பெருவின் ஆண்டிஸ் மலைத்தொடரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பெருவின் தெற்கு ஆண்டிஸ் மலைத்தொடரில் நேற்று 6.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதவிவாகியுள்ளது.
அயாகுச்சோ Ayacucho பிராந்தியத்தின் பரினகோச்சாஸ் Parinacochas மாகாணத்தில் உள்ள உபஹுவாச்சோவிலிருந்து Upahuacho 38 கிலோமீட்டர் (24 மைல்கள்) வடமேற்கே, 66.7 கிலோமீட்டர் (41 மைல்கள்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி மதியம் சுமார் 1 மணியளவில் (18:00 GMT) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், இகா மற்றும் அரேகிபா உட்பட தெற்கு பெருவின் பல பகுதிகளில் உணரப்பட்டுள்ளது.
அயாகுச்சோவிலிருந்து எடுக்கப்பட்ட காணொளிகள், இந்த சக்திவாய்ந்த நில அதிர்வின் பின்விளைவுகளை வெளிப்படுத்தியுள்ளன.
USGS ஆரம்பத்தில் இந்த நிலநடுக்கத்தை 6.7 ரிக்டர் அளவில், 14.626°S, 73.616°W என்ற அட்சரேகை மற்றும் தீர்க்கரேகையுடன் பதிவு செய்தது. சேதம் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.




