டர் (41 மைல்கள்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி மதியம் சுமார் 1 மணியளவில் (18:00 GMT) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், இகா மற்றும் அரேகிபா உட்பட தெற்கு பெருவின் பல பகுதிகளில் உணரப்பட்டுள்ளது. […]