நோர்வேயின் அரச குடும்ப வாரிசான ஹோய்பி வீட்டுக் காவலில் இருந்து வெளியேற அனுமதி
நோர்வேயின் ராணி மெட்டே-மாரிட்டின் மூத்த மகனான மரியஸ் போர்க் ஹோய்பி Borg Høiby, வீட்டுக் காவலில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மன்னர் ஹரால்டின் இறுதிச் சடங்கிற்கு முந்தைய நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக அவருக்கு இந்த தற்காலிக விடுதலை வழங்கப்பட்டுள்ளது.
ஓஸ்லோவில் உள்ள அரச அரண்மனையில், இருந்து மன்னர் ஹரால்டின் உடலம் அரண்மை தேவாலயத்திற்கு இன்று கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.
இதற்காக அரச குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுக்கூடினர். இந்நிலையில் அவர்களுடன் ஒன்றிணைய மரியஸ் போர்க் ஹோய்பிக்கு வீட்டுக் காவலில் இருந்து வெளியேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மறைந்த மன்னர் ஹரால்டின் இறுதிச் சடங்கு, செப்டம்பர் 9 அன்று நடைபெறவுள்ளது. அதுவரை அவருடைய உடலம் அரண்மனை தேவாலயத்தில் வைக்கப்பட்டிருக்கும்.
அங்கு பொதுமக்கள் மறைந்த மன்னருக்கு அஞ்சலி செலுத்தலாம்.




