தண்ணீரென நினைத்து ரயாசனத்தை பருகிய சிறுமி பலி: இலங்கையில் சோகம்
கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வவுனியாவில் இருந்து சென்ற 3 வயது சிறுமி, தண்ணீர் என நினைத்து அவ்வீட்டில் இருந்த ‘ஹைட்ரஜன் பெரோக்சைட்’ (Hydrogen Peroxide) என்ற இரசாயனத்தை பருகியதால் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (24) இடம்பெற்றுள்ளது. வவுனியா செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த மூன்று வயது சிறுமியே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சிறுமியின் தாய், தந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வருகை தந்திருந்தனர். […]













