Anthony Albanese signed the Ocean of Peace treaty with Fiji's President Ratu Naiqama Tawakecolati Lalabalavu and Sitiveni Rabuka. ஆஸ்திரேலியா உலகம் செய்தி முக்கிய செய்திகள்

சீனாவுக்கு ‘செக்’ – பிஜி நாட்டுடன் ஆஸ்திரேலியா பாதுகாப்பு ஒப்பந்தம்

  • July 6, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா மற்றும் பிஜி (Fiji) ஆகிய நாடுகளுக்கிடையில் இடையே புதிய பாதுகாப்பு கூட்டணி (Defence alliance) ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி உடன்படிக்கைக்கு மேலதிகமாக இந்த புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது பசுபிக் பிராந்தியத்தின் மூலோபாய நிலப்பரப்பில் (Strategic landscape) முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. பிஜியின் தலைநகரான சுவாவில் (Suva) நடைபெற்ற இதற்குரிய நிகழ்வில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் (Anthony Albanese) மற்றும் பிஜி பிரதமர் […]

உலகம்

வான்வெளியை முழுமையாக மூடியது ஈரான்

  • July 6, 2026
  • 0 Comments

ஈரானின் வான்வெளி இன்று முழுமையாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த உச்சத் தலைவர் அலி கமேனியின் இறுதி சடங்கின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  தலைநகரில் பொது நிகழ்ச்சிகள் நடைபெறுவதால், தெஹ்ரானின் மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம் மற்றும் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்தில் வழக்கமான விமானப் பயணங்கள் இடைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மெஹ்ராபாத் விமான நிலையம் நாளைய தினம் இயல்பு […]

ஐரோப்பா செய்தி

உக்ரைன் மீது ஏவுகணை மழை – பலர் பலி

  • July 6, 2026
  • 0 Comments

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்ய இன்று அதிகாலை பாரிய ஏவுகணை தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. இதில் 07 பேர் கொல்லப்பட்டதாகவும், பல கட்டிடங்கள் சேதமாக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நகரத்தின் இராணுவ நிர்வாகத் தலைவர் டைமூர் தகாச்சென்கோ (Tymur ‌Tkachenko) டெலிகிராமில்  இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார். குறித்த பகுதியில் மீட்பு பணியாளர்கள் பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக பொடில்ஸ்கி மாவட்டத்தில் பாரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு நகரம் முழுவதும் 24 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். செய்தி

சிறைச்சாலை மோதல்: அறிக்கை கோருகிறது நீதி அமைச்சு

  • July 6, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணை அறிக்கையொன்றை இன்றைய தினமே தனக்கு வழங்குமாறு நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, சிறைச்சாலை திணைக்களத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் நேற்று ஏற்பட்ட மோதலில் இருவர் பலியாகியுள்ளனர். 38 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதிகளில் 10 பேருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது என நீர்கொழும்பு வைத்தியசாலை தரவுகள் தெரிவிக்கின்றன. படுகாயம் அடைந்த இருவர் கொழும்பு […]

ஐரோப்பா

தெற்கு பிரான்ஸில் வேகமாக பரவும் காட்டுத்தீ – 10000 பேர் வெளியேற்றம்

  • July 6, 2026
  • 0 Comments

தெற்கு பிரான்சில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருவதால் அப்பகுதியில் இருந்து 10000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த காட்டுத்தீயினால் 1,500 ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பு நாசமாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம் டூர் டி (Tour de France) பிரான்ஸ் பந்தயத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை அதிகாரிகள் மதிப்பிட்டு வரும் நிலையில், தீயணைப்பு வீரர்கள் தரை மற்றும் வான்வழியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள், தமிழகத்தின் பிரபல தமிழ்த் தேசிய அமைப்பான 'மே 17 இயக்கத்தின்' ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் அந்த இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடினர். செய்தி விளையாட்டு

மே 17 இயக்கத்துடனும் தமிழ்த் தேசியப் பேரவையினர் சென்னையில் பேச்சு

  • July 6, 2026
  • 0 Comments

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள், தமிழகத்தின் பிரபல தமிழ்த் தேசிய அமைப்பான ‘மே 17 இயக்கத்தின்’ ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் அந்த இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடினர். இந்த விசேட சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை தமிழகத் தலைநகர் சென்னையில் இடம்பெற்றது. இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சமகால அரசியல் நெருக்கடிகள், சர்வதேச மட்டத்திலான மனித உரிமைப் போராட்டங்கள் மற்றும் தாயக – தமிழகத் தமிழர்களுக்கிடையிலான […]

உலகம்

எல் நினோ தாக்கம் : இலங்கை போன்ற பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள நாடுகளுக்கு ஆபத்து

  • July 6, 2026
  • 0 Comments

உலகம் முழுவதும் வெப்பமான வானிலையை ஏற்படுத்தும் எல் நினோ நிகழ்வு, ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் தீவிரமடைய வாய்ப்புள்ளது என்று உலக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. எல் நினோ வானிலை நிகழ்வுகள் பலவீனமான, மிதமான, வலுவான மற்றும் மிகவும் வலுவானது  என நான்கு நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த முறை எல் நினோ நிகழ்வு மூன்றாவது உச்சநிலையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் அசாதாரணமாக உயர்ந்த கடல் மேற்பரப்பு வெப்பநிலையின் இயற்கையான […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

பசுபிக் பொலிஸ் கூட்டணியை உருவாக்குகிறது ஆஸ்திரேலியா

  • July 6, 2026
  • 0 Comments

பிராந்திய பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் புதிய பசிபிக் பொலிஸ் கூட்டமைப்பு (Pacific policing bloc) வடிவமைக்கப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியா முதன்முறையாக நியூயார்க்கில் நடத்தும் ஐ. நா. பொலிஸ் தலைவர்கள் மாநாட்டில் (UNCOPS) , ஆஸ்திரேலியா பெரடல் பொலிஸ் ஆணையாளர் கிறிஸ்ஸி பாரெட் (Krissy Barrett) இந்த திட்டம் குறித்து தனது கருத்துக்களை முன்வைக்க உள்ளார். அமெரிக்க FBI இயக்குநர் காஷ் படேல் மற்றும் நியூயார்க் பொலிஸ் (NYPD) தலைவர் ஜெசிகா டிஷ் ஆகியோரையும் சந்திக்கவுள்ள ஆஸ்திரேலியா பெரடல் […]

உலகம்

ஒபெக் கூட்டமைப்பின் முக்கிய தீர்மானம் – கச்சா எண்ணெய் விலையில் சரிவு

  • July 6, 2026
  • 0 Comments

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலைகள் மேலும் சரிந்துள்ளன. ஆகஸ்ட் மாதத்திற்கான தனது உற்பத்தி இலக்குகளை ஒபெக்+ (OPEC+) கூட்டமைப்பு அதிகரித்துள்ளதால், எண்ணெய் விலை சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கமைய  ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 71.78 அமெரிக்க டொலராக சரிந்துள்ளது, அதே நேரத்தில் ஒரு பேரல் அமெரிக்க WTI கச்சா எண்ணெய் 68.48 அமெரிக்க டொலராகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.” ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இயல்பான எண்ணெய் ஏற்றுமதி மீண்டும் தொடங்கியுள்ளதால், உலகளாவிய விநியோகம் அதிகரித்துள்ளதாகவும் […]

பிரேசில் தேசத்திற்காக மொத்தம் 129 போட்டிகளில் விளையாடி, 80 கோல்களை அடித்துள்ள நெய்மர், அந்த நாட்டின் வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் (All-time leading scorer) என்ற பெருமையுடன் விடைபெறுகிறார். செய்தி விளையாட்டு

16 ஆண்டுகால பயணம் நிறைவு: கண்ணீருடன் விடைபெற்றார் நெய்மர்

  • July 6, 2026
  • 0 Comments

நார்வே அணியிடம் பிரேசில் அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறியதைத் தொடர்ந்து, பிரேசில் கால்பந்து வரலாற்றின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவரான நெய்மர் ஜூனியர் (Neymar Jr.) சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் அவரது 16 ஆண்டுகால புகழ்பெற்ற சர்வதேச கால்பந்து பயணம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. பிரேசில் தேசத்திற்காக மொத்தம் 129 போட்டிகளில் விளையாடி, 80 கோல்களை அடித்துள்ள நெய்மர், அந்த நாட்டின் வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் (All-time leading […]